Tuesday, October 31, 2023

குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டால்

 

”Save the children" அமைப்பின் தலைவர் ஜேசன் லீ தருகிற புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது
2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து கணக்கில் கொள்ளப்பட்ட 22 நாடுகளில் மொத்தம் 2674 குழந்தைகளும்
2021 ஆம் ஆண்டில் கணக்கில் கொள்ளப்பட்ட 24 நாடுகளில் 2515 குழந்தைகளும்
2022 ஆம் ஆண்டு அதே 24 நாடுகளில் 2985 குழந்தைகளும்
கொல்லப்பட்டிருக்கிறார்கள்
ஆனால் 07.10.2023 முதல் 29.10.2023 வரை மட்டும்
காசாவில் மட்டும் 3300 குழந்தைகளும்
மேற்குக் கரையில் மட்டும் 36 குழந்தைகளும் கொல்லப்படிருப்பதாக அவர் கூறுகிறார்
அய்யங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன
ஏற்கனவே அங்கு இளைஞர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு
இப்போது ஏறத்தாழ 3500 என்று சொல்லப்படும் எண்ணிக்கை கூடக்கூடும்
ஏற்கனவே இளாஇஞர்கள் இல்லை
இப்போது குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டால்
ஒரு கட்டத்தில் காசாவில் மக்களே இல்லை என்றாகும் ஆபத்து இருக்கிறது
போக வருடத்திற்கு உலகில் சராசரியாக 3000 குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள் என்ற 31.10.2023 நாளிட்ட தீக்கதிர் தகவல் எழுப்புகிற அச்சம்
இது இப்படி எனில்,
வருடா வருடம் நோயினால், சத்துக் குறைபாட்டினால், விபத்தினால் இறக்கிற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு
இத்தனைக் குழந்தைகள் வருடா வருடம் ஏதோ ஒரு வகையில் இறப்பதை சகிப்பது குற்றம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...