Monday, February 20, 2017

எனக்குத் தெரிய இரண்டு வழிகள்

நடந்துகொண்டிருக்கிற அரசியல் அக்கிரமங்களைப் பார்த்து தான் கோவமாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருந்தார் திரு கமல்ஹாசன்.
கோவத்தை எப்படி செலவு செய்யப் போகிறீர்கள் திரு கமல்? என்று கேட்டிருந்தேன்.
நண்பர்கள் சிலர் இன்பாக்சில் என்னிடம் கோவப் பட்டனர். சிலர் ‘இப்ப என்ன செய்யனும்?’ என்கிற தொனியில் கேட்டனர்.
முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்,
இது மாதிரியான கோவம் என்னை மகிழ்ச்சிப் படுத்துகிறது. அதுவும் கமல் மாதிரியான செலபெரெடிகளுடைய கோவம் அழுத்தமான விளைவுகளைத் தரும் என்பதால் பெருமகிழ்வைத் தரும்
என்னுடைய கோவத்தைவிட திரு கமல் அவர்களுடைய கோவம் ஆயிரம் மடங்கு விளைவுகளைத் தரும்.
கோவத்தை எப்படி செலவு செய்யலாம்? என்று கேட்பவர்களுக்காக
எனக்குத் தெரிய இரண்டு வழிகளை சொல்வேன்
மக்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நல்ல மக்கள் இயக்கங்களில் இணைந்து அவர்களது போராட்டங்களில் இணைந்து கோவத்தை வெளிப்படுத்துவது
திருமதி ரோகிணி இதைத்தான் செய்கிறார். பள்ளிக்கரனையில் மக்களுக்காகப் போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மிகக் கொடூரமாக காவலர்களால் தாக்கப்பட்டபோது கொதித்துப் போன அவர் அதே பள்ளிக்கரனையில் நடந்த எதிர்ப்பு இயக்கத்தில் தாமாகவே பங்கு கொண்டார்.
அல்லது தமது ரசிகர் தளத்தை ஒரு இயக்கமாக மாற்றி சமூகப் பணியோடு எதிர்ப்பியக்கங்களை கட்டுவது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...