Friday, May 13, 2022

அதற்கும் சரக்கு ரயிலுக்கும் என்ன தொடர்பு?

 சரக்கு ரயில் பற்றாக்குறைதான் இந்தியாவின் உ.பி, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் மின்வெட்டு நிகழ்வதற்கான காரணங்களுல் மிக முக்கியமானது என்றால் நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதல்லவா?

ஆனால் அதுதான் உண்மை
அனல் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பது
அங்கு நிலவும் மின்வெட்டிற்கான காரணம்
அனல் மின் உற்பத்தி குறைவிற்கு காரணம் நிலக்கரி பற்றாக்குறை என்றால் நம்பலாம்
ஆனால் இந்தியாவில் 28 சதவிகித அளவிற்கு நிலக்கரி உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும்
அதே சமயம் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு கிட்டத்தட்ட 13 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும்
”கோல் இந்தியா” கூறுவதை மேற்கோள்காட்டி 12.05.2022 நாளிட்ட ”தீக்கதிர்” கூறுகிறது
எல்லாம் சரி,
அதற்கும் சரக்கு ரயிலுக்கும் என்ன தொடர்பு?
போதுமான சரக்கு ரயில்களை கோல் இந்தியாவிற்கு ஒதுக்காததுதான் இதற்கு காரணம் என்றும் அந்த செய்தி கூறுகிறது
சரி இதனால் ஒன்றிய அரசிற்கு என்ன லாபம்?
சரக்கு ரயில்களைக் குறைத்தால்,
மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி போகாது
அரசின் மின் உற்பத்தி பாதிக்கும்
வேறு வழியே இல்லாமல் ஒன்றிய அரசின் நண்பர்களான பெரு முதலாளிகளிடம் மாநில அரசுகள் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க நேரும்
கூட்டிக் கழித்து கணக்குப் பார்க்க வேண்டுகிறேன்
#சாமங்கவிய சரியாக 2 மணி 30 நிமிடங்கள்
12.032022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...