Sunday, October 11, 2015

குட்டிப் பதிவு 46

காலையில் சிறப்பு வகுப்பு. 
ஆர்த்தி என் செல்லப் பிள்ளைகளுள் ஒருத்தி. எதையாவது எடக்கு மடக்காக செய்துவிட்டு வந்து நிற்பாள். இன்றும் அப்படித்தான்.
”எதையாவது தப்பு தப்பா செஞ்சுட்டு வந்து நில்லு”
என் கோவம் எடுபடவில்லை.
சிரிக்கிறாள்.
“எதுக்கு இளிக்கிற”
இது முடிந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மயக்கம் வருகிறது. காரணம் தெரியும். வியாழன் மதியம் சாப்பிட்டது. தேநீரிலேயே போகிறது. தாமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை மட்டும் என்னை மருத்துவரிடம் துறத்துகிறது.
என்னைவிட குறைந்தபட்சம் 15 வயது குறைந்தவர்.
“இப்படி எதையாவது தப்பு தப்பா பண்ணி உடம்பக் கெடுத்துக் கொண்டுதான் எப்பவும் வறீங்க சார்”
சிரிக்கிறேன்.
“எதுக்கு சார் சிரிக்கிறீங்க.”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...