லேபில்

Thursday, October 22, 2015

கவிதை 34

அகப்படவில்லையா
படிக்கிறமாதிரியெதுவும்
முடித்துவிட்டானா ஏற்கனவே
இருக்கிறதனைத்தையும்
அல்லது இதுதானா
அவனது குணமே
எதுவானால் என்ன
நிம்மதியை வைத்துவிட்டுப் போனான்
புரட்டிக் கொண்டிருந்த புத்தகங்களில் எதையும்
சுட்டெடுத்துப் போகாத புத்தன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023