அன்பின் நண்பர்களே ,
வணக்கம்.
தேடியும் கிடைக்காமல் , யாரிடம் கேட்டும் கிடைக்காமல் இருந்தது.
90 ஜனவரியில் அந்த இதழ் தயாரித்த நேரத்தில் பிரபாகரனை அவரது கூட்டாளி
மாத்தையாவே கொன்று போட்டு இயக்கத்தைக் கைப் பற்றிக் கொண்டதாய்
தமிழகத்து ஊடகங்கள் வாய் கிழிய கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த நேரம்.
தினமலர் போன்ற இதழ்களில் நீண்ட வரிசையில் மாலைகளோடு பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் காத்திருப்பதாக படத்துடன் செய்திகள் வெளியிட்டு தமிழ் விரோதிகள் தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொடுத்து கூத்தாடிய நேரம்.
வணக்கம்.
புத்தகங்களை அடுக்கும் போது சற்றும் எதிர் பாரா விதமாக தொன்னூறில் நான்
நடத்தி வந்த "தாகம்" இதழின் பிரதி ஒன்று கிடைத்தது இது வரை எங்கெங்கோதேடியும் கிடைக்காமல் , யாரிடம் கேட்டும் கிடைக்காமல் இருந்தது.
90 ஜனவரியில் அந்த இதழ் தயாரித்த நேரத்தில் பிரபாகரனை அவரது கூட்டாளி
மாத்தையாவே கொன்று போட்டு இயக்கத்தைக் கைப் பற்றிக் கொண்டதாய்
தமிழகத்து ஊடகங்கள் வாய் கிழிய கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த நேரம்.
தினமலர் போன்ற இதழ்களில் நீண்ட வரிசையில் மாலைகளோடு பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் காத்திருப்பதாக படத்துடன் செய்திகள் வெளியிட்டு தமிழ் விரோதிகள் தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொடுத்து கூத்தாடிய நேரம்.
வரதராஜப் பெருமாள் எல்லொரும் கேட்டுக் கொண்டால் அரசு மரியாதையோடு பிரபாகரனை அடக்கம் செய்யத் தயாராய் இருப்பதாய் கோமாளித்னத்தின் உச்சிக்கே போய் கொக்கரித்த நேரம்.
அப்போது ( ஜனவரி 90 ) நான் எழுதிய கவிதை இது. ஏன் என்றெல்லாம்
தெரியவில்லை, போடவேண்டும் என்று தோன்றியது . போட்டிருக்கிறேன்.
எங்கள்
சூரியன் செத்ததாய்
சில சிகரெட்டு நெருப்புகள்
அஞ்சலி செலுத்தின .
மாமன்னன் ஒருவனுக்கு
வேண்டுமானால்
அரசு மரியாதைகளோடு
கல்லறை சமைப்பதாய்
மனமிரங்கினார்
ஒரு மேடை ராஜா
கல்லறைக்கு
தாங்கள்
மண்தள்ளி வந்ததாய் சொன்னார்கள்
தங்கள் கைமண்ணை தட்டியவாறே
விடிந்து எழுந்தால்
சுவர்கள் எல்லாம்
அவன் முகங்களாய்
பூத்தன.
திரும்பிய இடமெல்லாம்
சிங்கத்தை
அதன் கூட்டாளியே
கொன்று போட்டதாய்...
கரைந்து ஒழுகின
கண்ணீரில்
அவர்களது அரிதாரம்
பத்திரிக்கைகள் எல்லாம்
பக்கம் பக்கமாய்
அவன் வரலாறு எழுதின
வாசித்து முடித்ததும்
எங்கள் தலைவன் சொன்னான்
"வாங்க தோழா
ஒரு எட்டு போய்
பார்த்துவிட்டு வரலாம்"
"தண்டவாளத்தில் கிடக்கிறதாம்
என் உடல்"
அப்போது ( ஜனவரி 90 ) நான் எழுதிய கவிதை இது. ஏன் என்றெல்லாம்
தெரியவில்லை, போடவேண்டும் என்று தோன்றியது . போட்டிருக்கிறேன்.
எங்கள்
சூரியன் செத்ததாய்
சில சிகரெட்டு நெருப்புகள்
அஞ்சலி செலுத்தின .
மாமன்னன் ஒருவனுக்கு
வேண்டுமானால்
அரசு மரியாதைகளோடு
கல்லறை சமைப்பதாய்
மனமிரங்கினார்
ஒரு மேடை ராஜா
கல்லறைக்கு
தாங்கள்
மண்தள்ளி வந்ததாய் சொன்னார்கள்
தங்கள் கைமண்ணை தட்டியவாறே
விடிந்து எழுந்தால்
சுவர்கள் எல்லாம்
அவன் முகங்களாய்
பூத்தன.
திரும்பிய இடமெல்லாம்
சிங்கத்தை
அதன் கூட்டாளியே
கொன்று போட்டதாய்...
கரைந்து ஒழுகின
கண்ணீரில்
அவர்களது அரிதாரம்
பத்திரிக்கைகள் எல்லாம்
பக்கம் பக்கமாய்
அவன் வரலாறு எழுதின
வாசித்து முடித்ததும்
எங்கள் தலைவன் சொன்னான்
"வாங்க தோழா
ஒரு எட்டு போய்
பார்த்துவிட்டு வரலாம்"
"தண்டவாளத்தில் கிடக்கிறதாம்
என் உடல்"
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்