Tuesday, August 6, 2013

நிலைத் தகவல்...5

”காக்கை சிறகினிலே” ஆசிரியர் குழு கூட்டம் சென்னையில். ஜன்னல் கண்ணாடி இல்லாத பேருந்தில் ஏறி குளிரில் விறத்துப் போய் ஒரு வழியாய் தாம்பரத்தில் விட்டால் போதுமென்று இறங்கி ஓடிப் போய் ரயிலேறி சைதாப்பேட்டை வந்து சேர்ந்த பொழுது மணி ஐந்தரை.

ரயிலடியை விட்டு வெளியே வந்தேன். இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தைத் தாண்டும் போது பிச்சை எடுக்கும் தோழர் ஒருவர் ஒருவர் என்னைத் தாண்டிப் போய் என்னைத் தொடர்ந்து வந்தவரிடம் பிச்சைக் கேட்டார். பிச்சை எடுக்கும் தோழருக்கு நம் நிலமை தெரிந்திருக்கிறது.

“இப்படிக் காலங்காத்தால ஏன்யா வந்து கழுத்த அறுக்குறீங்க?” அலுத்துக் கொண்டார் கேட்கப் பட்டவர்.

“அட்டவணைப் போட்டா சாமி தர்மங் கேட்க முடியும்?”

அந்தப் பிச்சைக் காரத் தோழரின் எள்ளலில் தர்க்க நியாயம் இருப்பதாகவேப் பட்டது.


நிலைத் த்கவலிட்டது 10.12.2011

முகநூலில் வாசிக்க
https://www.facebook.com/eraaedwin/posts/290500764324774

2 comments:

  1. ஆமாம் தோழர். அதே கலகத் தனம் அந்தத் தோழரிடம். மிக்க நன்றி

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...