Sunday, May 8, 2022

ஊர்தோறும் தெரு தோறும் தமிழ்ப் பள்ளிகளைத் துவக்கு

”தாயே

தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது எப்படி சாப்பிடுவது?
தந்தையே
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது எப்படி கேட்பது?
ஆசிரியரே
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது எப்படி படிப்பது?
எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
முதலில் என் பசிக்கு
ஒரு பதிலை சொல்லுங்கள்”
என்ற அண்ணன் எஸ். அறிவுமணியின் கவிதைக்கு 07.05.2022 அன்று சட்டமன்றத்தில் பதிலைக் கூறி இருக்கிறார் முதல்வர்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்
இந்தக் கேள்வியை முதன் முதலாக அறிவுமணிதான் எழுப்பியதாகவும் கொள்ளக் கூடாது
ஸ்டாலின்தான் முதன் முதலாக அதற்கான பதிலைத் தந்துள்ளதாகவும் கொண்டுவிடக் கூடாது
இந்தப் பசியும் பழசுதான்
அதனைத் தீர்ப்பதற்கான சிறு சிறு முயற்சிகளும் பழசுதான்
ஒருமுறை அன்றைய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு ஆய்விற்காக ஒரு பள்ளிக்கு செல்கிறார்
கூட்டு வழிபாட்டின்போது குழந்தைகள் சிலர் மயக்கம்போட்டு விழுகிறார்கள்
காரணம் பசி என்பதும்
பசிக்கு காரணம் காலை உணவு வழங்க இயலாத குடும்பச் சூழல் என்பதும் அவருக்குப் புரிகிறது
அன்றைய முதல்வர் காமராசரோடு இதுகுறித்து உரையாடுகிறார்
மதிய உணவுத் திட்டம் வருகிறது
தமிழ்ச் சமூகம் கொண்டாடித் தீர்க்கிறது
அன்று அந்தக் குழந்தைகள் மயக்கம் போட்டு விழுந்தது காலை உணவின்மையால்
அவர்களுக்கு கிடைத்ததோ மதிய உணவு
ஆக
குழந்தைகளின் காலைப்பசி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது
அதை புரிந்துகொண்டவராக திரு ஸ்டாலின் இருக்கிறார் என்பதை இந்த அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது
இந்த அறிவிப்பிற்கான மூன்று காரணங்களை முதல்வர் கூறி இருக்கிறார்
1) குழந்தைகள் சீக்கிரமே வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்புவதால் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள்
2) வீடு தூரத்தில் இருப்பதால் சாப்பிடாமல் வருகிறார்கள்
3) காலை உணவு தருகிற சூழலில் பல குடும்பங்கள் இல்லை
இதை இரண்டாக குறைக்கலாம்
பள்ளிகள் தூரமாக இருப்பதால் குழந்தைகள் சீக்கிரமே கிளம்ப வேண்டி இருக்கிறது. ஆகவே சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்பது ஒன்று
பல குடும்பங்களில் காலை உணவிற்கு வழி இல்லை என்பது இரண்டு
தீர்வு எளிதானவை
அருகமைப் பள்ளிகளை அமைக்க வேண்டும்
“ஊர்தோறும் தெரு தோறும் தமிழ்ப் பள்ளிகளைத் துவக்கு” என்றான் பாரதி
தமிழ்ப் பள்ளிகளாகத் துவக்க வேண்டும்
எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
முடியும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...