Tuesday, September 10, 2013

நிலைத் தகவல்...18

தில்லியில் லுட் யென்ஸ் மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை ஆக தோராயமாக 3.25 லட்சம்.

இவர்களுக்கு அரசு வழங்கும் நீரின் அளவு 32 மில்லியன் கேலன்.

அங்கு வசிக்கும் ஏழைகள் மற்றும் அன்றாடம் காய்ச்சிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 32 லட்சம்.

இவர்களுக்கு அரசு வழங்கும் நீரின் அளவு 35 மில்லியன் கேலன்.

வாழ்க மக்களரசு.

இன்னும் கொடுமை என்னவெனில் பணக்காரத் திரளுக்கு வழங்கப் படும் நீரில் பெரும் பகுதி அவர்களது கார்களைக் கழுவவும், அவர்கள் வீட்டு புல் தரைகளுக்குமாய் பயன்படுவதுதான்.

இரண்டு சொல்வோம்

ஒன்று,

தண்ணீரை இப்படி காசு மாதிரி செலவு செய்யாதீர்கள் கனவான்களே

இரண்டு,

உழைக்கும் திரளுக்கும் ஒடுக்கப்பட்ட திரளுக்கும் கோவம் பற்றிக் கொண்டால் அப்போது நீங்கள் கழுவி சுத்தமாக வைத்துள்ள கார்களாலோ, உங்களது வளமான புல்வெளிகளாலோ அவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்ற முடியாது.


முகநூலில் வாசிக்க
 https://www.facebook.com/eraaedwin/posts/415762665131916

2 comments:

  1. காலம் இவர்களை திருத்தும்... மக்கள் போராட்டம் அதை வழி நடத்தும்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியாக சொன்னீர்கள் பாபு.

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...