Tuesday, March 24, 2020

மூன்று கோரிக்கைகள்

இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மூன்றுபேர் வைத்த கோரிக்கைகளில் இருந்த நியாயம் அவற்றை நண்பர்களிடம் கைமாற்றி வைக்க என்னைப் பணித்தது
திருப்பூர் பின்னலாடை நிறுவன உரிமையாளார்களின் கூற்றுப்படி,
கொரோனா காரணமாக ஏற்றுமதி செய்யப்பட்ட பின்னலாடைகள் பிரிக்கப்படாமலேயே அந்தந்த நாடுகளில் கிடக்கின்றன
அதனால் அதற்கான பணத்தைப் பெற இயலவில்லை
இதன் காரணமாக பெறப்பட்ட ஆர்டர்களுக்கான துணியை அனுப்ப முடியாமல் அவை இங்கேயே முடங்கிக் கிடக்கின்றன
இதனால் புதிய ஆர்டர்கள் ஏதுமில்லை
இந்த வகையில் ஏறத்தாழ ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முடங்கி இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்
இதனால் தங்களது வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுகூட கூறவில்லை
சூழல் சற்று மாறும்வரை ஒரு மூன்று மாத காலங்களுக்கான EMI தொகையை மூன்று மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும்
இந்த மாத காலத்திற்கு வட்டியினை மட்டும் தள்ளுபடி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்
அடுத்து பின்னலாடைத் தொழிலாளிகள் கூறும்போது
தொழில் பாதிப்பின் காரணமாக தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்
தங்களது உயிர்த்திருத்தலை சாத்தியமாக்கும் பொருட்டு வங்கிகளோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களோ மாதா மாதம் பத்தாயிரம் ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா கடன் கொடுத்தால்
நிலை மாறியதும் கடனைத் திருப்பி விடுவதாகவும் கோரினர்
அடுத்ததாக நான் கேட்டது கண் பார்வையற்ற ஊதுபத்தி விற்கும் தம்பதியர்
அவர்களது கோரிக்கையை கேட்க முடியாமல் அழுது விட்டேன்
இவை போன்றவை பதட்டம் இல்லாமல் நிதானமிக்க சமூக வலைதள உரையாடல்களாக மாற வேண்டும்
#சாமங்கவிய 05 நிமிடங்கள்
23.03.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...