Thursday, June 10, 2021

31.01.2021

 31.01.2021

****************************************  

                                 01

திருடனின் கை ரேகையில்
தெரியவேயில்லை
திருடனென்று




02


தலித்தைவிட சூத்திரன் உசத்தியானவன் என்று சூத்திரர்கள் பலர் கருதுவதும்
ஏதோ தாம் பெரிய அவதாரம் என்பதுபோல் கருதி கிடைக்கிற தலித்துகளைத் தாக்குவதுமாக நகர்வது தொடர் கதையாக இருக்கிறது
ஆவுடையார்கோவிலுக்கு அடுத்துள்ள குணத்திரான்பட்டியைச் சேர்ந்த இளைஞன் மதன்
பொறியியலில் பட்டையம் பெற்றவன்
கோவையில் கார் ஓட்டுனராகப் பணி புரிகிறார்
பொங்கலுக்காக விடுப்பில் வந்திருக்கிறார்
24.01.2021 அன்று மாலை தனது நண்பர்களோடு பட்டமங்கலத்தில் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்
அவரை தண்ணிகொண்டான் மங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ப்ரதீப், மெய்கண்டன் உள்ளிட்ட இளைஞர்கள் மதனை ஜாதியை சொல்லித் திட்டியும் தாக்கியும் உள்ளனர்
ஒருவழியாகத் தப்பித்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பும்போது
மீண்டும் வழி மறித்து தாக்கியுள்ளனர்
ஒருகட்டத்தில் நா வறண்ட நிலையில் தண்ணீர் கேட்ட மதனது வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்
போதையில் இருந்த அவர்கள் மயங்கியபோதுதான் மதனால் அங்கிருந்து தப்பிக்க முடிகிறது
என்கிற செய்தியை தம்பி ஸ்டாலின் தி தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்
தலித் என்றால் பரிகசிக்கவும் தாக்கவுமான லைசென்சை இவர்களுக்கு எவன் தந்தது?
அவ்வளவு உயர்வானவர்களா இடை சாதியினர்?
இவர்களே இன்னும் தங்களுக்கான விடுதலைக்காக குரல் கொடுப்பவர்கள்தானே?
எனில்,
இவர்களுக்கும் மேல் யாரோ இருக்கிறார்கள்தானே?
இன்னும் சொல்லப்போனால் இப்படியான ஒரு அடுக்கு ஏற்பாடே அவர்களுக்கு எதிராக எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பார்ப்பனர்கள் செய்ததுதானே
அடுத்தவனை அடிமையாகக் கருதும் இடைசாதிக் காரன் எப்படி தனது விடுதலைக்காக குரல் கொடுக்க முடியும்
இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காத அளவிற்கு கடுமையான தண்டனை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டும்
எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்
சூத்திர விடுதலைக்கான முன் நிபந்தனை தலித் விடுதலை


03







இது பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் மதுரையிலே கலந்துகொண்ட மாநாடு
மக்களோடு உள்ள நாற்காலிகளை மட்டுமே வைத்திருக்கிறேன்
வெறும் நாற்காலிகளை வைக்கவில்லை
ஆயிரத்து ஐநூறு நாற்காலிகளுக்கு ஒருத்தரைத்தான் அவர்களால் சம்பளத்திற்கு அழைத்து வர முடிந்திருக்கிறது
இவ்வளவுதான் அவர்களது செல்வாக்கு
அதிமுக இதைப் புரிந்து கொள்ள வேண்டும்
நஞ்சுப் பயிர்களுக்கு உரம் தெளிக்கிற வேலையை அதிமுக செய்யக் கூடாது




04








அன்புத் தோழர் மதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...