வீடு வந்ததும் பேத்தியிடம் காண்பிக்கிறேன்
கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் கொள்ளுப்பேத்தியாய் 
என் சட்டை ஜோபியின்மேல் வந்து ஒட்டிக் கொண்ட 
அந்த வண்ணத்துப்பூச்சியை
”நோட்லதான வரைஞ்சேன்
தாத்தாட்ட ஏன் போன” 
அதட்டலுக்கு பயந்து 
மீண்டும் அது
பேத்தியின் நோட்டில் படமானது 
“ஐ, குட் பாய்” என்று 
கைதட்டி குதித்து குதூகலிக்கிறாள் பேத்தி
 ‘கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் கொள்ளுப்பேரனாய்’ என்று 
அருள்கூர்ந்து மாற்றித் தொடங்குங்கள்
இரண்டாவது பத்தியை
 
ஹாஹாஹா...மிகவும் ரசித்தேன்!!
ReplyDeleteகீதா
மிக்க நன்றி தோழர்
Delete