Monday, April 4, 2016

நீங்க எக்கேடோ கெட்டு நாசமாப் போங்கங்கறத



" ஏம்பா எல்லாரும் வந்துட்டாங்களா? பொறவு நான் இல்லாம நடந்த பஞ்சாயத்துன்னு பொறாது சொல்லப் படாது ஆமாம்”
நீட்டிய சொம்பில் துப்பினார்.
“ எல்லாரும் வந்தாச்சுங்க எஜமான்”
“ அப்ப ஆரம்பிக்கலாமா? “
“ ஆரம்பிக்கலாங்க “
“ என்னடா பொறாது”
“ தோ அவுங்க கம்பெனில இருந்து அடிக்கடி வெஷப் பொகையா ஊருக்குள்ள கசியுதுங்க “
“ என்னப்பா, ஒங்க ஆலையில இருந்து வெஷப் பொக வருதாப்பா அடிக்கடி? “
“ ஆமாங்க , அவங்க சொல்றது நெசந்தாங்க எஜமான். “
“ ம்.... “
“ அதனால இரும வருதுங்க, மயங்கிப் போயிடறாங்க பல பேரு எஜமான் “
“ நீ என்னப்பா சொல்ற “
“ ஆமாங்க, அவங்க சொல்றது நெசந்தாங்க எஜமான் “
“ ம்... “
“ மூச்சடப்பு மாறடப்பு எல்லாம் வருதுங்க. உசிறக் கொல்ற புத்து நோயே வருமுங்களாம் சாமி.”
“ ஏம்பா இதெல்லாம் நெசமா. சாவே வருங்கறாங்களே
“ ஆமாங்க , அவங்க சொல்றது நெசந்தாங்க எஜமான்”
“ ஏன்ஆ நீங்க சொல்றதெல்லாம் நெசந்தாங்கறான். அப்புறம் என்ன? “
“ இதுக்கு ஒரு நியாயம் சொல்லுங்க எஜமான்”
“ என்ன செய்யலாம்? “
“இந்த நாசக்கார ஆலைய மூடச் சொல்லுங்க எஜமான் “
“ ஏம்பா மூடிடலாமா...? “
“ இல்லங்க எஜமான். நடத்தியே ஆகனும்.”
“ இத்தன பேரு உசிருக்கே ஆபத்துன்னு தோணுது. அப்புறமும் நடத்தனுமா?”
” ஆமாங்க. இல்லாட்டி நெறைய நட்டம் வரும் “
“ யாருக்கு? “
“ நம்ம மொதலாளிக்கு”
” அப்ப நடத்து . மொதலாளி நட்டப் படலாமா? அப்புறம் எதுக்கு இந்த ஊரு? இந்த ஆல மரம், சொம்பு, பஞ்சாயத்து, அப்புறம் இந்த நாட்டமை எல்லாம்.
ஆனா கொஞ்சம் நட்ட ஈட மட்டும் போட்டுடுங்க. அதுவும் அஞ்சு தவனைல”
“ சாமி எங்களுக்கு என்ன நியாயம் சொல்றீங்க?”
“ நீங்க எக்கேடோ கெட்டு நாசமாப் போங்கங்கறத என் வாயல இப்ப சொல்லனுமா? போங்கடா “

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...