Monday, January 15, 2018

ஜெயதேவனின் முச்சூலம்



கைக்கு வந்துவிட்டது ஒருவழியாய் ஜெயதேவனின் “முச்சூலம்”
அவர் அதை அனுப்பி நான்கைந்து நாட்களாகி விட்டது. இன்றுதான் கைக்கு வந்தது. அதற்குள் மனிதர் படாதபாடு பட்டுவிட்டார். இது சகஜம்தான் என்பதை அவர் அறியாதவரும் அல்ல.


தமது படைப்பை வாசிக்கவேண்டிய முதல் பத்து நபர்களில் என்னையும் ஒருவனாக வைத்திருப்பவர். அந்த அன்பிற்கு நான் காலகாலத்திற்கும் கடமைப்பட்டவன்..
தற்போது இரா. முருகவேள் அனுப்பிய ”செம்புலம்” ஓடிக்கொண்டிருக்கிறது
போனவாரம் ஷாஜியின் (Shajahan) ”காட்டாறு” முடித்தேன்.
செம்புலத்தை முடித்துவிட்டு இதைத் துவங்க வேண்டும். இந்த நூலை ஆரூர் தமிழ்நாடனோடு சேர்த்து முத்தையாவிற்கும் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கென் நன்றி.
இதில் வந்த பெரும்பான்மைக் கவிதைகள் காக்கையில் (Kaakkai Cirakinile) வந்தவை. அவற்றில் பல எப்போதும் நான் அசைபோடும் கவிதைகள்.
’சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்றொரு பஞ்ச் தெறித்த காலத்தில் இவர் எழுதினார்
“கடவுள் எப்போதும் தனியாக வருவதில்லை” என்று.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அதே கவிதையில் ஓரிடத்தில்
“கடவுள் அழுததில்லை” என்றும்
பிரிதோர் இடத்தில்
“எந்தக் கடவுளும் வாய்விட்டுச் சிரித்ததில்லை” என்றும் எழுதியிருப்பார்.
முத்தாய்ப்பாய்
“நமக்கான கடவுள் நம்மோடு சாப்பிட வேண்டும்” என்பார்.
இந்தக் கவிதையை அதிலுள்ள பகடியை, ஆழத்தை, ஆன்மாவை போகிற இடமெல்லாம் பைத்தியம்போல் கூறித் திரிகிறேன்.
நமது கடவுள் என்று சொல்லியிருந்தால் இது பத்தோடு பதினொன்று. ’நமக்கான கடவுள்’ என்கிறார். கொண்டாடுகிறோம்.
இந்தக் கவிதையை நிச்சயம் தொகுப்பில் வைத்திருப்பார் என்றே நம்புகிறேன்.
முழுக்க முழுக்க அரசியல் கவிதைகள் என்கிறார். எனில் இந்தக் கவிதைதான் அவரது ஆன்மீக அரசியலின் சாரம்.
இதுதான் ஆன்மீக அரசியல் எனில் அதைக் கொண்டாடத்தானே வேண்டும்.
படித்துவிட்டு முழுக்க எழுத வேண்டும்.
என் சார்பாகவும் காக்கையின் சார்பாகவும் கவிஞருக்கு வாழ்த்துகள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...