Monday, October 12, 2015

பாராட்டி விடுவோம்

சிலரை பாராட்டுகிற பாக்கியம் நம் வாழ்நாளுக்குள் ஒரு முறையேனும் வாய்த்துவிடுமா என்ற அய்யம் சிலர்மீது நமக்கு வரும்தான். அப்படித்தான் ஒபாமாவையாவது நம் வாழ்நாளில் பாராட்டுவதாவது என்றுதான் நினைத்திருந்தேன் . ஆனால் நன்றியோடு பாராட்ட வேண்டிய சூழலை எனக்கு ஒபாமா தந்திருக்கிறார். ஒபாமாவிற்கு காலம் தந்திருக்கிறது.
ஒபாமாவும் ரவுல் காஸ்ட்ரோவும் இதுவரை மூன்றுமுறை சந்தித்திருக்கிறார்கள்.
முதல்முறை சந்தித்தபோது காஸ்ட்ரோ ”மிஸ்டர் ப்ரெசிடெண்ட்” என்று வாஞ்சையோடு கை குலுக்கியதை ஒபாமாவும் வெள்ளைமாளிகையும் அலட்சியப் படுத்தியதை பார்த்தோம்.
இரண்டாம் முறை சந்திப்பிற்குப் பிறகு “ நடைமுறைப் படுத்தவே முடியாத கொள்கையை இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா கடைபிடித்து வருகிறது” என்றார்.
மூன்றாவது சந்திப்பிற்குப் பிறகு “ பொருளாதாரத் தடை நீக்கம் தவிர்க்க முடியாதது” என்றிருக்கிறார்.
கியூபா மீதான பொருளாதாரத் தடை குறித்த ஒபாமாவின் கருத்துக்களே மேற்சொன்ன இரண்டும்.
இதற்கு பாராளுமன்றத்தில் அவர் கொஞ்சம் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் ஒபாமாவின் இந்தக் கருத்து அமெரிக்க மக்களின் கருத்து. அமெரிக்க மக்கள் எந்த ஒரு நாட்டின் மீதான அமெரிக்காவின் மேலான்மையையோ போரையோ ஒருபோதும் விரும்பியது இல்லை. இன்னும் சொல்லப் போனால் தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்த கவலையே அவர்களுக்கு பேரதிகமாய் இருக்கிறது.
மக்களின் கருத்தை ஏற்ற் நடைமுறைப் படுத்த முன் வந்துள்ள ஒபாமாவை விரைவு படுத்துங்கள் என்ற கோரிக்கையோடு நன்றி சொல்லி பாராட்டுகிறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...