Monday, November 12, 2018

செம சுள்ளாப்பு

மூன்று நாட்களாக லேஷந்த் சார் மருத்துவமனையில் இருந்தார். டெங்கு என்று பயந்து போனோம்.
அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த அன்று பார்த்துவிட்டு வந்து விழுந்தவன்தான் எனக்கு டெங்கோ என்றோ அச்சம் வந்துவிட்டது
இருவருக்கும் டெங்கு இல்லை
இந்த நிலையில் சார் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார்.
அவரது வீட்டிற்குப் போய் சற்று நேரத்திற்கெல்லாம் அழுதுகொண்டே இங்கு வந்துவிட்டார்.
என்ன வேணும் தம்பிக்கு?
சொல்லாமல் அழுதார்.
“அவனுக்கு ரெய்ன் கோட் வேணுமாம்” கீர்த்தனா சொன்னாள்.
மதியம் வண்டியை எடுத்துக் கொண்டு ஒரு வழியாய் ஆதித்தியா மால் போனேன்
ஒரு வழியாய் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது, வண்டியின் சைட் ஸ்டாண்ட் போடக்கூட முடியவில்லை, அப்படியொரு பலஹீனம்.
ரெய்ன்கோட் இல்லை என்றதும் திரும்பினால் அண்ணனும் தங்கையுமாய் இரண்டு குழந்தைகள் உள்ளே நுழைந்தார்கள்
நம்மாலதான் சும்மா இருக்க முடியாதே,
யாருடா இது?
பாப்பா?
யாரோட பாப்பா?
என்னோட பாப்பா.
ஒங்க பாப்பாவ நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடவா?
சரினு சொன்னவன் அவகிட்ட திரும்பி,
“தாத்தாவோட போடி”
பய நம்மவிட சுள்ளாப்புதானு நினைக்கறதுக்குள்ள
அவனைக் கட்டிப் புடிச்சிட்டு அழ ஆரம்பிச்சுட்டா.
பதறிப்போய் “ ஏன் சாமி, ஏன் சாமி” நு கேட்கவே
தாத்தா கருப்பா இருக்காங்க பயமா இருக்குங்கறா
சரி சரி கூட்டிட்டு போகல நு சொல்லிட்டு கிளம்பறேன்
”தாத்தா”
திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணடிச்சுட்டே டாட்டா காட்டுறா
செம சுள்ளாப்பு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...