Sunday, December 14, 2014

குட்டிப் பதிவு 16

” அம்மா, அப்பா சரியில்ல. அப்பா நம்பருக்கு போட்டா வேற அம்மா எடுத்து திட்டுது. கொஞ்சம் மிரட்டி வையுங்க” என்று விக்டோரியாவிடம் போட்டுக் கொடுத்திருக்கிறாள் கிருத்திகா மாசிலாமணி
விஷயம் இதுதான்,
நேற்று என்னை அழைத்திருக்கிறாள். எடுக்கப் பட்டதும் வழக்கம் போல கொஞ்சம் சாய்ந்த குரலில் “அப்ப்ப்பா” என இழுத்திருக்கிறாள்.
“உங்கப்பனுக்கு எதுக்கு என் நம்பருக்கு போட்டற” என்று எதிர் முனையிலிருந்து எரிந்து விழவே, ” இது எங்க அப்பா நம்பர்தானே” என்றிருக்கிறாள்.
“காலைல இருந்து இதே பொழப்பா போச்சு “ என்றிருக்கிறார் அந்தப் பெண்.
என் நம்பருக்கு போட்டால் அந்த அம்மாவிற்கு போயிருக்கிறது. அது எப்படி என்றுதான் தெரியவில்லை.
விக்டோரியாவிடம் போட்டுக் கொடுத்துட்டு “ வாங்குனியா அம்மாட்ட நல்லா” என்று சிரிக்கிறாள்.
இதே நிலைதான் கவின் மலர் , ஸ்டாலின் மற்றும் பல நண்பர்களுக்கும்.
எந்த அழைப்பு எனக்கு வருகிறது எந்த அழைப்பு யாருக்குப் போகிறது என்று தெரியவில்லை.பல நேரங்களில் அழைப்பு மணி ஒலிப்பதில்லை.
புது செல், வேறு சிம் வாங்குகிற வரைக்கும் நண்பர்கள் சிரமத்தைப் பொறுத்தருளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். காசு வந்ததும் புது செல் வாங்கி விடுகிறேன்.
ஆனாலும் இதுவும் ஒரு விதத்தில் நன்றாய்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...