Thursday, May 19, 2011

சிக்கனக்காரன்



மேட்டுத் தெரு
குப்பனை
சிக்கனக்காரனென்றுதான்
ஊரே சொல்லும்

சந்தைக்கு
நடந்தே போவான்
நடந்தே திரும்புவான்
இரண்டு மணி செலவழித்து
நான்கு ரூபாய் சேமிப்பான்

முக்கால் மணி நேரம் நடப்பான்
முத்து வீட்டில்
பேப்பர் படித்துவிட்டு
மீண்டும் ஒரு முக்கால் மணி நடந்து
சேமிப்பான் பேப்பர் காசை

மாத்திரை போட்டா
பத்தே நிமிடத்தில் பறந்து போகும்
தலைவலி

சொன்னால்
மாத்திரைக்கு ஒரு ரூபாயா என்பான்

பத்துப் போட்டு
மூன்று நாளில் குணமாவான்

நேரம் செலவழித்து
காசை சேமிக்கும்
மேட்டுத் தெரு
குப்பனை

சிக்கனக்காரனென்றுதான் 
ஊரே சொல்லும்



8 comments:

  1. சிக்கனக்காரன் பற்றி...ஒரு நையாண்டிக் கவிதை தந்துள்ளீர்கள்..
    மேட்டுத் தெருக் குப்பனை நினைத்துச் சிரித்தேன்.

    ReplyDelete
  2. சின்னப்புத்தி சிக்கனக்காரன்.

    ReplyDelete
  3. தோழர்கள் நிரூபன் மற்றும் ராஜ ராஜேஸ்வரி இருவருக்கும் அன்பும் நன்றியும்

    ReplyDelete
  4. இந்த குப்பன் சிக்கனக்காரனா கஞ்சனா?

    //முக்கால் மணி நேரம் நடப்பான்
    முத்து வீட்டில்
    பேப்பர் படித்துவிட்டு
    மீண்டும் ஒரு முக்கால் மணி நடந்து
    சேமிப்பான் பேப்பர் காசை//

    இப்படி இருப்பவன் நிச்சயம் (நிதமும் செய்திதாள் படித்து உலக விஷயங்களை அறிந்தவன்) முட்டாளாயிருக்க வாய்ப்பில்லை. எனவே அவனுக்கு கஞ்சதனத்திற்க்கும் சிக்கனத்திற்க்கும் வித்தியாசம் தெரிந்து இருக்காதா??????

    உங்களது கவிதையே முரணாக உள்ளது. :-))))

    ReplyDelete
  5. அவனுக்கு சிக்கனக் காரனென்று பேர்...

    ReplyDelete
  6. சார்
    முதல்ல கருத்து சொன்ன நிரூபன் & இராஜராஜேஸ்வரி இரண்டு பேருமே குப்பனை "சின்னப்புத்தி சிக்கனக்காரன்" அப்படின்னு தெளிவா வரையறை செஞ்சிருக்காங்க.

    அவங்களுக்கும் நீங்க நன்றின்னுதான் சொல்லிருக்கிங்க.

    நானு குப்பனை நல்லவன்னு சொல்லிருக்கிறேன். அதுக்கும் ஆமான்னு சொல்றீங்க


    தெளிவா குழப்புறீங்க சார்
    :-)))))))))

    ReplyDelete
  7. இவன் சிக்கனக்காரன், ஆனால் சின்னப்புத்திக்காரனில்லை. கொஞ்சம் common sense குறைந்தவன் எனலாம். சரியா ஐயா?

    ReplyDelete
  8. நேரத்தின் அருமை பற்றி பேச எத்தனித்த முயற்சி தோழா. அவ்வளவுதான்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...