Sunday, October 7, 2018

கலைஞர் சமாதிக்கு போகும் திமுகவினருக்கு....

தம்பி கரு.பழனியப்பனின் சமீபத்திய உரை ஒன்றை யூட்யூபில் கேட்கிற வாய்ப்பு கிடைத்தது
கலைஞருக்கான நினைவேந்தல் நிகழ்வு அது
அவரது உரையை இப்படி முடித்திருந்தார்,
கலைஞர் சமாதிக்கு போகும் திமுகவினர் தமக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துப்போய் அங்கு வைத்துவிட்டு வந்துவிடுமாறு கூறினார்.
போகும் ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த புத்தகத்தை கலைஞரது சமாதியில் வைத்துவிட்டு அங்கு இருக்கும் புத்தகங்களில் தமக்குத் தேவையான புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு திரும்புமாறும் கூறினார்
பழநியப்பனின் கோரிக்கை நடைமுறைப்படுத்தப் படுமானால் அது வெறிகொண்ட வாசகராக வாழ்ந்து மறைந்த அந்த மனிதருக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்
இரண்டு விஷயங்கள் இங்கு சொல்லப்படாத நிபந்தனைகள்
1) தாம் படித்ததில் தமக்குப் பிடித்ததை மட்டுமே கலைஞரது சமாதியில் வைக்க வேண்டும்
2) தமக்குப் பிடித்த புத்தகத்தை கலைஞரது சமாதியில் இருந்து எடுத்துவரும் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும்
இதை நேர்மையாக நடைமுறைபடுத்தினால் கலைஞர் சமாதிக்கு போய் வந்த ஒருவர் அதன்பொருட்டு இரண்டு நூல்களை வாசித்திருப்பார்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அலுவலகங்களில் நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்த நிலையில் கரு.பழனியப்பனின் இந்த கோரிக்கை அவசியமாக நடைமுறைப்படுத்தப் படுவது நல்ல விளைவுகளைத் தரும்
இதை கலைஞர் சமாதி என்பதைக் கடந்து பொது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயிலடிகள், சந்தைகள் போன்ற இடங்களிலும் விரிவுபடுத்தலாம்
இதன்மூலம் ஒரு மனிதன் தான் வாசித்து முடித்த புத்தகத்தோடு சென்று நூல்களுக்கென்று ஒடுக்கப்பட்டுள்ள இடத்தில் அதை வைத்துவிட்டு தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு போவதன் மூலம் ஒரு நூலை வாங்கியதன்மூலம் இரண்டாவது நூலையும் வாசித்து விடுவார், அடுத்தடுத்து இந்த இடங்களுக்கு போகும்போது அவர் ஒரே புத்தகத்தை வாங்கியதன் மூலம் ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கான புத்தகங்களை வாசித்துவிடக்கூடிய வாய்ப்பை பெற்றுவிடுவார்
ஒருவர் திருச்சியில் இருந்து மதுரை போகிறார் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் இருந்து தான் வாசித்து முடித்த புத்தகம் ஒன்றை கையோடு எடுத்து வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். பேருந்து நிலையத்தில் புத்தகப் பரிமாற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.
அவர் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த புத்தகத்தை வைத்துவிட்டு 48 அல்லது 64 பக்க அளவிலான ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மதுரை பேருந்தில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினால் மதுரைக்கான இரண்டரைமணிநேரப் பயணத்தில் அதை வாசித்து விடுவார்.
அதேபோல மதுரையிலிருந்து திருச்சி வருவதற்குள் இன்னொமொரு புத்தகத்தை வாசித்துவிட முடியும் அவரால்
ஆக, ஒருவர் மதுரை சென்று திரும்புகிற பயணநேரத்தில் இரண்டு புத்தகங்களை வாசித்துவிட முடியும்
இது நினைக்கிற மாதிரி அப்படி ஒன்றும் எளிதான காரியம் இல்லை. நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இதி உள்ளன என்பது பழனியப்பனுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.
ஆனால் இது தீர்க்கவே முடியாத சிக்கல் இல்லை
1) வைக்கப்படும் நூல்களின் பாதுகாப்பு
2) தாறுமாறாக நூல்களை யாரும் எடுத்துக் கொண்டு சென்றுவிடாமல் மேலாண்மை செய்வது
3) தரக்குறைவான, ஆபாசமான நூல்கள் அந்த இடங்களுக்கு வரவிடாமல் கண்கானிப்பது
போன்ற காரியங்கள் சிரமமானவைதான். ஆனால் இயலாதவை அல்ல. தொடங்கி ஒரு வடிவம் பெறுகிறவரையில் இது சிரமம்தான். ஆனால் ஒரு கட்டம்வரை நகர்த்திவிட்டோம் என்றால் பிறகு இது ஒரு ஜீவநதிபோல தானாய் நகர ஆரம்பித்துவிடும்.
எந்தஒரு சமூகநலத் திட்டத்தைவிடவும் அதிக பலனைத் தருகிற திட்டமாகவும் இது இருக்கும்.
இடதுசாரி கட்சி அலுவலகங்களில் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் என்பது என் கோரிக்கை.
இதற்கான திட்டமிடுதலிலோ செயலாக்குவதிலோ நமது பங்களிப்பு தேவைப்படும் பட்சத்தில் தயாராகவே உள்ளோம்
#சாமங்கவிந்து 2 நிமிடங்கள்
07.10.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...