Saturday, March 28, 2020

ஆனாலும் சுசிலா அம்மாவின் கழுத்தளவுதான்

மேடை நிகழ்ச்சிகளில்
குறிப்பாக மேடை இசை நிகழ்ச்சிகளில்
இசையைவிடவும்
அல்லது இசை அளாவிற்கேனும் ரசிப்பதற்கு எனக்கு நிறைய இருக்கிறது
கலைஞர்களின் உடல்மொழி
அதிலும் குறிப்பாக தபேலா போன்ற தோலிசைக் கலைஞர்களின் உடல்மொழி
அப்படி ஒரு த்பேலாக் கலைஞரின் உடல்மொழிக்கு ரசிகனாகிப் போய் இருக்கிறேன்
அநேகமாக இளையராஜா, கணேஷ் கிருபா , லக்‌ஷ்மன் ஸ்ருதி உள்ளிட்ட அனைத்து மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்
SPB சாரின் உதவியால் அவரது பெயர் கண்பதி என்று தெரிந்துகொள்ள முடிந்தது
கணேஷ் கிருபாவின் கச்சேரியில் ஷைலஜாவுடன் ”பாரதி கண்ணம்மா” பாடலை SPBபாடி முடித்ததும் சார் அந்தத் தபேலாக கலைஞரிடம் சென்று கை குலுக்கிவிட்டு அவரது பெயரைக் கேட்கிறார்
”கணபதி“
என்கிறார் கணேஷ்
”அமர்க்கலம் கணபதி. எனக்கு அண்ணன் அல்லவா. ஆமா நான் சுப்பிரமணி, நீங்க கணபதி. பின்ன எப்படி. அமர்க்கலம், அமர்க்கலம்”
இதுதான் கணபதி சார் பெற்ற வாழ்நாள் ஊதியமாக இருக்கும்.
எழுந்து நின்று அவர் நெகிழ்ந்த உடல் மொழியும் அபாரம்
அவரது உடல்மொழியைப் பார்த்தே வளர்ந்தவன் நான்
கொரோனா உதவியால் பழையப் பாடல்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறேன்
”மறைந்திருந்து பார்க்கும் மருமமென்ன” மற்றும் “நல்ம்தானா?” ஆகியவற்றை நேற்று பத்து முறைக்கும் மேல் பார்த்தேன்
போட்டி
இரண்டு பிரிவுகள்
பத்மினி சைடில் மிருதங்கம் மற்றும் சிங்சா அதிலும் குறிப்பாக சிங்சா போடுபவர்களின் கொஞ்சம் கூடுதலான உடல்மொழி அப்படி ஒரு ரசனைக்குரியதாக இருந்தது
சிவாஜியும் ஏ எம் ராஜனும் நாயனம் வாசிக்கிறார்கள்
அப்படி ஒரு ஒத்திகை நடந்திருக்க வேண்டும்
வாசித்துக் கொண்டிருக்கும்போதே சிவாஜியின் கைல் இருந்து ரத்தம் வருகிறது
வலியை அப்படி எடுத்து வைக்கிறார் சிவாஜி
அப்படி ஒரு முகபாவனை
ஒரு கட்டத்தில் வாசிக்க முடியாமல் நாயனத்தை கீழே ஒருகணம் வைப்பார்
அப்போது ஏ எம் ராஜன் சிவாஜியைப் பார்ப்பார் பாருங்கள் ஒரு பார்வை
அப்பப்பா
அந்தச் சூழலில் ஒரு காதலியின் அவஸ்தையை அப்படி வைத்திருப்பார் பத்மினி
ஏன் ரத்தம்?
புரியாத பத்மினி ஆடும்போது தனது உடையால் லாவகமாக சிவாஜியின் துண்டை தட்டிவிடுவார்
கையிலே கட்டு இருக்கும்
அய்யோ
அப்படி ஒரு பாவனையை எல்லோரும் வெளிப்படுத்தி இருப்பார்கள்
நலம்பெற வேண்டும்
நீ என்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இந்தச் சரணத்திற்கு அப்படி உயிர் கொடுத்திருப்பார்கள் சிவாஜியும் பத்மினியும்
இவை அனைத்தையும் அப்படியே பார்த்துக் கொண்டே இருப்பார் பாலையா
அந்த அவரது முக பாவனை இருக்கிறதே அது நடிகர்களுக்கான இலக்கணம்
மேலே உள்ள சரணத்தின் மீதமான
“இலைமறை காய்போல்
பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று”
இந்த இடத்தில் தவிலின் மேலே தட்டிக் கொண்டிருந்த பாலையா
வாசிக்கத் தொடங்குவார்
அப்போது பத்மினியைக் காட்டி சிவாஜியிடம் கை உயர்த்துவார் பாருங்கள்
அடுத்த சரணத்தில்
“புண்பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப்
பெண்பட்ட பாட்டை
யார் அறிவார்”
என்று நீளும்
அப்போதுபாலையா கையை மேலே நீட்டிவிட்டு சிவாஜியின் மடியை தொடுவார் பாருங்கள்
அது அச்சு அசல் கணபதியினுடையது
சிவாஜி பத்மினி எல்லோரையும் விட ஒருநூல் உசரமாகத் தெரிவார் பாலையா
ஆனாலும் சுசிலா அம்மாவின் கழுத்தளவுதான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...