Monday, January 22, 2018

நல்லது நடக்கட்டும்.

வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான உறவுநிலையை எதனோடு ஒப்பிடுவது என்று யோசிக்க யோசிக்க எதுவுமே உருப்படியாக சிக்க மறுக்கிறது.
திரு கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதாவோடு ஒப்பிடலாமெனில் இவர்களுக்கிடையேயான வெறுப்பும் பகையும்கூட அந்த அளவு இல்லைதான். போதாமை இருக்கிறது.
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு
காரணம் இருபக்கிற பகையை ஊதிப் பெரிதாக்க ட்ரம்ப் மாதிரி ஒரு பகையூக்கி இங்கே இல்லை
இந்நிலையில் அடுத்தமாதம் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தமது நாடு பங்கேற்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.
இதைக்கொண்டாடிய தென் கொரியா தொடக்க விழா பேரணியிலும் தம்மோடு இணைந்து வடகொரியா பங்கேற்க வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னது
இதுகுறித்து சுவிட்சர்லாந்தில் இருநாடுகளும்கூடி ஆலோசனை நடத்துகின்றன
இந்த முயற்சி விளையாட்டையும் கடந்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை கொண்டுவரும் என்ற நம்பிக்கை இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பாச் கூறுகிறார்
செலவின மசோதாவை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் ட்ரம்பிற்கு இந்த நம்பிக்கையை குலைத்து போடுவதற்கான அவகாசம் இல்லை என்பதே நல்லது நடந்துவிடும் என்ற நம்பிக்கையை பலப்படுத்துகிறது
நல்லது நடக்கட்டும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...