Showing posts with label குறுங்கவிதை. Show all posts
Showing posts with label குறுங்கவிதை. Show all posts

Sunday, March 13, 2011

நறுக்குகள்

மாட்டுக் காரனின்  
முதுகுச் சாயம் 
மாட்டின் கொம்பில் 


அலை பாயும் 
கண்களுக்கு 
கடவுள் மட்டும் 



கை நிறைய மனுக்கள்
நல்ல குளிர்
எங்கே தீப்பெட்டி?


சிதையிலும் 
சுவாசிக்கும் 
சினிமாப் பிணம்    

Friday, March 11, 2011

நறுக்குகள் மூன்று

1 )  புத்தகம் கேட்கும் 
       மகளின் கையில் 
       மயிலிறகு 



2 ) பாதங்கள் நிராகரித்த 
     ஒத்தையடி பாதையில் 
     பச்சைப் புல்



3) அபிட் எடுக்கத் தவறியதால் 
   ஆணிக்காயம்  
    பம்பரத்திற்கு







Tuesday, March 16, 2010

ஆயுள்ரேகை

அந்த இளைய பிணத்தின்
உள்ளங்கையில்
ஆழமாய்
நீளமாய்
ஆயுள் ரேகை

Sunday, March 14, 2010

காகம்


காஷ்மீரில்
குச்சி பொறுக்கிய காகம்
கூடு கட்டும்
கராச்சியில்

திருடனின் ரேகையில்


திருடனின் ரேகையில்
தெரியவேயில்லை
திருடனென்று
நன்றி : "செம்மலர்"

வடை சுற்றிய தாளில்

நன்றாயிருந்தது
வடை சுற்றிய தாளில்
கவிதை

நன்றி: "இளைஞர் முழக்கம்"

Monday, March 8, 2010

ஒற்றை கவிதை வரி


ஊர்ந்து
ஊர்ந்து
உறக்கத்தைக் கெடுத்தது
ஒற்றை கவிதை வரி

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...