Sunday, October 9, 2016

கொஞ்சம் கோவத்தைக் குறை

இவனை யாராவது ஒரு சாமியார்ட்ட கொண்டுபோய் மந்திருச்சுவிட்டா தேவலாம், இவ்வளவு மொரட்டுத்தனமான கோவக்காரனா இருக்கானே என்று கடங்கைப் (Kadanganeriyaan Perumal) பற்றி நான்கூட அவ்வப்போது நினைப்பதுண்டு,
தப்பென்று ஒன்று பட்டுவிட்டால் அவனது கோவத்தைப் பற்றி அவனை அறிந்தவர்கள் அறிந்ததுதான்.
ஆனால் அவனது நெகிழ்வும் கரிசனமுமான நெறிப்படுத்துதல்கள் மிகவும் மேன்மையானவை.
அதை இரண்டாவது முறையாக நேற்று அதை அனுபவித்தேன்.
“மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
என்பது சிலம்பா அல்லது மணிமேகலையா என்று தெரியாமல் சிலம்பென்று போட்டிருந்தேன்.
உள்டப்பியில் வந்து “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்பது புறநானூறு என்கிறான்.
ஆமாம்தான். ஆனால் மணிமேகலையிலும் இருப்பதாகவே படுகிறது. விவரம் தெரிதவர்கள் அதை தெளிவு படுத்துங்கள்.
பிழை என்று படுவதை உள்டப்பியில் வந்து சுட்டிக்காட்டி நெறிப்படுத்தும் பக்குவமிருக்கிறதே அது அரிதானது, எடுத்துக் கொள்ள வேண்டியது.
கொஞ்சம் கோவத்தைக் குறைத்து அடங்குடா கடங்கு என்று மட்டும் அவனுக்கு உரிமையோடு சொல்லத் தோன்றுகிறது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...