Tuesday, December 29, 2015

நல்லவர் 1



அரசியலில் நல்லவர்களே இல்லாதது போல ஒரு பிம்பம் கவனமாக கட்டமைக்கப் பட்டு வருகிறது. இது மிகவும் அபத்தமானதும் ஆபத்தானதும் ஆகும். சொற்ப நேர உரையாடல் தொடங்கி மிக நீண்ட உரையாடல்வரைக்கும், அது இது குறித்தென்றால் மிகுந்த சுவாரஷ்யமாகிப் போகும்.

ஆனால் உண்மை அது அல்ல. வெகுஜன அரசியல் கட்சிகளில்கூட நல்லவர்கள் இருக்கவே செய்கிறார்கள். இருக்கிறார்கள் என்று ஒரு வார்த்தையில் மறுக்க விரும்பவில்லை.

முடியும்போதெல்லாம் அரசியலில் எனக்குத் தெரிய இருக்கும் நல்லவர்களைப் பற்றி இங்கு எழுதலாம் என்றிருக்கிறேன். நான் நல்லவர்கள் என்று முன் வைக்கும் தோழர்கள்மீது அதற்கு எதிரான கருத்துக்கள் இருப்பின் ஆதாரத்தோடு வைக்குமாறு நண்பர்களை வேண்டுகிறேன். விவாதிப்போம்.

1 மா ஜெயசீலன் (cpm)
*************************************

இவர் முதுகலை பட்டம் பெற்றவர். BEdதேர்வு எழுதவில்லை. தேர்வு நேரத்தில்தான் அவரது கட்சியிலிருந்து முழுநேர ஊழியராகும்படி அவருக்கு அழைப்பு வந்தது. 90 இல் இருந்து 93 குள் இருக்க வேண்டும். வருடம் சரியாகத் தெரியவில்லை.

எங்கே BEd முடித்து விட்டால் வேலைக்கு போக வேண்டி வரும் என்பதால் தேர்வினைத் தவிர்த்தவர். ஒன்றும் வசதியான குடும்பம் எல்லாம் இல்லை. ஆகவே நான்கூட வேண்டாமென்று எவ்வளவோ போராடிப் பார்த்தேன். அந்தக் கால கட்டத்தில் நான் சொல்லி அவர் தட்டியது அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மண்ணச்சநல்லூர் வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர், மாநில பொறுப்பாளர், பிறகு கட்சியின் லால்குடி தாலுக்கா செயலாளர், இறுதியாக இப்போது கட்சியின் மாவட்டச் செயலாளர்,.

எத்தனைப் போராட்டங்கள், எத்தனை முறை சிறைகள்.

கால் நூற்றாண்டுகால இடைவெளியில் வயதும் பக்குவமும் கூடியிருக்கிறதே தவிர மனிதர் கொஞ்சமும் மாறவேயில்லை.

இன்னமும் தொகுப்பு வீட்டில்தான் இருக்கிறார். யாரேனும் தோழர்கள் வாங்கிக் கொடுத்தால் அதையும் கட்சிக்கு தகவல் தருகிறார்.

கட்சி கொடுத்திருக்கும் வாகனத்தைக் கூட தேவை தாண்டி பயன்படுத்தியது இல்லை.

சமீபத்தில் அவரது குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அந்த செலவை எப்படி எதிர் கொண்டார் என்பது முழுவதும் கட்சிக்குத் தெரியும் என்பதைவிட கட்சியின் அனுமதியோடுதான் எதிர் கொண்டார்.

கால் நூற்றாண்டிற்கும் மேலான அவரது அரசியலில் சின்னக் கறைகூட காண இயலாது.

கட்சி ஊழியர்களை, மக்களை அலட்சியமாக நத்தியதே இல்லை. யாரும் எப்போதும் அணுகலாம்.

சமீபத்தில் என்னைப் பார்ப்பதற்காக பள்ளிக்கு வந்த இடத்திலும் அங்கு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்த பிரச்சினையை கேட்டு அவராகவே காவல் நிலையத்திற்கு அலைபேசி சரி செய்யக் கேட்டுக் கொண்டவர்.

அருமையான பேச்சாளர் என்பதுகூட செயலுக்கு அடுத்தபடியாகத்தான் என்று கருதுபவர்

பிரச்சினைகளை மிகச் சரியாக அணுகுபவர்.

#அரசியலில் நல்லவர்கள் இல்லை என்று யார் சொன்னது?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...