Friday, April 15, 2011

அப்பா வண்டு

சுவரோரமாய் 
கிடந்தது
ஒரு கரு வண்டு 

"எப்பப்பா போகும் 
இது அவுங்க வீட்டுக்கு"

இப்படித்தான் 
எதையாவது கேட்பாள் 
எப்போதும் 

"எழுந்ததும் போகும்"

இப்படித்தான் 
சமாளிப்பேன் நானும் 

விடவில்லை 

"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா? "

"அப்பா வண்டு" 
சொல்லி வைத்தேன் 
சும்மா "

"அப்பா வண்டுன்னா சரி 
எப்ப வேணாலும் 
போகலாம்
வீட்டுக்கு" 

10 comments:

  1. நுண்மையான நகைமுரண்.நல்ல கவிதை

    ReplyDelete
  2. மிக்க நன்றி மிருணா

    ReplyDelete
  3. //எதையாவது கேட்பாள்
    எப்போதும்
    சமாளிப்பேன் நானும்...

    அப்பா வண்டுன்னா சரி
    எப்ப வேணாலும்
    போகலாம் வீட்டுக்கு//
    குட்டிப் பெண்ணின் புரிதல் சமட்டியாய் இறங்குகிறது நம்முள்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி நிலா.

    ReplyDelete
  5. அம்மாவைத் தேடிப் போகும் அப்பா வண்டைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    கவிதையின் உள்ளடக்கத்தை வர்ணிக்க நீங்கள் கையாண்ட வண்டின் குறீயீடு கவிதைக்குப் பக்க பலமாக இருக்கிறது.

    ReplyDelete
  6. வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து ஒரு குழந்தையின் புரிதல் எவ்வளவு.ம்...அப்பா வீட்டுக்கு எப்பவும் போகலாம்.பரவாயில்லை !

    ReplyDelete
  7. @நிரூபன்

    மிக்க நன்றி நிரூபன்

    ReplyDelete
  8. @ஹேமா

    மிக்க நன்றி ஹேமா. உங்கள் வலையை நான் பின் தொடர்கிறேன்.

    ReplyDelete
  9. @அன்புடன் அருணா
    மிக்க நன்றி அருணா
    ஆமாம் அட் னா என்ன?

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...