Friday, June 4, 2021

நெல்லைப்போலவே எள்ளையும்

 கனவு இல்லமும், மாமணியும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மகிழ்ச்சிதான்
இதைவிட அதிகமாக என்னை ஈர்த்தது
அந்த அறிவிப்புகளினூடே திருவாரூரில் நெல் கொள்முதல் கிட்டங்கி அமைப்பதற்கு இருபது கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுதான்
கொள்முதல் செய்த நெல்மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கப்பட்டு மழையில் நனைந்து முளைத்து வீணான சோகம் பார்த்தோம்
அந்த வகையில் இது மிக ஆறுதலான செய்தி
திருவையாறு பகுதியில் கோடை பயிராக இந்த ஆண்டு 500 ஏக்கரில் எள் பயிரிடப்பட்டு நன்கு விளைந்திருப்பதாக அந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்
இந்த ஆண்டு ஏக்கருக்கு 5 குவிண்டால் எள் விளையும் என்று மகிழ்ந்து கூறியிருக்கிறார்கள்
எனில் இந்த ஆண்டு திருவையாறு பகுதியில் ஏறத்தாழ 2500 குவிண்டால் எள் கிடைக்கும்
அதாவது 2,50,000 கிலோ எள் கிடைக்கும்
ஏக்கருக்கு 8000 ரூபாய் செலவு செய்திருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்
இடைத்தரகர்கள் சொல்ப விலைக்கு வாங்கி தங்களை ஏமாற்றிவிடாமல் இந்த அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்
நெல்லைப்போலவே எள்ளையும் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் க்கோரிக்கையை திரு ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்
இதை செய்தால் டெல்டா பகுதியில் கோடைகால மானாவாரி விவசாயம் செழிக்கும்
#சாமங்கவிய 33 நிமிடங்கள்
04.06.2021

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...