Monday, November 26, 2018

இதுமாதிரியான அதிகாரம் என்பது 58 வயதுவரைதான்

திரு.தர்மராஜ் ஒரு காவலர்.21.11.2018 அன்று அவரது தாயாருக்கு நினைவுநாள். அவருக்கு திதி கொடுக்கவேண்டும் என்பதற்காக தனது அதிகாரியான திரு.ரவிக்குமாரிடம் விடுப்பு கேட்கிறார்.
விடுப்பு மறுக்கப்படுகிறது.
பணிக்கு வருகிறார். மறுவிக்கொண்டே இருந்தவர் ஒரு புள்ளியில் தனது வாக்கி டாக்கா மூலம் இது குறித்து கண்காணிப்பு அறைக்கு புகார் தருகிறார். அதன்பிறகு கொஞ்சம் ஆசுவாசப் படுகிறார்.
இதன்பிறகு ரவிக்குமார் மறுவத் தொடங்குகிறார்
அன்றையப் பொழுதின் ஒருபுள்ளியில் ரவிக்குமார் சாலையை நிர்வகித்துக் கொண்டிருந்தபோது அந்தவழியாக தனது இரண்டு சக்கர வாகனத்தில் தர்மராஜ் வருகிறார்
ரவி ஓடிச்சென்று அவரை எட்டி உதைக்கிறார்
தர்மராஜ் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்
அவரது வாயில் மதுவை ஊற்றி அவர் போதையில் இருந்ததாக மருத்துவ சான்று பெற்று அவரை பணியிட்ட நீக்கம் செய்ய வைத்து இருக்கிறார்
சாலை ஓரத்தில் இருந்த ஒரு கடையின் சிசிவி கேமராவில் ரவி எட்டிஉதைத்த காட்சி பதிவாகி இருக்கவே உண்மை வெளியே வருகிறது
தர்மராஜ் பணிக்குத் திரும்பி இருக்கிறார்
ரவி பணியிட மாற்றம் பெருகிறார்
ரெண்டு விஷயங்கள்பொது
1) பணியிட மாற்றம் என்பது போதவே போதாது. அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து அவர்மீது கொலைவழக்கு பதிய வேண்டும்
2) இதுமாதிரியான அதிகாரம் என்பது 58 வயதுவரைதான் என்பதை ரவி மாதிரி அதிகாரிகள் உணர வேண்டும்
25.11.18
பிற்பகல் 3.05

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...