Tuesday, October 31, 2023
இப்படிக்கூட ஐ லவ் யூ சொல்லலாமா கார்த்திக்
குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டால்
”Save the children" அமைப்பின் தலைவர் ஜேசன் லீ தருகிற புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது
Saturday, October 28, 2023
அந்தக் கிழவரையும் எதிர்கொண்டுதான் வந்திருக்கிறோம்
ஒன்று தெரியுமா ரவி
சென்னை வருகிறார் காந்தி
Friday, October 27, 2023
அத இப்படி புரியற மாதிரி தமிழ்ல சொல்லி இருக்கலாம்ல
டக்கர்
சிதார்த் நடித்த படம்
அதில் ஒரு காட்சி
பாரதிக்கும் வ.ரா விற்கும் இடையே 113 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அவர்களுக்கிடையேயான முதல் உரையாடலை நினைவிற்கு கொண்டு வந்தது
பாரதியைச் சந்திக்க வ.ரா வந்திருப்பார்
பாரதியார் மாடியிலிருந்து கீழே வருகிறார்
பாரதியோடு ஆங்கிலத்தில் பேசினால் மகிழ்வார் என்று கருதிய வ.ரா ஆங்கிலத்தில் பேசுகிறார்
பாரதி திரும்புகிறார்
வ.ரா அழைக்கிறார்
பாரதி கேட்கிறார்,
"இன்னும் எத்தனை காலத்திற்குதான் ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசுவீர்கள்?"
இப்போது படத்திற்கு வருவோம்
ஒரு முடிதிருத்தும் கடைக்கு சித்தார்த் வருகிறார்
ஊழியரிடம்
ஒரு படத்தைக் காட்டுவார்
அதில் சன்னமாக முறுக்கிய மீசையும் குறுந்தாடியுமாக ஒருவர்
அதைக் காட்டி
இந்த முஷ்டேச் இருக்கட்டும்
பியர்ட் எடுத்திடு
அந்தத் தம்பி முடித்திட்டு
எப்படிங்கண்ணா இருக்கு என்று கேட்பார்
பார்த்த சித்தார்த் அதிர்ந்திடுவார்
மீசையை எடுத்துவிட்டு தாடியை வைத்திருப்பார்
அடிக்க ஆரம்பிப்பார்
முதலாளி தலையிடுவார்
இந்தண்ணன்தான் பியர்ட வச்சிட்டு முஷ்டேச்ச எடுக்க சொன்னார்
அதத்தான் செஞ்சேன்
அதான பியர்ட வச்சுட்டு முஷ்டேச்சதான எடுத்திருக்கான் நீங்க கேட்டபடி
பியர்ட்னா தாடின்னும் முஷ்டேச்னா மீசைன்னும் புரிய வைப்பார் சித்தார்த்
முதலாளி சொல்வார்
அத இப்படி புரியற மாதிரி தமிழ்ல சொல்லி இருக்கலாம்ல
அன்புடுத்தி அலைவோம்
நம்புங்கள்
நடந்திருக்கிறது
ஆமாம்,
உத்திரப் பிரதேசம் மாநிலம்
தியோரியா மாவட்டம்
புஜோலி கிராமம்
நவராத்திரியின் ஒரு கொண்டாட்டமான “கன்யா பூஜை” கொண்டாடப் படுகிறது
1500 மக்கள்
சிறப்பான விருந்து
குழந்தைகளுக்கு உடைகள், பரிசுகள்
இதிலென்ன நீ கொண்டாடவும் பாஜக அதிர்ச்சியடையவும் இருக்கிறது
இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட 1500 மக்களும் இந்துக்கள்
விழாவை ஏற்பாடு செய்து நடத்தியவர் இஸ்லாமியர்
மும்பை
நவராத்திரியின் இன்னொரு முக்கிய நிகழ்வான “கர்பா”
மும்பையின் மூன்று பிரபல இஸ்லாமியப் பாடகர்கள் துர்காவை வணங்கிவிட்டு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்
இஸ்லாமியர்களும் இந்துக்களுமாக பங்கேற்கிறார்கள்
சத்தீஸ்கரிலும் இஸ்லாமியர்கள் ”மா தண்டேஸ்வரி” என்ற பிரபலமான இந்துக் கோவிலுக்குள் சென்று நெய்விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்கள்
இந்தச் செய்திகளோடு வயிற்றில் பால் வார்த்திருக்கிறது 27.10.2023 தீக்கதிரின் மூன்றாம் பக்கம்
அன்புடுத்தி அலைவோம்
Wednesday, October 11, 2023
ஒருவரும் கை உயர்த்தவில்லை
சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒன்றாக இருக்கிற மக்களை பிளவுபடுத்தாதா ராகுல்
Tuesday, October 10, 2023
தேர்தலின்போது குஜராத் செல்லுங்கள்
அன்பின் முதல்வருக்கு,
Sunday, October 8, 2023
நான் உள்ளிட்ட தமிழ் மக்களின் நேயர் விருப்பம்
“எங்கு சென்றாலும் தமிழ்நாட்டை மறக்க முடியாதவராகவே பிரதமர் இருக்கிறார்”
என்று அவருக்கே உரிய தொனியில் நக்கல் செய்திருக்கிறார் முதல்வர்
நக்கல்தான் என்றாலும் அதற்குள் குழைந்து கிடக்கும் கோவத்தின் வெப்பத்தை தமிழ் மக்கள் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்
இன்னும் சரியாக சொல்வதெனில்,
அவரது கோவம் குழைந்த பகடிக்கு நான் உள்ளிட்ட தமிழர்கள் ரசிகர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்
அவர்
இன்னும் உக்கிரமாக
இன்னும் பேரதிக நக்கலைக் குழைத்து
பிரதமரை எதிர்கொள்ள வேண்டும் என்பது
நான் உள்ளிட்ட தமிழ் மக்களின் நேயர் விருப்பம்
தமிழ் மண்ணில் உள்ள “இந்து அறநிலையத் துறை” குறித்து ஏதும் அறியாதவராக
கிட்டத்தட்ட அண்ணாமலைக்கும் திரு H.ராஜா அளவிற்கும் இறங்கி பிரதமர் பேசுவது
அவர் நமக்கும் பிரதமர் என்பதால் கொஞ்சம் வலியைக் கொடுக்கிறது
அசிங்கமாக இருக்கிறது
தெற்குப் பகுதியில் மக்கள் அசிங்கமாகத்தான் இதைப் பார்ப்பார்கள் என்பது அவருக்கும் தெரியும்
பிறகு ஏன் அசிங்கப்படுகிறோம் என்று தெரிந்தும் இப்படி பேசுகிறார்?
இது வடக்கிற்கான அவரது பிரச்சார யுக்தி
தெற்கில் இது பொய் என்று புலப்படுவது மாதிரி வடக்கில் புலப்படாது என்பது அவருக்குத் தெரியும்
கோவிலை திமுக ஆட்டையப் போடுகிறது என்று சொன்னால் தெற்கில் சிரிப்பார்கள்
அடப் போயா என்று நக்கலிப்பார்கள்
ஆனால் வடக்கில் அப்படியா என்று வியப்பார்கள்
அப்படியாகவே அவர்களை படாத பாடுபட்டு பாதுகாத்து வருகிறார்கள்
அவர்களிடம்
எங்களை விட்டால் உங்கள் கோவிலுக்கு பாதுகாப்பில்லை என்கிறார்
ஆகவே எங்களைத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்
இந்தியாவை வெற்றி கொள்ளாமல் மாநிலத்தை மட்டும் வென்றால் அவர்கள்
ரவியை அனுப்புவார்கள்
தமிழிசையை அனுப்புவார்கள்
பெரியாரை
அம்பேத்காரை
வைகுந்தரை
நாராயண குருவை
அவர்களுடைய பாஷையில் அவர்களிடம் கொண்டுபோக வேண்டும்
Saturday, October 7, 2023
ராகுலைப் பார்த்து பயப்பட ஆரம்பித்துவிட்டது பாஜக
அக்ரானி பத்திரிக்கையில் 1945 ஆண்டு வெளி வந்த கார்டூன் படத்தை தோழர் ஷாஜி (Shahjahan R) தனது முகநூல் பக்கத்தில் வைத்திருக்கிறார்
Friday, October 6, 2023
அனைவருக்கும் இது புரிந்துவிடக் கூடாது என்பதில்
அன்பின் முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்
“வள்ளலார் 200” நிகழ்வில் உங்களது உரையைக் கேட்டேன்
அதில் இருந்தே இந்தக் கடிதத்தைத் துவங்கிவிடலாம் என்றே கருதுகிறேன்
முதலில் உங்களது அந்த உரை குறித்து ஒன்று சொல்லிவிட வேண்டும்
அந்த உரையில் உங்களது செழுமையான ஹோம் ஒர்க்கைக் காணா முடிகிறது
வழக்கமாக உங்களது உரையை கிண்டலடிப்பவர்களுக்கு
அடிகளாரின்24 வது பாடலான
“சாதியயிலே மதங்களிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே”
என்பதை அச்சுப் பிசகாமல் நீங்கள் கூரியது உங்கள் எதிரிகளுக்கு ஆச்சரியத்தையும் எரிச்சலையும் தந்திருக்கக் கூடும்
எங்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது
நீங்கள் சொன்னதுதான்
தமிழ்நாட்டுக்காரர்கள் பெரியாரையும் எடுக்கிறார்கள் வள்ளலாரையும் எடுக்கிறார்கள் என்பதுதான் நமது எதிரிகளுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது
அந்த உரையின் ஓரிடத்தில்
எந்த மாநிலத்திற்குப் போனாலும் பிரதமர் தமிழ்நாடு குறித்தே பேசுகிறார் என்று கூறினீர்கள்
ஆமாம் சார்,
தமிழ்நாடு பிரதமரை தூங்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை
ஒரு மாநிலத்தில் உரையாற்றும்போது இன்னொரு மாநிலத்தைக் குறித்து பிரதமர் விமர்சிப்பது சரியல்ல என்று மிகச் சரியாக சொன்னீர்கள்
இந்த இடத்தைதான் இந்தக் கடிதத்திற்கான சரியான இடமாக நான் பார்க்கிறேன்
அவர் இந்தியா முழுமைக்கும் பிரதமர் என்பதை அவர் உணராத போதும் அவர்தான் நமக்கும் பிரதமர் என்பதை தமிழ்நாடு உணர்ந்தே இருக்கிறது
நமக்கும் பிரதமரான அவரே பிற மாநிலத்தில் நிற்கும்போது நம்மை விமர்சிப்பது தவறு
அதுவும் தப்புத் தப்பாக விமர்சிப்பது என்பது பெருந்தவறு
அப்படி இருக்க,
உத்திரப் பிரதேசத்தில் இருந்து
அந்த மாநிலத்தின் தற்போதைய முதல்வரின் படத்தினை அட்டைப் படமாகக் கொண்ட இரண்டு புத்தகங்கள் நமது பள்ளிகளுக்கு அனுப்பப் படுகின்றன
ஒரு கடிதமும் இருக்கிறது
அனைத்தும் இந்தியில்
அந்தக் கடிதத்தை கூகிலில் வைத்து மொழி பெயர்த்தால்
யோகி
பெண்களுக்காக,
விவசாயிகளுக்காக
இளைஞர்களுக்காக
புவிசார்ந்த சகிப்புத் தன்மைக்காக
பாடுபட்டு வருகிறார் என்று இருக்கிறது
இவை எல்லாம் பொய் என்பது ஒரு புறம் இருக்கட்டும்
அவர் எப்படி இருந்தால் நமக்கென்ன?
அதை ஏன் நமக்கு அனுப்ப வேண்டும்
இரண்டு அய்யங்கள் எம் அன்பிற்குரிய முதல்வர் அவர்களே
ஒன்று யோகி இப்போதோ அடுத்தோ பிரதமர் வேட்பாளராக நிற்கக் கூடும்
அதற்கான தயாரிப்பாகவும் இருக்கக் கூடும்
அல்லது,
தமிழ்நாட்டில் மதக் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இருக்கக் கூடும்
இவை இரண்டும் யூகம்தான்
வெறுமனே யோகியை இந்திரன் சந்திரன் என்றுகூட இருக்கலாம்
இருந்துவிட்டு போகட்டும்
அதை ஏன் நமக்கு அனுப்ப வேண்டும்
இவை இந்தியில் இருப்பதை
வெறும் திணிப்பாகவும் கொள்ளலாம்
இந்தியில் அனுப்பினால் யார் படிப்பார்கள். கிறுக்குத் தனம் என்று அலட்சியமாகவும் தள்ளலாம்
வாலி சிஹாவிற்கு தந்தை அம்பேத்கர் எழுதிய கடிதத்தில்
”பிக்குகள் மக்களின் மொழியை அறிந்திருக்க வில்லை”
என்று குறிப்பிடுவார்
இவர்கள் நம் மொழியில் அனுப்பாமல் இந்தியில் அனுப்புவதைக் கூட மொழி அரசியலாகவே நான் பார்க்கிறேன்
அனைவருக்கும் இது புரிந்துவிடக் கூடாது என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்
அனைவரும் படித்துவிட்டால் கொந்தளிப்பு கிளம்பும் என்பதை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள்
அவர்கள் அனுதாபிகள் 10 பேருக்குப் போனால் போதும்
அவர்கள் தேடுவார்கள்
தொடர்பு கொள்வார்கள்
அவர்களை அடையாளம் கண்டு அணிதிரட்டலாம் என்ற ஏற்பாடாகவே இதை நான் அய்யுறுகிறேன்
தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கிறேன் சார்
கத்திக் கொண்டும் இருப்பேன் ஸ்டாலின் சார்
நன்றி,
அன்புடன்,
இரா.எட்வின்
06.10.2023
Wednesday, October 4, 2023
தைரியமாக சாகலாம்
அன்பின் முதல்வர் அவர்களுக்கு,
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
தேர்தல் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதி உண்டு. தபால் மூலம் வாக்களிப்பதில் நிறைய சிரமங்க...
-
ஜார் மன்னர் தன் குடும்பத்திற்கான சொத்துக்களை கொஞ்சமும் முறையற்ற வகையில் சேர்த்துக்கொண்டிருந்த நேரம். அவரது மனைவி ரியல் எஸ்டேட் வணிகத்தில் ...