Wednesday, December 30, 2015

’போல’ களின் காலம்

 காட்டு யானைகளின் அட்டகாசம்” என்பது மாதிரிதான் தொடர்ந்து பத்திரிக்கை செய்திகளில் பார்க்கிறோம். மக்களின் வசிப்பிடங்களில் யானைகள் அத்து மீறுகின்றனவா? அல்லது நாம் அவைகளின் வாழிடத்தை ஆக்கிரமித்திருக்கிறோமா என்பது பற்றி விரிவாய் பிரிதொரு சமயம் பேச வேண்டும். பேசலாம். இந்த புள்ளியில் பேச வேறொன்று இருக்கிறது.
காட்டில் வாழும் யானைகள்தான் யானைகள். நாமோ யானைகளை காட்டு யானைகள் என்கிறோம். ஊருக்குள் பிச்சையெடுக்கும் வரை பழக்கப் படுத்தி வைத்திருக்கிற யானை போன்ற ஒன்றை யானை என்கிறோம்.
அது சரி, “ போல “ க்களின் காலம்தானே இது.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...