Thursday, February 8, 2018

கல்வித் துறையை மறு கட்டுமானம் செய்ய

முந்தாநாள் ஒரு தலைமை ஆசிரியரை அவரது பள்ளிக் குழந்தைகள் சிலர் கத்தியால் குத்தியிருக்கின்றனர்.
நேற்று பள்ளிப் பிள்ளை ஒருவனை அவனது ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தியிருக்கிறார்.
முந்தாநாள் குத்துப்பட்ட தலைமை ஆசிரியரும் நேற்று குத்துப்பட்ட பிள்ளையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒருவன் தோழன், ஒருவன் பிள்ளை.
உள்ளே நுழையும் முன் இருவரும் மிக விரைவில் குணமடைய வேண்டும்
முந்தாநாள் தலைமை ஆசிரியர் குத்துப் பட்டதும் மாணவச் சமூகமே சீரழிந்து போய்விட்டது போலவும் நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்பதாகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எதிர்வினைகள். இருபது ஆசிரியர்களாவது கொதிச் சூட்டோடு என்னோடு அலைபேசியில் உரையாடினார்கள்.
இன்று மாணவர் மற்றும் பெற்றோரின் சுற்று. பாரேன் பாரேன் பள்ளிக்கூடத்து வாத்தியாரே கத்தியெடுத்து குத்தினா யார நம்பி பிள்ளைகள பள்ளிக்கு அனுப்பறது?
இரண்டிலும் நியாயம் இல்லாமல் இல்லை.
நானொரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியன். மேல்நிலைக் கல்வியை கடந்த ஆண்டு முடித்து கல்லூரி முதலாமாண்டு படிக்கும் குழந்தையின் தகப்பன்.
இரண்டு பக்கத்திலும் பதிக்கப்பட்டவன்.
பிரச்சினை பிள்ளைகளிடத்திலோ, ஆசிரியர்களிடத்திலோ இல்லை என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். இத்தகைய நிகழ்வுகளுக்கு கல்விக் கட்டமைப்பும் தேர்வுக் கட்டமைப்புமே காரணம் என்பதையும் என்னால் உணர முடிகிறது.
இந்தப் பிரச்சினையை இந்த இரு சாராரால் மட்டும் தீர்த்துவிட முடியாது என்பதையும் உணர முடிகிறது
உணர்ச்சிவசப்படாமல், அக்கறையோடு இந்தப் பிரச்சினையை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொது மக்கள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள், கல்வியாளர்கள், மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அமர்ந்து பேசி கல்வித்துறையை மறு கட்டுமானம் செய்ய முயற்சிக்க வேண்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...