Friday, May 27, 2011

எட்டாவது சனியன் மட்டும்





ஏழும்
நிற்காமல் போன
எரிச்சலை
நின்று துடைத்தது
எட்டாவது பேருந்து

ஜன்னலோர இருக்கை

குந்தவும்
அந்த தைல மரத்துக் கிளிகள்
“காச்”  ”மூச்” என்று கத்தவும்

அடச்சே...
இந்த
எட்டாவது சனியன் மட்டும்
ஏன்
நின்று தொலைத்ததோ?

14 comments:

  1. கத்துவது போலொரு கவிதை. Pleasant.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழர் மிருணா

    ReplyDelete
  3. //ஏழும்
    நிற்காமல் போன
    எரிச்சலை//

    இதன்மூலம் நீங்கள் அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்க்கும்போது அக்கிளிகளை கவனிக்கவில்லை, அல்லது கவனித்தும் பேருந்து நிற்காமல் போன எரிச்சலே மேலோங்கி இருந்தது.

    அந்த எட்டாவது பேருந்தும் நிற்காமல் சென்றிருந்தால், நீங்கள் அக்கிளிகளை கவனித்திருக்க மாட்டிர்கள் என்றே அவதானிக்கிறேன்.

    எனவே எட்டாவது பேருந்திற்க்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும், சனியன் என்று திட்டக்கூடாது.


    :-)))))))))))))))))))))



    சார் முதல்ல என்னையெல்லாம் தோழர் தோழர்ன்னு சொல்லுறதை நிறுத்துங்க சார்

    :-)))))

    கூச்சமா இருக்கு

    ReplyDelete
  4. கோபமாக இருக்கிறீர்களா?

    ReplyDelete
  5. பெம்மு குட்டிக்கு....
    முதலில் இது கவிதை
    நூலிடையாள் என்றால் உடனே நூலை எடுத்துக்கொண்டு அளந்து பார்க்கவெல்லாம் வரக் கூடாது

    யார் பேருந்தை திட்டியது? கிளிகளின் சப்த்த இனிமையை காட்ட மட்டுமே பேருந்து ஒரு கருவியாகப் பாவிக்கப் படுகிறது.

    தோழர் என்பது உங்களுக்கு கூச்சமாக இருப்பது உங்கள் உரிமை. ஆனால் தோழர் என்ற பதம் உங்களுக்கு கீழ்மையாகப் படுமானால் நான் உங்களோடு பேச எதுவுமில்லை

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா. எதுக்குங்க அய்யா கோவமெல்லாம்?

    ReplyDelete
  7. சார்
    இதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க?

    ஒரு இலக்கிய பத்திரிக்கைய 3 மணி நேரமா படிச்சேன். அதோட(இலக்கிய ஆராச்சியோட) எபக்ட்தான் அந்த கமெண்ட். அதனாலதான் ரொம்ப உஷாரா ஸ்மைலியெல்லாம் போட்டிருந்தேன். :-)))))))))

    (ஒரு சிறுகதையிலுள்ள ஒரேயெரு வார்த்தையை வச்சிக்கிட்டு இலக்கியம்கிற பேருல 4 நாளா டார்ச்சர் பண்ணுணாங்க கூகுள் பஸுல)

    :-)))))))))

    தோழர் என்ற பதம் நிச்சயமாக கீழ்மையாகப்படவில்லை. நான் எழுதியிருந்ததை நீங்கள் தவறாக அர்த்தம் செய்துகொண்டிர்கள் என்று நினைக்கிறேன். நான் சொன்னது "என்னையெல்லாம்".

    இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் (அடக்கடவுளே....மறுபடியும் இலக்கிய ஆராச்சியா அப்படின்னு என்னை திட்டாதீங்க !!!!!!!!!)உங்களை நான் குரு அப்படிங்கிற ஸ்தானத்தில வைத்திருக்கிறேன். நீங்க கேள்வி கேட்டா எந்திருச்சி நின்னு கையை கட்டிக்கொண்டு பதில் சொல்லும் மாணவனின் மனநிலமையில் தான் இருக்கிறேன். அதனாலதான் தோழர்னு சொல்லாதீங்கன்னு சொன்னேன்.

    :-)))))))))))

    ReplyDelete
  8. எப்போதும் படைப்பாளியாக இருப்பது கொடுப்பினைதான். அதனால்தான் பல இம்சைகள்கூட. இப்படி நான் பலவற்றை ரசித்து பேருந்தை மட்டுமல்ல அதனால் உரிய நேரத்திற்கு செல்லாமல்கூட பல இடர்களைச் சந்திருக்கிறேன். ஆனாலும் இந்தக் கவிதை அந்த கத்தும் கிளிகளைப் போலவே அழகு. தொடர்பணிகள். இனி தொடர்ந்து வாய்ப்பமைவில் அவசியம் வருவேன். பகிர்வேன். அழைப்பிதழ் கிடைத்தது. அழைப்பிதழின் உள்ளடக்கம் மனதை ஈர்த்தது. அழைப்பிதழ் தேர்வும் அதன் உள்ளடக்கமும் வெகுநேர்த்தி.

    ReplyDelete
  9. \\\சார்
    இதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க?

    ஒரு இலக்கிய பத்திரிக்கைய 3 மணி நேரமா படிச்சேன். அதோட(இலக்கிய ஆராச்சியோட) எபக்ட்தான் அந்த கமெண்ட். அதனாலதான் ரொம்ப உஷாரா ஸ்மைலியெல்லாம் போட்டிருந்தேன். :-)))))))))

    (ஒரு சிறுகதையிலுள்ள ஒரேயெரு வார்த்தையை வச்சிக்கிட்டு இலக்கியம்கிற பேருல 4 நாளா டார்ச்சர் பண்ணுணாங்க கூகுள் பஸுல)

    :-)))))))))

    தோழர் என்ற பதம் நிச்சயமாக கீழ்மையாகப்படவில்லை. நான் எழுதியிருந்ததை நீங்கள் தவறாக அர்த்தம் செய்துகொண்டிர்கள் என்று நினைக்கிறேன். நான் சொன்னது "என்னையெல்லாம்".

    இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் (அடக்கடவுளே....மறுபடியும் இலக்கிய ஆராச்சியா அப்படின்னு என்னை திட்டாதீங்க !!!!!!!!!)உங்களை நான் குரு அப்படிங்கிற ஸ்தானத்தில வைத்திருக்கிறேன். நீங்க கேள்வி கேட்டா எந்திருச்சி நின்னு கையை கட்டிக்கொண்டு பதில் சொல்லும் மாணவனின் மனநிலமையில் தான் இருக்கிறேன். அதனாலதான் தோழர்னு சொல்லாதீங்கன்னு சொன்னேன்.

    :-)))))))))))///

    நான் கோபப் படவில்லை என்பது ஒன்று.

    படைப்பு சார்ந்து வரும் எந்த விமர்சனத்தையும் ஒரு புன்னகையோடு கேட்டு சரியெனில் ஏற்றும் தேவைப் படில் விவாதிக்கவும் செய்பவன்.

    நீங்கள் சொல்வது போல் த்ன்னடக்கம்தான் காரணமெனில் அது தேவையில்லை. நீங்களும் தோழர்தான்

    ReplyDelete
  10. நன்றி ஹரணி. ஒரு வாசகனாய் எனது விருப்பம், நீங்கள் அவசியம் தொடர்ந்து எழுத வேண்டும்

    ReplyDelete
  11. பேருந்துக்காக நின்று சலிப்படைந்த உள்ளத்தின் யதார்த்தமான மனநிலையினைக் கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள். அருமை ஐயா.

    ReplyDelete
  12. மிக்க நன்றி நிரூபன்

    ReplyDelete
  13. பேருந்துவின் இறைச்சலை பொருத்துக்கொண்டீர்கள். ஆனால், கிளிகளின் கூவல்கள் ஏன் உங்களுக்கு இனிக்கவில்லை...

    ReplyDelete
  14. யார் சொன்னது அப்படி? கவிதையை அருள்கூர்ந்து மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...