Friday, February 2, 2024

34


ஏதோ
ஏழெட்டு நாட்களுக்கு முன்பே
விடிந்தது போல்
நீளமாய் நகர்கிறது எனது இன்று

ஒரு மணி போராட்டத்தில்
ஒரு நொடி நகர்கிறது

அழுத்த அழுத்த
கண்களை உடைத்துவிட வேண்டாமென
மரமல்லி மரம் போகிறேன்

நாலைந்து பூக்களைத் தலை சிரிந்து
ஆறுதலிக்கும் அந்த மரத்தாயை
அண்ணாந்து பார்க்கும் அந்தப் புள்ளியில்

காம்பைப் பிரிகிறது ஒரு பூ

காம்புகளைப்
பிரியும்தான் பூக்கள்

ஆனாலும்

அந்தப் பூவை
அது காம்பைப் பிரியும்போது
பார்த்திருக்க வேண்டாம்


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...