Wednesday, January 17, 2018

பெரம்பலூர் புத்தகக் கண்காட்சிகளின் அடையாளம்

கல்வி நிலையங்களே பெரம்பலூரின் அடையாளம்.
பெரம்பலூரை ஒரு மிக நவீன வசதிகளைக் கொண்ட பேரூர் என்றும் சொல்லலாம், மிகக் குறைந்தபட்ச நவீன கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் சிறு நகர் என்றும் கொள்ளலாம்.
உண்மையைச் சொன்னால் எது ஒன்றை படிப்பதற்காகவும் எங்கள் ஊர் குழந்தைகள் வேறு ஊருக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. மருத்துவக் கல்லூரி உள்ளிட்டு எல்லாம் உண்டு எங்கள் ஊரில்.
அந்தமான் உள்ளிட்டு எல்லா மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து படிக்கும் குழந்தைகளையும் சேர்த்து எங்கள் ஊரில் உயர்கல்வி படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகம்.
இதில் ஏறத்தாழ 75 சதவிகிதம் பிள்ளைகளாவது எங்கள் ஊரில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வந்து நூல்களை வாங்கும் வழக்கத்தில் இருப்பவர்கள். அதிலும் பலர் பலமுறை வந்து வாங்கிப் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள்.
பக்கத்து ஊர் மக்களும் திருவிழாவிற்கு போவதுபோல் வர ஆரம்பித்திருந்த நேரம்.
நிகழ்சீகளை நடத்துவதற்கு ஸ்பான்சருக்கும் பிரச்சினையே இல்லாத ஊர்.
இதுவரை ஆறு பதிப்பகங்கள்வழி பத்து நூல்கள் வந்திருக்கு. அவறில் சில பதிப்பகங்கள் பெரம்பலூர் கண்காட்சியில் ஸ்டால் எடுத்த்வர்கள். அவர்களில் யாரும் முகம் சுழிக்கும் அளவிற்கு விற்பனை இருந்ததும் இல்லை.
கல்வி நிலையங்களே பெரம்பலூரின் அடையாளம் என்று தொடங்கினேன். தொடர்ந்து நடந்தால் புத்த்கக் கண்காட்சிகளே பெரம்பலூரின் அடையாளமாக மாறும்.
இப்படி இருக்க அதைத் தொடர்வதில் இவர்களுக்கு என்ன தயக்கம்?
இந்தத் துறையில் அனுபம் உள்ள என்களைப் போன்றவர்களை அழைத்துப் பேசினால் எந்தச் சிக்கல் தீர்ந்து போகாது?
அருள்கூர்ந்து தொடர்ந்து நடத்துங்கள்.
சத்தியம் செய்கிறேன்
ஒருநாள் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சிகளின் அடையாளமாக மாறும்.

4 comments:

  1. விரைவில் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சிகளின் அடையாளமாக மாறும் தோழர்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. உங்கள் நம்பிக்கை வெற்றி பெறும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...