Tuesday, November 13, 2018

கவிதை 089

மூன்றாவது வீட்டை ஒட்டி
வந்து கொண்டிருக்கிறது காற்று
எனக்கே எனக்கான பாடலை சுமந்தபடி
தெருக்கதவைத் திறக்கிறேன்
திறந்து கிடக்கிற தெருப்பக்கத்து வீட்டு வாசல்களில்
பாடலைப் பருகியபடியே
யாரேனும் ஒருவரேனும் நிற்கின்றனர்
என்னைப்போலவே
மெல்ல மெல்ல லேஷந்த் வீட்டை நெருங்குகிறது
காற்று
திறந்த கதவின் வழி வருகிறான் லேஷந்த்
காதே உடம்பாக
வீட்டைக் கடந்து கொல்லைத் தெருவிற்கு நகர்கிறது
ஓவ்வொன்றாய்த் திறக்கின்றன வீடுகள்
கொல்லைத் தெருவிலும்
எல்லா வாசல்களிலும்
காதே உடம்பாய் நிற்கும் அனைவரும்
அவர்களுக்கே அவர்களுக்கான பாடாலாய்த்தான்
நினைத்துக் கொண்டிருக்கக் கூடும்
என்னைப் போலவே

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...