Thursday, May 12, 2022

ராஜபக்‌ஷேவின் வீடு எரியும் வெளிச்சத்தில் இருந்து...

 அன்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்
இலங்கை எரிந்து கொண்டிருக்கிறது
ராஜபக்‌ஷேவின் வீடு எரியும் வெளிச்சத்தில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்
ஆனால் அப்படித் தெரியவில்லை
நேற்றைக்கு முந்தாநாள்,
இந்தியாவிலும் இதே பொருளாதார நிலைதான் இருக்கிறது.
ஆனால் இந்தியர்களைப் பாருங்கள். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் இப்படிக் கொந்தளிப்பது நியாயமா?
என்று தனது மக்களிடம் கேட்டிருக்கிறார்
ஆக,
இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையைப் போலவே இருப்பதாகத்தான் அதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்
ஒருபுறம் வேலை வாய்ப்பு இல்லாமையும்
அதனால் கையில் காசு இல்லை
மறுபுறம் விலைவாசி உயர்வும்
அதிலும் குறிப்பாக உணவுப் பொருள் பற்றாக்குறையும்
அவற்றின் விலைவாசி உயர்வும்தான்
இலங்கை எரிந்துகொண்டிருப்பதற்கான முக்கிய காரணம்
உலக நாடுகள் இலங்கையின் நிலையை சாந்தப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அங்குள்ள மக்கள் தொகை அப்படி
இந்தியாவிலும் இது நிகழ வாய்ப்பு இருக்கிறது என்பது தாங்கள் அறியாதது அல்ல ஸ்டாலின் சார்
இந்தியாவில் கோதுமை உற்பத்தி குறைந்திருக்கிறது என்பதே செய்திகள் வழி வரும் உண்மை
இந்திய உணவு கோதுமையை சார்ந்தது
இறக்குமதியும் இப்போது சாத்தியமில்லை
காரணம் இந்தியப் பணத்தின் மதிப்பு அவ்வளவு வீழ்ந்திருக்கிறது
100 ரூபாய்க்கு வாங்கிய கோதுமையை 115 ரூபாய்க்கு வாங்க வேண்டும்
இதுவும் இறக்குமதியைப் பாதிக்கும்
இந்த நிலையில் அரசின் சேமிப்புக் கிட்டங்கியில் சேமிப்பு இருந்தால் ஓரளவு தப்பிக்கலாம்
ஒன்றியத்தில் அப்படி இருப்பதற்கான வாய்ப்பு இல்லை
உங்களிடம் இரண்டு கோரிக்கைகள் முதல்வரே
எதிர்க்கட்சி முதல்வர்களை ஒன்றிணைத்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கண்ணுக்கு கிட்டத் தெரிகிற பஞ்சத்தைப் பற்றியும்
அரசின் கிடங்குகளை நிரப்பவும் வலியுறுத்துங்கள்
நெல் உற்பத்தியை அதிகரிக்கவும்
உற்பத்தி செய்யப்படும் நெல்லை வீணாகமல் சேமிக்கவும் ஏற்பாடுகளை செய்யுங்கள்
அன்புடன்,
இரா.எட்வின்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...