Monday, January 15, 2018

ஞாநி எனும் எழுத்தாளுமை





1983 கோடையில் “தேன்மழை” பத்திரிக்கை இளம் படைப்பாளிகளுக்கான 15 நாள் பயிற்சிப்பட்டறையை சென்னையில் நடத்தியது.
அடுத்தநாள் தோழர் ஞாநியும் மாலன் சாரும் வகுப்பெடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் ரெக்கை கட்டிக் கொண்டது.
தோழர் ஞாநி அப்போது “தீம்தரிகிட” பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்தார். A4 அளவில் வண்ணமயமாக அது வந்துகொண்டிருந்தது. மாலன் சார் (மாலன் நாராயணன்) அப்போது திசைகள் நடத்திக் கொண்டிருந்தார். இரண்டின்மீதும் .அன்றைய இளைஞர்களுக்கு ஒரு மோகம் இருந்தது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஒரு கட்டுரையை எங்கு தொடங்கி எப்படி நகர்த்தி எங்கு முடிக்க வேண்டும் என்பதில் எனக்கு ஏதேனும் இருக்கிறது என்று சொன்னால் அதி அன்றைய அவர்கள்து வகுப்புகளுக்கும் அதற்குப் பிறகான மாமரத்தடி நிழலில் அவர்களோடான எனது உரையாடலுக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது. அதற்காக ஞாநி தோழருக்கும் மாலன் சாருக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன்.
தோழரோடான எனது நெருக்கம் “காக்கை”யின் (Kaakkai Cirakinile) வெளியீட்டு விழாவிலிருந்துதான் தொடங்குகிறது. தோழர் இன்குலாப், தோழர் ட்ராட்ஸ்கி மருது, தோழர் வீர சந்தானம், அருள்மொழி, 
தோழர் ஞாநி ஆகியோர் பங்கேற்ற நிகழ்விற்கு நான்தான் தலைமை.
பங்கேற்றவர்களில் இன்குலாப், ஞாநி, மற்றும் அருள்மொழி ஆகியோரது உரைகள் வெகுவாய் ஈர்த்தன. அபோது சொன்னேன் ‘கருப்பும் சிவப்பும் சரியாய் இணையனும்”. இதுகுறித்து ஒரு தொடர் ஞாநி எழுத வேண்டும் என்று.
அடுத்தநாள் ஞாநி என்னை அழைத்தார்
”கருப்பும் சிவப்பும் மட்டும் போதாது எட்வின், நீலமும் இணைந்தால்தான் முழுமை பெறும். நிச்சயம் முயற்சி செய்கிறேன்” என்று சொன்னார்.
அதன்பிறகு நிறையமுறை அவரது வீடு சென்று சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது.
”தொடராக எழுதுவதில் சிரமம் இருக்கிறது. உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. வேண்டுமானால் கேள்விகளைக் கேளுங்கள். பதில்களைத் தந்து விடுகிறேன்” என்றார். இந்தப் பொறுப்பை நாந்தான் ஏற்றேன். இதன்பொருட்டும் அவரோடான உறவு கூடியது.
காக்கையில் அவரது கேள்வி பதில் பகுதி சிறப்பானதொரு கவனத்தைப் பெற்றது.
எட்வின், நீங்கள் பத்தி எழுதலாம், எழுதனும் என்று என்னை உற்சாகப் படுத்தியவர். ’65/66, காக்கைச் சிறகினிலே’ தொடங்கியபோது அழைத்து கொண்டாடி வாழ்த்தியவர்.
தனது அறுபதாவது பிறந்தநாளுக்கு அலைபேசி என்னை அழைத்திருந்தார். தம்பி நந்தனோடு (நந்தன் ஸ்ரீதரன்) போனபோது இருவரையும் அணைத்து மகிழ்ந்தவர்.
இரண்டு நாட்களுக்கு முன்னாள் புத்த்கக் கண்காட்சியில் வைத்து ஞாநியை தோழர் முத்தையா சந்தித்திருக்கிறார். வாரத்திற்கு மூன்றுமுறை டையாலிசிஸ் செய்யவேண்டிய நிலையிலும் மிகுந்த உற்சாகத்தோடு பேசியிருக்கிறார். ”காக்கை எஸ்டாப்ளிஷ் ஆயிடுச்சு” என்றிருக்கிறார்.
காக்கையை எஸ்டாப்ள்ஷ் செய்ததில் ஞாநியின் பங்கு மகத்தானது. போகிற திசை எல்லாம் காக்கையைச் சுமந்து திரிந்தவர்.
நாளையோ நாளை மறுநாளோ இல்லை இன்னும் கொஞ்சம் காலம் கடந்தோ என்னைத் தழுவ இருக்கிற மரணம் இன்றைக்கே தோழரை ஆரத் தழுவியிருக்கிறது.
எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் அழுகை வருகிறது ஞாநி.
எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்த எழுத்தாளுமைக்கு என் சார்பாகவும் காக்கையின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

2 comments:

  1. எழுத்தாளர் ஞாநியுடனான உங்களது நினைவுகளின் உருக்கமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...