தான் கோவக்காரன் என்பதாலும் தன்னைப் போலவே மக்களும் கோவக்காரர்களாக இருப்பதாலும் அரசியலுக்கு வருவதற்கு அச்சமாக இருப்பதாக திரு கமல் கூறுகிறார்.
இந்த ஒரு காரணத்திற்காகவே நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறேன் நான்.
"ரௌத்திரம் பழகு" என்கிறான் பாரதி.
ரௌத்திரம் இருக்கிறது உங்களுக்கு. வாருங்கள்.
போக, தேர்தலில் நிற்பது, ஆட்சிக்கு வருவது என்பது மட்டுமல்ல அரசியல்.
மக்களது கோவம் குறையாமல் பார்த்துக் கொள்வது, மேடுகள் நொடி நொடியும் உயர்ந்து கொண்டே போவதற்கான காரணம் எது என்பதை மக்களுக்கு புரிய வைப்பது, கல்வி, மருத்துவம், வேலை, வாழ்க்கை மக்களது உரிமை என அவர்களுக்குத் தெளிவு படுத்துவது, அதற்கான போராட்டத்தை கை எடுக்கும் இயக்கங்களோடு அவர்களை கொண்டிணைப்பதுதான் அரசியல்.
ஆதிக்க சாதிவெறிக்கு எதிராகவும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் மக்களை ஒருங்கிணைப்பதும்கூட அரசியல்தான்.
போக, அரசியலில் நல்ல இயக்கங்களே இல்லையா?
மைக்குகளை உடைப்பவர்களையும் வேட்டியை உருவுகிறவர்களையும், கூவத்தூர் பயணிகளை மட்டும்தான் அரசியல்வாதிகளாகப் பார்க்கிறீர்களா?
இடதுசாரி அரசியலை ஏன் லாவகமாக ஒதுக்குகிறீர்கள்?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்