Monday, October 1, 2018

H.ராஜவை கோட்சே என்பதன் மூலம்

இன்றும் மூன்றுதான் உரையாட
1) நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில ”இந்திய ஜனநாயக வாலிபர் சங்க” மாநில மாநாடு
2) தோழர் திருமுருகன் உடல்நிலையும் அவரது விடுதலைக்கான குரல் கோரலும்
3) தந்தை அம்பேதகர் மற்றும் தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுதலும் திரு ஸ்டாலின் அவர்களுக்கான நமது கோரிக்கையும்

                                                                         1
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேற்கு வங்க மாநில மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்துரைத்த திரு பிரகாஷ்ராஜ் அவர்களின் உரை எப்போதும்போல் கவனத்திற்கு உரியதாயிருக்கிறது.
”எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை கேட்கிறேன்”
“சாதியால் மதத்தால் மக்களைப் பிரிக்கிறீர்களே, நியாயமா? என்று கேட்கிறேன்”
”நீ என்ன இடதுசாரியா? என்று கேட்கிறீர்கள்”
“ஆமாம், ஆமாம்தான். நான் ஒரு இடதுசாரிதான்” என்று பிரகாஷ்ராஜ் கூறியபோது மாநாடே அதிர்ந்திருக்கிறது.
மக்களின் எதிரிகளுக்கு மிக நன்றாகத் தெரியும் அவர்களது எதிரி யார் என்று.
மக்களின் எதிரிகளுக்கு எதிரி மக்களின் ஊழியன் என்பது மட்டுமல்ல யார் அந்த மக்களின் ஊழியன் என்பதும் பிரகாஷ்ராஜ் அறிந்திருக்கிறார்.
அவருக்கென் வாழ்த்தும் நன்றியும்.
அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ பிரகாஷ்ராஜ் மாதிரி நல்ல மனிதர்களை பாஜக தலைவர்கள் இடதுசாரிகளாக்கி விடுகிறார்கள்
அவர்களுக்கும் என் வாழ்த்தும் நன்றியும்
மற்ற மாநிலங்களைப் போல் அல்ல மேற்கு வங்கம்
உயிரை இயக்கத்துக்காய் உயில் எழுதிக் கொடுப்பவனால்தான் இங்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொறுப்புக்கு வர முடியும்
சயந்தீப் மித்ரா செயலாளராகவும் மினாக்ஷி முகர்ஜி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள் மகனே, வாழ்த்துக்கள் மகளே
நிறைய இழந்திருக்கிறோம்
இரண்டு எதிரிகள்.
எந்தப் பாதகத்தையும் செய்யத் தயங்காத இரண்டு எதிரிகள்.
ஒருவரிடம் மாநிலம் இருக்கிறதென்றால் இன்னொருவரிடம் தேசமே இருக்கிறது
நம்மிடம் மாநிலம் இல்லை. நம்மிடம் தேசம் இல்லை.
அஞ்ச வேண்டாம்
நியாயம் இருக்கிறது. உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள்
இன்று உயர்ந்த இந்தக் கரங்கள் இரண்டு ஜோடிக் கரங்கள் அல்ல. ஒரு கோடி ஜோடிக் கரங்களின் பிரதிநிதிகள் இவை
இழந்ததை மீட்கும்வரை உயர்ந்தபடியே இருக்கட்டும்
                                                                          2
இன்று மதியம் முதல் எதுவும் செய்ய விடாது “திருமுருகன் காந்தி” என்ற ஒற்றை சொல் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது.
நீதிமன்ற வளாகத்தில் திரு வைகோ அவர்களோடான அவரது படமும் நீதிமன்றமா வேறு ஏதேனும் இடமா என்று தெரியவில்லை ஏதோ தேசத்தையே விலைபேசி முடித்தவனை கையும் களவுமாய் பிடித்ததுபோல ஒரு மூலையில் உட்கார வைக்கப்பட்டிருந்த அவரது படமும் அவர் நலமற்று சோர்வாக இருக்கிறார் என்பதை உணர்த்தின.
எல்லோரும் சொல்வதைப்போல்தான் எனக்கும் திருமுருகன் காந்தியோடு முரண்பாடுகள் உண்டு. அரசியல் பார்வைகள்மீது கடுமையான விமர்சனங்களும்கூட உண்டு. அதனால்தானே இருவரும் வேறு வேறு அமைப்பில் இருக்க வேண்டி உள்ளது.
அனால் அவரது எதிரியால்கூட அவரை மக்கள் விரோதி என்று ஒருபோதும் சுட்டிவிட முடியாது. அவரை “தேசத் துரோகி” என்று கூறுபவர்களை இரண்டாகப் பிரிக்கலாம்
அதன் பொருள் புரியாமல் கத்துபவர்கள்
திருடன் திருடன் என்று இழந்தவனைப் பார்த்து கத்தும் திருடன் போன்றவர்கள்
ஒரு திரள் அறியாமல் கூவுகிறது. இன்னுமொரு திரள் இவர்களது அறியாமையைப் பயன்படுத்திக் கொள்கிறது.
நம்முடைய முதல் வேலை அந்த அறியாதத் திரளை இந்தக் கூட்டத்திடம் இருந்து மீட்பதுதான்.
இன்று ஒருக் கட்டத்தில் கீழ் வருமாறு எழுதிவிட்டேன்
”எத்தனை எத்தனையோ வதந்திகள்
அவற்றோடு இன்னுமொன்றாகட்டும் இது
"தோழர் திருமுருகன் காந்தி தீவிரக் கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு பட்டிருக்கிறார்"
"திருமுருகன் காந்தி கவலைக்கிடம்"
என்று வருகிற தகவல்கள் பொய்யாகட்டும்
உண்மையெனில் விரைவில் அவன் மீளட்டும்
இனியும் நீளுமெனில்
நம் மௌனம்
கள்ளத்தனமானதுதான்”
இதைப் போட முடியவில்லை. எப்படி இருக்கிறார் அந்த மனிதர் என்று கேட்டேன்.
பரவாயில்லை என்பதாக வந்த பதில் கொஞ்சம் ஆறுதலைத் தந்தது.
அலைக்கழித்தல், அடைத்து வைத்தல், உரிய சிகிச்சைக்கு அனுமதி மறுத்தல் ஆகிய காரியங்களில் ஈடுபடும் காவல்துறை நண்பர்களுக்கு
H.ராஜா போன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து தம் மீட்சிக்காக ஒலிக்கப்போகும் குரல்களில் திருமுருகன் காந்தியின் குரலும் ஒன்று என்பது நன்கு தெரியும்
பாவம் அவர்கள் வெறும் கருவிகள்
எல்லாவற்றையும் பிறகு பேசலாம்.
முதலில் அவனது விடுதலைக்கான குரலை இன்னும் பேரதிகமாய் உயர்த்துவோம்
தெம்பாய் வரட்டும்
அவனோடு அளவளாவவும் விவாதிக்கவும் ஏராளம் இருக்கிறது எனக்கு.

                                                                               3
தந்தை பெரியாரின் சிலைகளும் தந்தை அம்பேத்கரின் சிலைகளும் அவமரியாதை செய்யப்படுவதோடு சிதைக்கப் படவும் காண்கிறோம்.
இன்னொருபுறம் H.ராஜாவை தென்னகத்தின் கோட்சே என்று போஸ்டர் அடிக்கிற அளவிற்கு நம் எதிரிகள் முன் நகர்ந்திருக்கிறார்கள்.
தேசத்தின் தந்தையைக் கொன்றவனை போஸ்டர் ஒட்டிக் கொண்டாடுவது குற்றம்.
ராஜவை கோட்சே என்பதன் மூலம் அவர்கள் களத்திற்கு வந்துவிட்டார்கள்.
இந்தச் சூழலில் தந்தை அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதற்கு தீக்கதிர், விடுதலை ஆகிய பத்திரிக்கைகளில் ஆழமான கண்டனங்கள் வந்திருக்கின்றன. மற்ற பத்திரிக்கைகளைப் பற்றி தெரியவில்லை.
மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் சிலை குறித்து ஆதங்கப்பட்டது மாதிரி தந்தை அம்பேத்கர் சிலை குறித்தும் ஆதங்கப்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்
#சாமங்கவிய 41 நிமிடங்கள்
30.09.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...