Thursday, December 30, 2021

இந்தாங்க சட்டம் என்கிறார் முதல்வர்

 தமிழ்த்தாய் வாழ்த்து நாட்டுப்பாடலாக அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாமல் தவிக்கும் H.ராஜாவும்

ஒரு வகையில் அது நாட்டுப் பாடலாக அரசானை வந்ததற்கு ஒரு காரணம் என்றால் ஏற்க முடியாதுதானே
ஆனால் அதில் உண்மை இருக்கிறது
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருநாள் சென்னை ம்யூசிக் அகாதமியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விஜயேந்திரர் கலந்து கொள்கிறார்
தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜயேந்திரரைத் தவிர அனைவரும் எழுந்து நிற்கிறார்கள்
பொதுவகவே தலைவர்களின் உரைகளும் நேர்காணல்களுமே முக்கியம் என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்தை பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்கவில்லை
ஆனால் தினத்தந்தி தொலைக்காட்சியின் நிரூபர் அதையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்
பாதியில் அவருக்கு பொறி தட்டுகிறது
தனது அலுவகத்தை தொடர்பு கொள்கிறார்
இதை செய்தியாக்கலாமா என்கிறார்
வேண்டாம் என்கிறார்கள்
நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு வந்திருந்த H.ராஜாவிடம் இது குறித்து விடாமல் கேட்கிறார்
அவர் பதில் ஏதும் கூறாமல் கடக்கிறார்
இவரது கேள்விதான் மற்ற நிரூபர்களுக்கு நடந்த விஷயத்தைக் கடத்துகிறது
இது பெரிய செய்தி என்பது அவர்களுக்குப் புரியவே அவரை அனுகி க்ளிப்பிங் பெற்று தங்களது சேனல்கள்ளில் போடுகிறார்கள்
இவர் வேலையைவிட்டு விலகுகிறார்
செய்தி பற்றிக் கொள்கிறது
விஜயேந்திரர்மீது வழக்கு போடப்படுகிறது
நீதியரசர் சாமிநாதன்,
எழுந்து நிற்க வேண்டும் என்று சட்டம் இல்லை என்கிறார்
இந்தாங்க சட்டம் என்கிறார் முதல்வர்
இப்போது சொல்லுங்கள் இந்த சட்டம் வந்ததற்கும் திரு H.ராஜாவிற்கும் தொடர்பு உண்டுதானே?
மற்றொன்று அந்த நிரூபரின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
#சாமங்கவிய ஒரு மணி நாற்பது நிமிடங்கள்
25.12.2021

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...