தோழர் மாதவன் மற்றும் கேத்தரீன் இணையரின் இயக்க வாழ்க்கை என்பது அவர்களது இரண்டு குழந்தைகளையும் இணைத்தவாறே தெளிந்த நீரோடைபோல ஓடக்கூடியது
கட்சிக் குடும்பம் என்ற வகையில் இவர்களது குடும்பம் என்னை எப்போதும் பொறாமைப்பட வைத்துக்கொண்டே இருக்கிறது
மாணவப் பருவம் தொட்டே தங்களது இயக்க வாழ்க்கை தொடங்கியதில் ஏதோ போதாமையை உணர்ந்த இவர்கள்
தங்களது பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே கைகளில் செங்கொடியைக் கொடுத்தவர்கள்
வீசிங் இருந்தபோதிலும் பிள்ளை கடலூரில் இருந்து திருச்சிக்கான SFI சைக்கிள் பேரணியில் மகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறான்
குழந்தையாயும் செந்தொண்டர் பேரணியில் பங்கேற்ற குழந்தைகள்
தோழர் மாதவன் கட்சியின் மாவட்டச் செயலாளாராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக தோழர் ரமேஷ்பாபு முகநூலில் பதிவிடுகிறார்
மகிழ்ச்சியாக இருக்கிறது
மாவட்ட மாநாடுகளும் தேர்வுகளும் மகிழ்வையும் நம்பிக்கையையும் ஒருசேர தருகின்றன
பட்டைய கிளப்பலாம் வாங்க தோழர்
29.12.2021
இரவு 7.52
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்