மரணம் தவிர்க்க இயலாதது. ஆனாலும் அது ஒவ்வொரு முறை நிகழும் போதும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுத்தான் போகும். எனக்கு சாய்பாபா அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. மேடைகளில் நிறைய விமர்சனம் செய்திருக்கிறேன். இனியும் தேவைப் படும் போதெல்லாம் செய்யவே செய்வேன். அவரது பெயரால் குவிக்கப் பட்ட சொத்துக்கள், அங்கு உள்ளே நடந்த திறை மறைவு வேலைகள், ஏற்கனவே அவரைக் கொல்ல நடந்ததாக சொல்லப்பட்ட முயற்சி, அது அப்படியே மறைக்கப் பட்டதின் பின்னே உள்ள அரசியல், இந்திய ஜனாதிபதி வரை அவரது காலடியில் கிடந்த கீழ்மை, அவரது மந்திரங்கள் என இவை அனைத்தும் குறித்து எப்போதும் போலவே இனியும் தேவைப் படும் இடங்களில் விமர்சிப்பேன்.
ஆனாலும் அவர் தன்னை ஒரு தெலுங்கராய் உணர்ந்து வைத்திருந்ததும் தன் தாய் மொழியை பிற மொழிக்காரனும் பிழையாக உச்சரித்து விடக் கூடாது என்பதில் அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றிற்காக அவரை நான் தலை தாழ்த்தி வணங்குகிறேன். உணர்ச்சி வசப்படாமல், ஆரவாரமில்லாமல், மொழிமீது பற்று வைக்கவும் கவனம் குவிக்கவும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இருக்கிறது.
அவருக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய “பகவான் தாய் மொழி தெலுங்கு” என்ற கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
சற்றே சமீபத்தில் புட்டபர்த்தி சென்று சாய்பாபா முன்னிலையில் பாடிய தனது அனுபவத்தை “கல்கி” யில் பதிந்திருக்கிறார் டி.எம்.கிறிஷ்ணா.சிலாகிப்பினை ஊன் உருக, உயிர் உருகப் பதிந்திருக்கிறார் என்பதே உண்மை.
சற்றேரக் குறைய எழுபது நிமிடங்கள் பாடிய அவரை அழைத்து, காற்றிலே விரல் சொடுக்கி, வலது கை விரலில் ஒன்றும் இடது கை விரலில் ஒன்றும் ஆக இரண்டு மோதிரங்களை சாய்பாபா அவர்கள் அணிவித்ததாக பக்தி கசியக் கசியச் சொல்கிறார் கிறிஷ்ணா.
இது மூட நம்பிக்கையா? மோசடியா? நிறைய பேர் நிறைய எழுதிவிட்டார்கள். எனவே அதற்குள் போக நான் அக்கறைப் படவில்லை.
“தெலுங்கு வார்த்தைகளில் கொஞ்சம் கவனம் வைத்துக் கொள்” என்று தன்னிடம் சாய்பாபா அவர்கள் சொன்னதாய் போகிற போக்கில் கிருஷ்ணா சொல்லிச் சென்றுள்ள விஷயத்தில்தான் நாம் கூடுதல் கவனம் குவிக்க வேண்டும் என்று படுகிறது.
இதில் ஒன்றும் பிழை இருப்பதாகப் படவில்லை. பகவானேயாயினும் சாய்பாபா அவர்கள் ஒரு தெலுங்கர். அவரது தாய் மொழி தெலுங்கு. கடவுளின் அவதாரமாகவே பல கோடி மக்கள் அவரக் கொண்டாடினாலும் தமது தாய்மொழி தெலுங்கு என்பதிலும் , தனது தாய் மொழியை வேற்று மொழிக்காரரும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதிலும் அவருக்குள்ள அக்கறையை நாம் போற்றுகிறோம்.
இன்னுஞ்சொல்லப் போனால் எல்லா விஷயங்களிலும் அவரோடு முரண்படுகிற நாம் , அவரது மொழிப் பற்றை சிரந்தாழ்த்தி மகிழ்ச்சியோடு வணங்குகிறோம்.
அவர் தெலுங்கர். அவரது தாய்மொழி தெலுங்கு. அவரும் அதை உணர்ந்திருக்கிறார். தலை தாழ்த்திப் போற்றுகிறோம்.
நாம் தமிழர். நமது தாய்மொழி தமிழ்.
இதை நாமெப்போது உணரப் போகிறோம்.
ஆனாலும் அவர் தன்னை ஒரு தெலுங்கராய் உணர்ந்து வைத்திருந்ததும் தன் தாய் மொழியை பிற மொழிக்காரனும் பிழையாக உச்சரித்து விடக் கூடாது என்பதில் அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றிற்காக அவரை நான் தலை தாழ்த்தி வணங்குகிறேன். உணர்ச்சி வசப்படாமல், ஆரவாரமில்லாமல், மொழிமீது பற்று வைக்கவும் கவனம் குவிக்கவும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இருக்கிறது.
அவருக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய “பகவான் தாய் மொழி தெலுங்கு” என்ற கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
சற்றே சமீபத்தில் புட்டபர்த்தி சென்று சாய்பாபா முன்னிலையில் பாடிய தனது அனுபவத்தை “கல்கி” யில் பதிந்திருக்கிறார் டி.எம்.கிறிஷ்ணா.சிலாகிப்பினை ஊன் உருக, உயிர் உருகப் பதிந்திருக்கிறார் என்பதே உண்மை.
சற்றேரக் குறைய எழுபது நிமிடங்கள் பாடிய அவரை அழைத்து, காற்றிலே விரல் சொடுக்கி, வலது கை விரலில் ஒன்றும் இடது கை விரலில் ஒன்றும் ஆக இரண்டு மோதிரங்களை சாய்பாபா அவர்கள் அணிவித்ததாக பக்தி கசியக் கசியச் சொல்கிறார் கிறிஷ்ணா.
இது மூட நம்பிக்கையா? மோசடியா? நிறைய பேர் நிறைய எழுதிவிட்டார்கள். எனவே அதற்குள் போக நான் அக்கறைப் படவில்லை.
“தெலுங்கு வார்த்தைகளில் கொஞ்சம் கவனம் வைத்துக் கொள்” என்று தன்னிடம் சாய்பாபா அவர்கள் சொன்னதாய் போகிற போக்கில் கிருஷ்ணா சொல்லிச் சென்றுள்ள விஷயத்தில்தான் நாம் கூடுதல் கவனம் குவிக்க வேண்டும் என்று படுகிறது.
கிருஷ்ணா அவர்கள் தெலுங்கு உச்சரிப்பில் ஏதோ பிசகியிருக்க வேண்டும். அதைத் திருத்தும் விதமாகத்தான் சாய்பாபா அவர்கள் மேலே சொன்னதை சொல்லியிருக்கக் கூடும்.
இதில் ஒன்றும் பிழை இருப்பதாகப் படவில்லை. பகவானேயாயினும் சாய்பாபா அவர்கள் ஒரு தெலுங்கர். அவரது தாய் மொழி தெலுங்கு. கடவுளின் அவதாரமாகவே பல கோடி மக்கள் அவரக் கொண்டாடினாலும் தமது தாய்மொழி தெலுங்கு என்பதிலும் , தனது தாய் மொழியை வேற்று மொழிக்காரரும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதிலும் அவருக்குள்ள அக்கறையை நாம் போற்றுகிறோம்.
இன்னுஞ்சொல்லப் போனால் எல்லா விஷயங்களிலும் அவரோடு முரண்படுகிற நாம் , அவரது மொழிப் பற்றை சிரந்தாழ்த்தி மகிழ்ச்சியோடு வணங்குகிறோம்.
அவர் தெலுங்கர். அவரது தாய்மொழி தெலுங்கு. அவரும் அதை உணர்ந்திருக்கிறார். தலை தாழ்த்திப் போற்றுகிறோம்.
நாம் தமிழர். நமது தாய்மொழி தமிழ்.
இதை நாமெப்போது உணரப் போகிறோம்.
//நாம் த்மிழர். நமது தாய்மொழி தமிழ்.
ReplyDeleteஇதை நாமெப்போது உணரப் போகிறோம்.//
சிந்திக்க வைக்கிற கேள்வி! நல்ல பகிர்வு நண்பரே!
சேட்டையே பின்னூட்டம் இடுவது நெசத்துக்குமே கௌரவமமான விஷயம்தான்
ReplyDelete