Tuesday, June 17, 2014

நிலைத் தகவல்39

போனவாரம் ஒரு வேலையினிமித்தம் திருச்சி பெரிய கடை வீதி போயிருந்தேன்.

ஒரு இளைஞனை அடித்து காவல் நிலையத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். விசாரித்தபோது அந்த இளைஞன் 300 ரூபாயை ஜேப்படி செய்து விட்டதாக அறிந்தேன்.

அந்தப் பகுதியின் காற்றுவெளி " 10 ரூவாயா இருக்கட்டும். திருட்டு திருட்டுதானே சார். " என்பது மாதிரியான பேச்சுக்களால் நிரம்பிக் கசிந்தது.

300 ரூபாய் திருடியவனையே தரும அடியோடு சிறைக்கும்
அனுப்பும் இந்த மண்ணில்தான்,

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ONGC கு சொந்தமான எண்ணெய் வயல்களில் இருந்து ஏறத்தாழ 18 பில்லியன் கனமீட்டர்கள் இயற்கை வாயுவை ரிலையன்ஸ் நிறுவனம் திருடியிருப்பதாகவும் அதன் மதிப்பு கிட்டத் தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்றும் ONGC வழக்குத் தொடுத்திருக்கிறது.

ONGC பொதுத்துறை நிறுவனம். எனில் மக்களது நிறுவனம். எனில் மக்களது பணம் 30 ஆயிரம் கோடியை ரிலையன்ஸ் திருடியிருப்பதாகத்தான் ONGC கூறுகிறது.

சும்மா சொல்லி வைத்தேன்.

4 comments:

  1. ரிலையன்ஸ் மட்டுமல்ல....இந்திய பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றிவிட்டு பெண்களோடு கூத்தடிக்கும் மல்லையா போன்றவர்களை யார் துவைப்பது...?

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...