Saturday, June 12, 2021

கவிதை 20 24.01.2021

                                                                               01 


அறைக்குள் நுழைந்திருக்கும்

இந்தப் பிடிச்சப்பிடி மென் குளிரை
சமாளித்து விடலாம்
வாசிக்கிற சூடில்
ஒருதுண்டு கவிதையும்
ஒரு கோப்பை
சர்க்கரைப் போடாத
பாலற்ற எலுமிச்சைத் தேநீரும்
வாய்த்து விட்டால்


02

தன் இருத்தலை நிறுவ
ஒரே ஒரு சொட்டேனும்
இருட்டு தேவைப்படுகிறது வெளிச்சத்திற்கு


03



மலம் அள்ளுவதும்
கீழிறங்கி
சாக்கடை கசடள்ளி சுத்தம் செய்வதும்
என்னை எரித்த பிறகும் தொடருமானால்
இந்தக் கொடுமைக்கு எதிராக
சாராய நெடியும் கோவமுமாய்
கலந்து வரும்
அவனது கெட்ட வார்த்தைகளாகவும்
அவன் காறி உமிழும் எச்சிலாகவும்
மாறியிருப்போம்
என் கவிதைகளும் நானும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...