Friday, December 31, 2021

குறுவையையும் ஒரு கை பார்க்கலாம்

 


என்னோடு பணியாற்றும் அன்பழகன் கொள்ளிடப் பாசனத்தில் விவசாயமும் பார்ப்பவர்
”குறுவை” போச்சு சார், “குறுவை போச்சு சார்”
என்று அடிக்கடி புலம்பிக் கொண்டே இருப்பார்
தண்ணீர்ப் பிரச்சினை குறுவையை இல்லாமல் செய்துகொண்டு வருவதாகக் கூறுவார்
சம்பாவில் டெல்டா பகுதியில் ஏறத்தாழ மூன்றரை லட்சம் ஏக்கருக்கு சாகுபடி நடக்கும்போது
குறுவைக்கு எழுபது அல்லது எழுபத்தி ஐந்தாயிரம் ஏக்கர்தான் சாகுபடி செய்யப்படுவதாகக் கூறுவார்
இந்த நிலையில் இன்று தஞ்சையில் பேசும்போது
ஒருலட்சத்தி ஆறாயிரத்தி சொச்சம் ஏக்கர்தான் இந்தக் குறுவைக்கு இலக்காக வைக்கப்பட்டது என்றும்
ஆனால் ஒரு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ஏக்கரில் சாகுபடி நடக்கிறது என்றும்
பெருமையும் மகிழ்ச்சியும் பொங்க முதல்வர் கூறுவதை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது
சத்தியமாக எனக்கு கண்கள் ஈரமாயின
இதற்கு பத்துப் பதினோறு காரணங்கள் இருக்கலாம்
ஆனால் தண்ணீர் என்பது எதைவிடவும் முக்கியமானது
இந்த ஆண்டு பெரு மழை சம்பாவை சாய்த்தாலும் குறுவையை ஆசிர்வதித்திருக்கிறது
மழை தரும் நீரையும், காவிரி உரிமையை நீரையும் சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் அவசியம்
வாய்க்கால்களை நீர்நிலைகளை தூர் எடுப்பது
போதும்

குறுவையையும் ஒரு கை பார்க்கலாம்

#சாமங்கவிய 46 நிமிடங்கள்
30.12.2021

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...