Tuesday, November 13, 2018

பிரிதின்நோய் தம்நோய்போல்....

அன்வர் பாட்ஷா என்ற இளைஞன் நேற்று பள்ளப்பட்டியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு வயது இருபது. பேருந்து வாடிப்பட்டி அருகே வந்தபொழுது அவனுக்கு வலிப்பு வந்திருக்கிறது. வலிப்பு அவனுக்கு அடிக்கடி வரக்கூடியதுதானாம்.
வலிப்பு வந்ததும் பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை பேருந்தை நிறுத்தி இறக்கிவிட்டு சென்று விட்டார்களாம்.
வலிப்பால் துடித்துக் கொண்டிருந்தவனை இறக்கிவிடுவது என்பது எப்படி?
பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை கீழே தள்ளிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
கொடுமை என்னவென்றால் அந்தப் பேருந்தில் ஏறத்தாழ முப்பதுபேர் பயணம் செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள்.
அடிக்கடி வலிப்பு வருகிற வழக்கம் இருக்கிறது என்றால் இத்தகைய பயணங்களின் பொழுது அதை அந்த இளைஞன் எதிர்பார்த்திருக்கவே செய்வான். எனில், அவனது சட்டைப் பையிலோ அல்லது கைப்பையிலோ அதற்கான மாத்திரைகள் இருந்திருக்கக் கூடும்.
அதைத் தேடிப் பார்த்து அதற்கான மாத்திரைகள் இருந்திருப்பின் யாரேனும் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அந்த மாத்திரையோடு ஒரே ஒரு முடக்கு தண்ணீரை மட்டும் செலவு செய்திருந்தால் போதும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.
அப்படி மாத்திரைகள் இல்லாத பட்சத்தில் போகிற வழியில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவ மனையில் நிறுத்தி சேர்ப்பித்துவிட்டுப் போயிருந்தாலும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.
யாரேனும் ஒரு பயணி அவனோடு கொஞ்ச நேரம் இருந்திருந்தால் போதும் அவனது முகவரி கேட்டு அவனை அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கலாம்.
“பெற்றால்தான் பிள்ளையா?” என்றெல்லாம் கேட்கிறோமே அந்தப் பேருந்தில் அந்த வயது குழந்தையின் பெற்றோர்கள் யாருமே இல்லாது போயிருந்தார்களா?
வழக்கமாக குப்பைகளைக் கூட்டி சுத்தம் செய்யும் வழக்கம் இல்லாத அந்த அரசுப் பேருந்தில் அன்று மனிதத்தை மட்டும் சுத்தமாக வழித்து துடைத்து விட்டார்களா?
கீழே கிடந்த அந்தக் குழந்தையை அவனைக் கடந்துபோன ஒருவரும் சரியாக கண்டு கொள்ளாது போகவே அவன் செத்துப் போயிருக்கிறான்.
மீண்டும் சொல்கிறேன் அவனுக்கு வயது இருபது.
அவனை நிராகரித்து கடந்துபோன ஒவ்வொருவரும் கொலைகாரர்களே.
அப்படி அவசரமாய் அவனைக் கடந்து போய் என்னத்தை சாதித்து விட்டார்கள்?
இது இப்படி இருக்க எல்லா ஓட்டுநர்களுமே இப்படித்தான். எல்லா நடத்துநர்களுமே இப்படித்தான். எல்லாப் பயணிகளுமே இப்படித்தான் என்றெல்லாம் கருதிவிடக் கூடாது.
ஆறேழு ஆண்டுகள் இருக்கும். அப்போதெல்லாம் கள்ளக்குறிச்சியில் இருந்து திருச்சி செல்லும் அரசுப் பேருந்து தடம் எண் 329 இல்தான் பள்ளிக்கு போவது வழக்கம்.
அந்த வகையில் அந்தப் பேருந்தின் ஓட்டுநர்கள் இயக்குநர்கள் அனைவரையும் தெரியும். மாலையும் பலநேரம் அந்தப் பேருந்துதான். அதுபோல ஒருநாள் மாளை பெரம்பலூரில் இறங்கி ஓட்டுநர் சுப்ரமணியன் மற்றும் நடத்துநர் முருகன் ஆகியோரோடு தேநீர்ப் பருகிக் கொண்டிருக்கிறேன்.
அப்போது அங்கு வந்த இளம் பெண் ஒருவர் சுப்ரமணியன் காலைத் தொட்டு வணங்கவே அவர் ஒதுங்கி “நல்லா இரு சாமி. பாப்பா எப்படி இருக்கு?” என்றார். “நல்லா இருக்காங்கண்ணா. மாமியார் வச்சிருக்காங்க அவள”
“ஊருக்கா சாமி. உக்காருப்பா வரேன்” என்கிறார்.
“சொந்தக்காரப் பொண்ணா மணி?”
“இல்லீங்க சார்” என்றவர் கூறியது இதுதான்,
ஒருநாள் மதியம் ஷிஃப்டில் இந்தப் பெண் அவரது குழந்தையோடு திருச்சிக்குப் போயிருக்கிறார். குழந்தை வீர் வீரென்று அழுதிருக்கிறள். அது வழமையான குழந்தையின் அழுகையாகப் படவில்லை.
அழுது அழுது முகமெல்லாம் வீங்கி சிவந்து எங்கே செத்துவிடுமோ என்ற பயம் அனைவருக்கும் வந்துவிட்டது. சமயபுரத்திற்கு அருகில் சாலையின் வலதுபுறம் SRM மருத்துவக் கல்லூரி இருக்கிறது. சுப்ரமணி பேருந்தை செக்யூரிட்டி தடுக்க தடுக்க உள்ளே விட்டு ஸ்ட்ரெச்சர் ஏற்பாடு செய்து வந்ததும் தனது எண்ணைக் கொடுத்துவிட்டு அழைக்குமாறு சொல்லிவிட்டு பேருந்தைத் திருப்பி இருக்கிறார்.
இரண்டு இளைஞர்கள் உதவிக்காக இறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஒன்றும் இல்லை குழந்தையின் காதில் எறும்பு புகுந்திருக்கிறது. தகவல் சுப்ரமணிக்குப் போயிருக்கிறது. அந்தப் பெண்தான் அவர்.
என்ன சொல்வது,
அறிவினான் ஆகுவது உண்டோ
அன்வர் பாட்ஷா என்ற இளைஞன் நேற்று பள்ளப்பட்டியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு வயது இருபது. பேருந்து வாடிப்பட்டி அருகே வந்தபொழுது அவனுக்கு வலிப்பு வந்திருக்கிறது. வலிப்பு அவனுக்கு அடிக்கடி வரக்கூடியதுதானாம்.
வலிப்பு வந்ததும் பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை பேருந்தை நிறுத்தி இறக்கிவிட்டு சென்று விட்டார்களாம்.
வலிப்பால் துடித்துக் கொண்டிருந்தவனை இறக்கிவிடுவது என்பது எப்படி?
பேருந்தை நிறுத்தி அந்த இளைஞனை கீழே தள்ளிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
கொடுமை என்னவென்றால் அந்தப் பேருந்தில் ஏறத்தாழ முப்பதுபேர் பயணம் செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள்.
அடிக்கடி வலிப்பு வருகிற வழக்கம் இருக்கிறது என்றால் இத்தகைய பயணங்களின் பொழுது அதை அந்த இளைஞன் எதிர்பார்த்திருக்கவே செய்வான். எனில், அவனது சட்டைப் பையிலோ அல்லது கைப்பையிலோ அதற்கான மாத்திரைகள் இருந்திருக்கக் கூடும்.
அதைத் தேடிப் பார்த்து அதற்கான மாத்திரைகள் இருந்திருப்பின் யாரேனும் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அந்த மாத்திரையோடு ஒரே ஒரு முடக்கு தண்ணீரை மட்டும் செலவு செய்திருந்தால் போதும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.
அப்படி மாத்திரைகள் இல்லாத பட்சத்தில் போகிற வழியில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவ மனையில் நிறுத்தி சேர்ப்பித்துவிட்டுப் போயிருந்தாலும் அந்தப் பிள்ளை பிழைத்திருப்பான்.
யாரேனும் ஒரு பயணி அவனோடு கொஞ்ச நேரம் இருந்திருந்தால் போதும் அவனது முகவரி கேட்டு அவனை அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கலாம்.
“பெற்றால்தான் பிள்ளையா?” என்றெல்லாம் கேட்கிறோமே அந்தப் பேருந்தில் அந்த வயது குழந்தையின் பெற்றோர்கள் யாருமே இல்லாது போயிருந்தார்களா?
வழக்கமாக குப்பைகளைக் கூட்டி சுத்தம் செய்யும் வழக்கம் இல்லாத அந்த அரசுப் பேருந்தில் அன்று மனிதத்தை மட்டும் சுத்தமாக வழித்து துடைத்து விட்டார்களா?
கீழே கிடந்த அந்தக் குழந்தையை அவனைக் கடந்துபோன ஒருவரும் சரியாக கண்டு கொள்ளாது போகவே அவன் செத்துப் போயிருக்கிறான்.
மீண்டும் சொல்கிறேன் அவனுக்கு வயது இருபது.
அவனை நிராகரித்து கடந்துபோன ஒவ்வொருவரும் கொலைகாரர்களே.
அப்படி அவசரமாய் அவனைக் கடந்து போய் என்னத்தை சாதித்து விட்டார்கள்?
இது இப்படி இருக்க எல்லா ஓட்டுநர்களுமே இப்படித்தான். எல்லா நடத்துநர்களுமே இப்படித்தான். எல்லாப் பயணிகளுமே இப்படித்தான் என்றெல்லாம் கருதிவிடக் கூடாது.
ஆறேழு ஆண்டுகள் இருக்கும். அப்போதெல்லாம் கள்ளக்குறிச்சியில் இருந்து திருச்சி செல்லும் அரசுப் பேருந்து தடம் எண் 329 இல்தான் பள்ளிக்கு போவது வழக்கம்.
அந்த வகையில் அந்தப் பேருந்தின் ஓட்டுநர்கள் இயக்குநர்கள் அனைவரையும் தெரியும். மாலையும் பலநேரம் அந்தப் பேருந்துதான். அதுபோல ஒருநாள் மாளை பெரம்பலூரில் இறங்கி ஓட்டுநர் சுப்ரமணியன் மற்றும் நடத்துநர் முருகன் ஆகியோரோடு தேநீர்ப் பருகிக் கொண்டிருக்கிறேன்.
அப்போது அங்கு வந்த இளம் பெண் ஒருவர் சுப்ரமணியன் காலைத் தொட்டு வணங்கவே அவர் ஒதுங்கி “நல்லா இரு சாமி. பாப்பா எப்படி இருக்கு?” என்றார். “நல்லா இருக்காங்கண்ணா. மாமியார் வச்சிருக்காங்க அவள”
“ஊருக்கா சாமி. உக்காருப்பா வரேன்” என்கிறார்.
“சொந்தக்காரப் பொண்ணா மணி?”
“இல்லீங்க சார்” என்றவர் கூறியது இதுதான்,
ஒருநாள் மதியம் ஷிஃப்டில் இந்தப் பெண் அவரது குழந்தையோடு திருச்சிக்குப் போயிருக்கிறார். குழந்தை வீர் வீரென்று அழுதிருக்கிறள். அது வழமையான குழந்தையின் அழுகையாகப் படவில்லை.
அழுது அழுது முகமெல்லாம் வீங்கி சிவந்து எங்கே செத்துவிடுமோ என்ற பயம் அனைவருக்கும் வந்துவிட்டது. சமயபுரத்திற்கு அருகில் சாலையின் வலதுபுறம் SRM மருத்துவக் கல்லூரி இருக்கிறது. சுப்ரமணி பேருந்தை செக்யூரிட்டி தடுக்க தடுக்க உள்ளே விட்டு ஸ்ட்ரெச்சர் ஏற்பாடு செய்து வந்ததும் தனது எண்ணைக் கொடுத்துவிட்டு அழைக்குமாறு சொல்லிவிட்டு பேருந்தைத் திருப்பி இருக்கிறார்.
இரண்டு இளைஞர்கள் உதவிக்காக இறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஒன்றும் இல்லை குழந்தையின் காதில் எறும்பு புகுந்திருக்கிறது. தகவல் சுப்ரமணிக்குப் போயிருக்கிறது. அந்தப் பெண்தான் அவர்.
என்ன சொல்வது,
அறிவினான் ஆகுவது உண்டோ
பிரிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை
என்கிறான் வள்ளுவன்.
அடுத்தவன் நோயை, அடுத்தவன் வலியை தன் நோய்போல் தன் வலிபோல் பாவிப்பதை இரக்கம் என்றோ கருணை என்றோகூட அவன் சொல்லவில்லை. அதுதான் அறிவு என்கிறான்.
உலகத்தில் எவன் சொல்லி இருக்கிறான் இப்படி?
இரக்கம் கருணை மனிதம் அறிவு ஏதுமற்றுப் போனோமா நாம்?
#சாமங்கவிய 37 நிமிடங்கள்
12.11.2018 போற்றாக் கடை
என்கிறான் வள்ளுவன்.
அடுத்தவன் நோயை, அடுத்தவன் வலியை தன் நோய்போல் தன் வலிபோல் பாவிப்பதை இரக்கம் என்றோ கருணை என்றோகூட அவன் சொல்லவில்லை. அதுதான் அறிவு என்கிறான்.
உலகத்தில் எவன் சொல்லி இருக்கிறான் இப்படி?
இரக்கம் கருணை மனிதம் அறிவு ஏதுமற்றுப் போனோமா நாம்?
#சாமங்கவிய 37 நிமிடங்கள்
12.11.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...