Tuesday, May 17, 2022

எமது திரளின் கடைசி வரிசையில் இருந்து நான் வருகிறேன்

 திரு குருமூர்த்தி அவர்களுக்கு,

வணக்கம்
அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த அந்தக் காலத்தில் எமக்கு விமர்சனம் இருந்தாலும் உங்களது எழுத்துக்களுக்கு இருந்த அழுத்தத்தை அறிந்திருக்கிறேன்
அன்றைய ஒன்றிய அரசுக்கு அது சங்கடத்தைக் கொடுத்ததையும் நான் அறிவேன்
ஆனால் அதற்காக சமீப காலமாக நீங்கள் உளறிக் கொண்டிருப்பதை சகித்துக் கொண்டே கடந்துவிட முடியாது
வங்கியில் வேலைபார்த்த நல்லவர்கள் எல்லாம் வெளியேறிவிட்டார்கள்
கழிசடைகள்தான் இப்போது வங்கியில் இருக்கிறார்கள்
என்று கூறி இருக்கிறீர்கள்
அதற்கு அந்த மேடையில் இருந்த ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலாதேவி மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன
வெளிப்படையாகப் பேசிவிடுவோமே
வங்கியில் சூத்திரர்களையும் பட்டியல் இனத்தவர்களையும்தான் நீங்கள் கழிசடைகள் என்று சொல்கிறீர்கள்
இன்னும் கொஞ்சம் காலம் கழித்து பார்ப்பனர் தவிர்த்த அனைவரையும் கழிசடைகள் என்று நீங்கள் அழைக்கக் கூடும்
உங்களை அதே மாதிரி இழி சொல்லால் விளிக்க எனக்கு என் இயக்கம் ஒருபோதும் அனுமதி தராது
ஆகவே உங்களோடும் உரையாடவும் விவாதிக்கவுமே நான் ஆசைப்படுகிறேன்
வங்கியில் வேலை பார்ப்பவர்கள் கழிசடைகள் என்று குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள்
இல்லை என்கிறேன்
உங்களிடம் இருக்கும் தரவுகளோடு வாருங்கள்
அவசரம் எல்லாம் இல்லை
நேரம் எடுத்துக் கொண்டு தயாரிப்புகளோடு வாருங்கள்
எங்கள் தரப்பில்
எமது பொதுச் செயலாளர் தோழர் Aadhavan Dheetchanya எல்லாம் இல்லை
எமது குரு Tamil Selvan இல்லை
எமது ஆசான் Sap Marx இல்லை
வங்கி ஊழியர்களின் நட்சத்திரம் Mathavaraj இல்லை
எமது திரளின் கடைசி வரிசையில் இருந்து நான் வருகிறேன்
விவாதிப்போம்
கத்தக் கூடாது,
கூச்சலிடக் கூடாது,
விவாதத்தை நாகரீகமாக நடத்த வேண்டும்
கழிசடை என்ற உங்கள் உளறலை பொய் என்று நிறுவுகிறேன்
நிறுவி விட்டால் ரிசர்வ் வங்கிக் குழுவில் இருந்து கழன்றுகொள்ள வேண்டும்
எப்போது?
எங்கு?
எதிர்பார்த்து,
இரா.எட்வின்
Like
Comment
Share

31 comments


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...