Sunday, May 27, 2018

சத்தியமாய் எம் பிள்ளைகள் கணக்குக் கேட்பார்கள்

தூத்துக்குடி படங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவற்றில் பல குழந்தைகளின் படங்கள் நம்பிக்கையையும் கூடவே வலி கடந்த அச்சச்த்தையும் தருகின்றன. நேற்று லூசுப்பொண்ணு (Sumathy Thangapandian) பக்கத்தில் நான் பார்த்த ஒரு படத்தை வைத்திருந்தேன்
தோழர்கள் Kasthuri Rengan மற்றும் ஸ்டாலின் தி ஆகியோர் பக்கங்களில் இந்தப்படம் பார்த்தேன்.


என்ன ஒரு தெளிவு, என்ன ஒரு தீர்க்கம். இந்தப் பிள்ளைகளிடமிருந்து கங்கள்ளிக் கொள்கிறேன்.
அந்த வயதுப் பிள்ளைகளிடமிருந்து, “புற்று வந்து சாவதைவிட போராடிச் செத்துவிடுகிறோம்” என்பது மாதிரி கேட்பது இந்த சமூகத்திற்கான சாபம்.
இந்தப் பிள்ளைகள் இருக்கிறார்களா அல்லது கடத்தப்பட்டார்களா என்ற அச்சம் எம்மை பையப் பையக் கொன்று போடுகிறது. அந்தக் குழந்தைகளைப் பாதுகாத்து வைக்க வேண்டும்.
காவலர்களும் இந்த அரசுகளும் எதுவும் செய்வார்கள்.
தோழர் ஷப்தர் ஹஷ்மி கொல்லப்பட்ட போது,
“எங்கள் தோழன்
ஷப்தர்ஹஷ்மி
சிந்திய ரத்தம் ஒவ்வொரு துளிக்கும்
நாளாஇ நடக்கும் வர்க்கப் போரில்
த மு எ ச
கணக்குக் கேட்கும்”
என்று கோஷம் போட்டோம்.

சத்தியமாய் எம் பிள்ளைகள் கணக்குக் கேட்பார்கள்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...