“ சாதி ஒடுக்குமுறை உள்ள அல்லது சமத்துவமற்ற எதனோடும், அது தமிழ்த் தேசியமாகவே இருப்பினும் அதனோடு எனக்கு சம்மதம் இல்லை”
சென்னை இக்ஷா அரங்கத்தில் 01.12.2012 அன்று “விடுதலைக் குயில்கள்” ஏற்பாடு செய்திருந்த தர்மபுரி தாக்குதலுக்கு எதிரான கண்டன கூட்டத்தில்தான் இவ்வாறு பேசினார் தோழர்.சுப.வீ அவர்கள்.
தோழரது தமிழ்த் தேசியத்தோடு நமக்கு முரண்பாடுகள் இருந்திருக்கலாம். சில நேரங்களில் பொதுத் தளங்களில் சிலர் விமர்சித்தும் இருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியத்திற்கான அவரது அயராத, அப்பழுக்கற்ற மிக நீண்ட உழைப்பில் யாருக்கும் எப்போதுமே சந்தேகம் இருந்ததில்லை. அதற்கான அவரது கடந்த கால இழப்புகளையும், காயங்களையும், வலிகளையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம் என்ற வகையில் அவரது உரை நம்மை அசைத்து உலுக்கத்தான் செய்தது.
தமிழ்த் தேசியமா?, சாதி ஒழிப்பா? எது முதலில் என்ற கேள்விக்கு கொஞ்சமும் தயக்கமின்றி தனது வேலைத் திட்டத்தில் சாதி ஒழிப்பிற்கே முதலிடம் என்பதாக அமைந்தது அவரது உரை. “தமிழன்” என்ற ஒற்றை அடையாளமல்ல, ”சாதியற்ற தமிழன்” என்பதே தனது இலக்கு என்பதை மிகச் சரியாகத் தெளிவு படுத்தினார்.
ஆயிரக் கணக்கான மேடைகளில் தமிழ்த் தேசியம் பேசிய தோழர். சுப. வீ அவர்கள் தமிழன் என்ற அடையாளத்தில் சாதிச் சாயம் இருக்குமானால் அது தனக்குத் தேவையில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
எனில், இதுவரை அப்படிப் பேசுவதற்கான தேவையே யாருக்கும் இல்லாமல் இருந்ததா?
எப்போதும் சாதி இருக்கவே செய்தது. புலேயும், அம்பேத்கரும், பெரியாரும், ரெட்டைமலை சீனிவாசன் அவர்களும், அயோத்திதாசப் பண்டிதரும் இன்னும் பலரும் போராடியதன் விளைவாக மட்டுப் பட்டுக் கிடந்த ஜாதி வெறியின் வீரியம் இப்போது மீண்டும் தன் கோர முகத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது.
ஒரு காலத்தில் வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்கள் தங்குவதற்கு வீடு பார்த்தால் கொஞ்சமும் வெட்கமின்றி என்ன ஜாதி என்று கேட்பார்கள். ஏறத்தாழ எல்லா ஊர்களிலும் இரட்டைக் குவளை இருந்தது.
திருமண ஏற்பாடு செய்பவர்கள் பெண் எப்படி? மாப்பிள்ளை எப்படி? என்பதையெல்லாம் விசாரிப்பதற்கு முன் அவர்கள் குலம் என்ன? கோத்திரம் என்ன? என்பதைத்தான் விசாரிப்பார்கள். இவை ஒத்து வந்தால் மட்டுமே மற்றதைக் குறித்து கவனம் செலுத்துவார்கள்.
இது ஏதோ பாமர கிராமத்து மக்களிடம் மட்டுமே இருந்ததாகக் கொள்ளக் கூடாது.
” ஒடுக்கப் பட்டோர் குரல்” என்ற பத்திரிக்கையை அம்பேத்கர் ஆரம்பிக்கிறார். அப்போது திலகர் அவர்கள் “கேசரி” என்ற இதழை நடத்தி வருகிறார். கேசரி இதழில் தனது “ ஒடுக்கப்பட்டோர் குரல்” இதழுக்கான விளம்பர வாசகத்தையும், அதற்கான கட்டணத்தையும் இணைத்து அனுப்புகிறார் அம்பேத்கர். அவை திருப்பப் படுகிறது. தலித் ஒருவர் நடத்தும் இதழின் விளம்பரத்தைப் போட்டால் தனது இதழ் தீட்டுப் பட்டுவிடும் என்பதைத் தவிர வேறு என்ன காரணத்தை திலகர் இதற்கு சொல்லியிருக்க முடியும்?
ஆக, “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்று முழங்கியவர் என்று ஒளி வட்டத்தோடு பிம்பம் கட்டமைக்கப் பட்டு பள்ளியின் முதல் நாள் தொட்டே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப் படும் ஒரு தலைவரிடமே சாதி இருந்திருக்கிறது. அதுவும் அம்பேத்கரிடமே அவர் இந்த அளவிற்கு தனது ஜாதியைக் காட்டியிருக்கிறார் என்றால் ஒரு சாதாரண தலித்தை திலகர் எவ்வளவு கேவலமாக நடத்தியிருப்பார் என்பதை நம்மால் உணர முடிகிறது.
இன்னொன்றையும் இங்கே பார்க்க வேண்டும். திலகர் மாதிரி தலைவர்களே அம்பேத்கர் மாதிரி தலைவர்களிடம் இப்படி ஜாதியோடு நடந்து கொண்டார்கள் என்றால் மற்ற பாமர சாதி இந்துக்கள் பாமர தலித்துகளை எவ்வளவு கேவலமாக நடத்தியிருப்பார்கள்.
இப்படி இருந்த நிலைதான் கொஞ்ச காலம் மட்டுப் பட்டுக் கிடந்தது. பையனுக்கோ பெண்னிற்கோ வரண் பார்ப்பவர்கள் “ எதுவாயிருந்தாலும் பரவாயில்லை, அதுவா மட்டும் இல்லாமப் பார்” என்று கேட்பவனுக்கும் சொல்லும் தனக்குமே கேட்காத ரகசியக் குரலில் சொல்லுமளவிற்குத்தான் ஜாதி இருந்ததது. இப்பொழுதும் ஜாதி பார்க்கவே செய்தார்கள். அதை வெளிப்படையாக பேச வெட்கப் பட்டார்கள்.
இப்போது மேடை போட்டு பேசுகிறார்கள். மருத்துவம் படித்தவரும், பொறியியல் படித்தவரும், சட்டம் படித்தவரும், மேடை போட்டு கலப்புக் கூடாது என்று வெளிப்படையாக வெட்கமின்றி பேசுகிறார்கள். தங்கள் சாதிப் பெண்ணை வேறு சாதிக் காரன் மணந்தால் வெட்டிப் போடு ஒரு முன்னால் சட்டமன்ற உறுப்பினரே பேசினார் என்பதான செய்திகள்கூட வருகின்றன.
இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி வருகிறது. இப்படிப் பேசுவது சட்டப்படி குற்றம் இல்லையா?. நமக்குத் தெரிந்த மட்டிலும் இது குற்றமே ஆகும். எனில் இப்படி பகிரங்கமாகப் பேசுகிறார்களே அவர்கள் மேல் ஏன் நடவடிக்கையே எடுக்கப் படவில்லை. இப்படி ஒருவர் மற்றவரிடம் உரையாடினாலே வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உரியவராகிறார். மேடை போட்டு கூட்டம் கூட்டி காவல் துறையினர் குவிந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் அவர்கள் சாட்சியாகவே ஒருவர் உரத்தக் குரலெடுத்து பேச முடிகிறது என்றால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வேறு எதற்கு எதிராகப் பயன்படுத்த பத்திரப் படுத்தி வைத்திருக்கிறார்கள் என்ற அய்யம் இயல்பாகவே வருகிறது.
இது இப்படி இருக்க வன்கொடுமை சட்டம் கொடுமையானது. அதில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் பேசுவதில் வியப்பாய் எதுவும் இல்லை. எல்லா நேரங்களிலும் சட்டம் இப்படி மௌனம் காக்காது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருப்பதன் விளைவுதான் இந்தக் கூற்று. ஒருக்கால் சாதீய அடக்கு முறைக்கு எதிரானவர்கள் கையில் அதிகாரம் வந்துவிட்டால் தங்களது அயோக்கியத் தனங்கள் தண்டிக்கப் படும் என்கிற எச்சரிக்கை உணர்வே அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வைத்திருக்கிறது.
இந்தச் சூழல் மட்டுமல்ல சுப.வீ அவர்கள் அப்படிப் பேச. அவர் ஏன் அப்படிப் பேசினார் என்பதை உள்ளபடி உணர வேண்டுமானால் கீழ்வரும் சில சம்பவங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். சம்பவங்கள் என்பது அயோக்கியத்தனம் என்றே படுகிறது. கொடுமைகள் என்பதே சரி.
சேத்தியாத் தோப்பு சென்னிநத்தம் காலனியைச் சேர்ந்த கோபாலக்கிருஷ்ணன் என்ற தலித் இளைஞனும் பரதூரைச் சேர்ந்த சாதி இந்துப் பெண்ணான (அநேகமாக வன்னிய இனத்தைச் சார்ந்த) துர்காவும் ஒரே கல்லூரியில் படிக்கிறர்கள்.இருவருக்குமிடையில் காதல் மலர்கிறது. பெண்ணின் தந்தை ரவியும் அவரது உறவினர்களும் கண்டிக்கிறார்கள். காதலும் எதிர்ப்பும் போட்டிப் போட்டுக்கொண்டு வளர்கின்றன.
திடீரென கோபாலக் கிருஷ்ணனைக் காணவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போடுகிறார்கள்.
ஆட்கொணர்வு மனு போட்ட அடுத்தநாள் வெள்ளியங்குடி குளத்தில் கோபாலகிருஷ்ணனது உடல் மிதக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகளும் கோபாலகிருஷ்ணனின் உறவினர்களும் கோபத்தோடு தெருவிற்கு வந்த பின்னால் துர்காவின் தந்தை ரவி அவரது பாட்டி கனகவள்ளி மற்றுமொருவரை கைது செய்கிறது காவல்துறை.
துர்காவின் தந்தை கொடுத்த வாக்குமூலத்தை நக்கீரன் இணைய தளத்தில் வாசிக்க முடிந்தது.
தான் எவ்வளவோ கண்டித்தும் கனிவாக எடுத்துக் கூறியும் கோபாலகிருஷ்ணன் கேட்கவில்லை என்றும், ஒரு இழவிற்காக தான் வெளியூர் சென்றிருந்த சமயம் கோபாலகிருஷ்ணன் தன் வீட்டிற்கு வந்து துர்காவோடு பேசிக் கொண்டிருந்ததாகவும் சொல்கிறார். அதை பார்த்த அவரது அம்மா கனகவள்ளி இருவரையும் கட்டையால் அடித்து தனித் தனி அறைகளில் போட்டு பூட்டி வைத்ததாகவும் தான் கோபத்தில் கொன்று விட்டதாகவும் சொல்கிறார்.
முதலில் ஒரு கிழவியால் இரு இளைய வயதுப் பிள்ளைகளை அடித்து தனித் தனி அறைகளில் தள்ளிப் பூட்ட முடியுமா? அவ்வளவு பலமற்ற பித்துக் குளியா கோபாலகிருஷ்ணன். இதை நன்கு திட்டமிடப்பட்ட ஒரு கூட்டுச் செயலாகவே கொள்ள முடிகிறது.
அதை எல்லாம் விசாரனை பார்த்துக் கொள்ளட்டும். நாம் கவலை கொள்ள அதைவிடவும் முக்கியமான விசயம் ஒன்று இருக்கிறது.
பொதுவாகவே இப்படி ஒரு கொலை நடந்த பின்னால் அதற்கும் தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றே நிறுவ முயல்வார்கள். ஆனால் இங்கு நான்தான் கொன்றேன் என்று ரவி சொல்வதன் மூலம் ஜாதி எந்த வித சிறு உடையுமின்றி அம்மணமாய் வெட்கமின்றி வெளி வருகிறது. இந்த துணிச்சல்தான் நாம் கவலை கொள்ள வேண்டியதும் எதிகொண்டு வீழ்த்தவேண்டிய விசயமுமாகும்.
இதைவிடக் கொடியது பிரியாவின் கொலை.
சிறுவத்தூர் என்ற ஊரைச் சார்ந்த சரண்யா என்ற வன்னியப் பெண்னும் காந்தளவாடி என்ற கிராமத்தைச் சார்ந்த பறையர் இனத்தைச் சார்ந்த சிவகண்டன் என்ற இளைஞனும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். இதே சமயத்தில் காந்தளவாடி கிராமத்தைச் சார்ந்த பிரியா என்ற தலித் பெண் சிறுவத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
சிறுவத்தூர் வன்னியர்களின் கோவம் பிரியாவின் மேல் திரும்புகிறது. தங்கள் பெண்ணை பிரியாவின் ஊர்க்காரன் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட கோவத்தை பிரியா போகும் போதும் வரும்போதும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரியாவும் ஒரு குளத்தில் மிதக்கிறாள். இதை என்னவென்று சொல்வது? ஜாதி ஆணவமா? மனநோயா? அல்லது வேறு எதுவுவோமா?
தர்மபுரி நத்தம் காலனியில் நடந்த கொடுமையில் அங்கு நடந்த வன்முறையை விடவும் அதற்கான திட்டமிடலே மிகவும் ஆபத்தானதாகப் படுகிறது. யாருக்கும் ஒரு நகக் கீரலும் இல்லாமல் அத்தகையதொரு கோர தாண்டவத்திற்கு எவ்வளவு கவனத்தோடு கூடிய திட்டமிடலும் எவ்வளவு நீண்ட பயிற்சியும் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே ஈரக் குலை நடுங்குகிறது.
தோழர் யாழனோடு பேசிக் கொண்டிருந்தபோது ஒன்றைச் சொன்னார். தாக்குதல் தொடங்குவதற்கு முன்னால் அந்த காலனியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளை அவர்களது பள்ளிகளுக்கே சென்று அவர்களை வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர்களது காடுகளுக்கு செல்லுமாறும் கூறியிருக்கிறார்கள். அவர்கள் குரலில் இருந்த வன்மம் குழந்தைகளை மிரளச் செய்திருக்கிறது. காடுகளுக்குள் ஓடியவர்கள் விடிய விடிய அங்கேயே தங்கியிருக்கிறார்கள்.
உயிர்ச்சேதம் அவர்களது செயல் திட்டத்தில் இல்லை என்றே படுகிறது.
அந்தக் காலனியில் இருப்பவை மற்ற சேரிகளைப் போல குடிசைகள் அல்ல. பெரும்பாலும் அவை மாடிக் கட்டிடங்கள். அவற்றுள் பல இரண்டு மாடிக் கட்டிடங்கள். சொகுசானவை.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் துப்புறவு உள்ளிட்ட பணிகளை செய்து கொண்டு இருந்தவர்கள்.போன தலைமுறையினர் அதிலிருந்து விடுபட்டு கொத்தனார்களாக மாறி புலம் பெயர்ந்து நிறைய சம்பாரித்து இதை சாதித்திருக்கிறார்கள். தெருத் தெருவாக் கூட்டினாயே இனி நீ விளக்குமாறே வீட்டிலும் எடுக்க்ட்க்கூடாது என்று வேக்கம் க்ளீனர் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஏறத்தாழ 300 கான்க்ரீட் வீடுகள். சுத்தமாய் இடித்திருக்கிறார்கள். மிக நிதானமாக, மிக இயல்பாக இதை செய்து முடித்திருக்கிறார்கள். இதுதான் நம்மை கொதிக்க வைப்பதே.
ஒரு குடிசையைக் கொளுத்துகிறார்கள். எரியும் ஒரு குடிசையிலிருந்து குரல் கேட்கிறது. உடனே தீயை அணைக்கிறார்கள் உள்ளே அம்மாசி என்ற கிழவர் இருந்திருக்கிறார். அவரை பத்திரமாக வெளியே கொண்டு வருகிறார்கள். மீண்டும் கொளுத்துகிறார்கள். எத்தகையதொரு மனத் தயாரிப்பு வேண்டும் இதற்கு.
அதே கண்டன நிகழ்ச்சியில் கம்பீரன் பேசியதும் அனைவரது கவனத்தை ஈர்த்தது.
அங்கு அமர்ந்திருந்த சுப.வீ அவர்களைப் பார்த்து கை நீட்டி சுப.வீ அவர்கள் சாதியை மறுப்பதற்கு அவர் படித்த பெரியாரியமே காரணம் என்றும் அங்கு பேசி அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ் சாதியை மறுப்பதற்கு அவர் படித்தி மார்க்சியமுமே காரணம் என்றும் கூறினார். ஆனால் எதையுமே படிக்காத பாமரத் தலித்துகள் ஜாதி பார்ப்பதில்லை எனவும், தங்களுக்கு யார் வேண்டுமானாலும் பெண் தரலாமென்றும் தங்களிடமிருந்து யார் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்றும் அவர் கூறியபோது அரங்கம் அதிர்ந்தது.
அதற்குப் பிறகு பேச வந்த மதிவண்ணன் அனைத்தையும் ஆமோத்த அதே வேளையில் தலித்துகளிலும் இந்தப் பாகுபாடு இருப்பதாக வேதனையோடு சொன்னார்.விழுப்புரம் அருகில் உள்ள பல்லி வேலியனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்ற பறையர் இனத்துப் பெண்ணும் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற அருந்ததிய இளைஞனும் காதலித்து 2010 வாக்கில் யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகும் இருவரும் வழக்கம் போல அவரவர் வீட்டில் அவரவர் இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்ததும் கோகிலாவை அவரது வீட்டில் கொலை செய்திருப்பதாக சொல்கிறார்கள். விசாரிக்கச் சென்ற நண்பர்கள் சொல்வதிலிருந்து ஒரு கட்டத்தில் கோகிலா கதறிக் கொண்டு வெளியே வந்ததாகவும் அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றதாகவும், தடுத்த உறவினர்கள் இது தங்கள் வீட்டு விசயம் என்று கூறி தட்டி விட்டதாகவும் தெரிகிறது.
மேற்சொன்ன சமவத்தை சொன்ன மதிவண்ணன் இது குறித்தும் கவலையும் கவனமும் கொள்ளவேண்டும் என்று சொன்னபோது அரங்கம் இறுகியது.
அதே கூட்டத்தில் இறுதியாகப் பேச வந்த தோழர்.திருமாவளவன் மதி வண்ணன் கூறியதை தாம் ஏற்பதாகவும், இதுமாதிரி இடங்களில் விடுதலை சிறுத்தைகள் அருந்ததியரோடு இணைந்துதான் எதிர் கொள்ளும் என்றபோது மீண்டும் அரங்கம் அதிர்ந்தது.
அவர் சொன்னது உண்மை என்பதைபல்லிவேலியனூரில் கார்த்திகேயனது உறவினர்களோடு இணைந்து விடுதலை சிறுத்தைகள் இயங்குவதை அறியும் போது உணர முடிகிறது.
சரி ,இதற்கு என்னதான் தீர்வு?
“எங்கள்
தேசத்தில்
கொசுவையும்
ஜாதியையும்
ஒழிப்பதற்கு ஏதுமில்லை”
என்பதுபோல வைரமுத்து ஒருமுறை எழுதினார். ஒழிக்க முடியாது என்பதாய்க் கொண்டு முயற்சிக்காமல் விட்டு விடலாமா?
அதே கூட்டத்தில் இனி ஒவ்வொரு ஃபிப்ரவரி 14 அன்றும் ஊர் ஊராக காதல் திருமணங்களை நடத்தப் போவதாக அறிவித்தார்.
மிக அருமையான யோசனை. ஆனால் அது போதாது.
முதலில் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும்.
மதத்தைவிடவும் சாதி கொடூரமானது என்பதை உணரவும் உணர்த்தவுமான தேவை இருக்கிறது.
ஒரு கிறிஸ்தவர் இஸ்லாமியராகவோ இந்துவாகவோ சட்டப்படி மாறலாம். ஒரு இந்துவும் அப்படியே இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ மாற் முடியும். ஒரு இஸ்லாமியர் நினைத்தாலும் உடனடியாக இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ மாறிவிட முடியும். ஆனால் என்ன செய்தாலும் ஒரு தலித் அய்யராகவோ செட்டியாராகவோ அல்லது வேறு உயர்ந்த சாதிக்காரராகவோ மாற முடியாது.
ஆகவே மத நல்லிணக்கத்தைக் காட்டிலும் சாதி ஒழிப்பே இன்றையப் பிரதானம் என்பதை உணர்ந்து நல்ல சக்திகள் களமேக வேண்டும்.
பெரியார் திடலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்ததைப் போல் ஊர் ஊராக சமூக அமைப்புகள் கலப்பு மண சுயம்வரங்களை ஏற்பாடு செய்து ஊக்குவிக்க வேண்டும்.
இதில் இரண்டு இடதுசாரி அமைப்புகளும் தங்களுக்கான பொறுப்புணர்வினை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சிற்றிதழ்கள் பேரதிகப் பக்கங்களை இதற்காக ஒதுக்க வேண்டும்.
ஊடகங்கள் இதன் மீது கவனம் குவிக்க வேண்டும்.
படைப்பாளிகள் கலப்பு மணங்களை, சாதி ஒழிப்பை மையப் படுத்தி வாசிக்கிற மாதிரி படைப்புகளைத் தருதல் வேண்டும்.
வீதி நாடகங்கள், கூத்துகள் போன்றவை இவற்றை சுவீகரித்துக் கொள்ள வேண்டும்.
த.மு. எ.க. ச கலை இரவுகளை முழுக்க முழுக்க இதனை மையப் படுத்தி நிகழ்த்த வேண்டும்.
இந்த உயரிய நோக்கோடு பார்க்கிற மாதிரி திரைப் படங்கள் வரவேண்டும்.நாடு முழுக்க கிளைகளைக் கொண்டுள்ள த.மு. எ.க.ச போன்ற அமைப்புகள் நினைத்தால் குறும் படங்களும் திரைப் படங்களும் சாத்தியமே.
இவை எது கடந்தும் வீரியம் மிக்கது மெகா தொடர்கள்.
ஆனால் இவை எல்லாம் கடந்து சாதிவெறியர்களைத் தண்டிக்க வேண்டி அழுத்தமான நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும்.
கவனம் குவிப்போம்.
நன்றி” காக்கைச் சிறகினிலே”
சென்னை இக்ஷா அரங்கத்தில் 01.12.2012 அன்று “விடுதலைக் குயில்கள்” ஏற்பாடு செய்திருந்த தர்மபுரி தாக்குதலுக்கு எதிரான கண்டன கூட்டத்தில்தான் இவ்வாறு பேசினார் தோழர்.சுப.வீ அவர்கள்.
தோழரது தமிழ்த் தேசியத்தோடு நமக்கு முரண்பாடுகள் இருந்திருக்கலாம். சில நேரங்களில் பொதுத் தளங்களில் சிலர் விமர்சித்தும் இருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியத்திற்கான அவரது அயராத, அப்பழுக்கற்ற மிக நீண்ட உழைப்பில் யாருக்கும் எப்போதுமே சந்தேகம் இருந்ததில்லை. அதற்கான அவரது கடந்த கால இழப்புகளையும், காயங்களையும், வலிகளையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம் என்ற வகையில் அவரது உரை நம்மை அசைத்து உலுக்கத்தான் செய்தது.
தமிழ்த் தேசியமா?, சாதி ஒழிப்பா? எது முதலில் என்ற கேள்விக்கு கொஞ்சமும் தயக்கமின்றி தனது வேலைத் திட்டத்தில் சாதி ஒழிப்பிற்கே முதலிடம் என்பதாக அமைந்தது அவரது உரை. “தமிழன்” என்ற ஒற்றை அடையாளமல்ல, ”சாதியற்ற தமிழன்” என்பதே தனது இலக்கு என்பதை மிகச் சரியாகத் தெளிவு படுத்தினார்.
ஆயிரக் கணக்கான மேடைகளில் தமிழ்த் தேசியம் பேசிய தோழர். சுப. வீ அவர்கள் தமிழன் என்ற அடையாளத்தில் சாதிச் சாயம் இருக்குமானால் அது தனக்குத் தேவையில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
எனில், இதுவரை அப்படிப் பேசுவதற்கான தேவையே யாருக்கும் இல்லாமல் இருந்ததா?
எப்போதும் சாதி இருக்கவே செய்தது. புலேயும், அம்பேத்கரும், பெரியாரும், ரெட்டைமலை சீனிவாசன் அவர்களும், அயோத்திதாசப் பண்டிதரும் இன்னும் பலரும் போராடியதன் விளைவாக மட்டுப் பட்டுக் கிடந்த ஜாதி வெறியின் வீரியம் இப்போது மீண்டும் தன் கோர முகத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது.
ஒரு காலத்தில் வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்கள் தங்குவதற்கு வீடு பார்த்தால் கொஞ்சமும் வெட்கமின்றி என்ன ஜாதி என்று கேட்பார்கள். ஏறத்தாழ எல்லா ஊர்களிலும் இரட்டைக் குவளை இருந்தது.
திருமண ஏற்பாடு செய்பவர்கள் பெண் எப்படி? மாப்பிள்ளை எப்படி? என்பதையெல்லாம் விசாரிப்பதற்கு முன் அவர்கள் குலம் என்ன? கோத்திரம் என்ன? என்பதைத்தான் விசாரிப்பார்கள். இவை ஒத்து வந்தால் மட்டுமே மற்றதைக் குறித்து கவனம் செலுத்துவார்கள்.
இது ஏதோ பாமர கிராமத்து மக்களிடம் மட்டுமே இருந்ததாகக் கொள்ளக் கூடாது.
” ஒடுக்கப் பட்டோர் குரல்” என்ற பத்திரிக்கையை அம்பேத்கர் ஆரம்பிக்கிறார். அப்போது திலகர் அவர்கள் “கேசரி” என்ற இதழை நடத்தி வருகிறார். கேசரி இதழில் தனது “ ஒடுக்கப்பட்டோர் குரல்” இதழுக்கான விளம்பர வாசகத்தையும், அதற்கான கட்டணத்தையும் இணைத்து அனுப்புகிறார் அம்பேத்கர். அவை திருப்பப் படுகிறது. தலித் ஒருவர் நடத்தும் இதழின் விளம்பரத்தைப் போட்டால் தனது இதழ் தீட்டுப் பட்டுவிடும் என்பதைத் தவிர வேறு என்ன காரணத்தை திலகர் இதற்கு சொல்லியிருக்க முடியும்?
ஆக, “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்று முழங்கியவர் என்று ஒளி வட்டத்தோடு பிம்பம் கட்டமைக்கப் பட்டு பள்ளியின் முதல் நாள் தொட்டே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப் படும் ஒரு தலைவரிடமே சாதி இருந்திருக்கிறது. அதுவும் அம்பேத்கரிடமே அவர் இந்த அளவிற்கு தனது ஜாதியைக் காட்டியிருக்கிறார் என்றால் ஒரு சாதாரண தலித்தை திலகர் எவ்வளவு கேவலமாக நடத்தியிருப்பார் என்பதை நம்மால் உணர முடிகிறது.
இன்னொன்றையும் இங்கே பார்க்க வேண்டும். திலகர் மாதிரி தலைவர்களே அம்பேத்கர் மாதிரி தலைவர்களிடம் இப்படி ஜாதியோடு நடந்து கொண்டார்கள் என்றால் மற்ற பாமர சாதி இந்துக்கள் பாமர தலித்துகளை எவ்வளவு கேவலமாக நடத்தியிருப்பார்கள்.
இப்படி இருந்த நிலைதான் கொஞ்ச காலம் மட்டுப் பட்டுக் கிடந்தது. பையனுக்கோ பெண்னிற்கோ வரண் பார்ப்பவர்கள் “ எதுவாயிருந்தாலும் பரவாயில்லை, அதுவா மட்டும் இல்லாமப் பார்” என்று கேட்பவனுக்கும் சொல்லும் தனக்குமே கேட்காத ரகசியக் குரலில் சொல்லுமளவிற்குத்தான் ஜாதி இருந்ததது. இப்பொழுதும் ஜாதி பார்க்கவே செய்தார்கள். அதை வெளிப்படையாக பேச வெட்கப் பட்டார்கள்.
இப்போது மேடை போட்டு பேசுகிறார்கள். மருத்துவம் படித்தவரும், பொறியியல் படித்தவரும், சட்டம் படித்தவரும், மேடை போட்டு கலப்புக் கூடாது என்று வெளிப்படையாக வெட்கமின்றி பேசுகிறார்கள். தங்கள் சாதிப் பெண்ணை வேறு சாதிக் காரன் மணந்தால் வெட்டிப் போடு ஒரு முன்னால் சட்டமன்ற உறுப்பினரே பேசினார் என்பதான செய்திகள்கூட வருகின்றன.
இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி வருகிறது. இப்படிப் பேசுவது சட்டப்படி குற்றம் இல்லையா?. நமக்குத் தெரிந்த மட்டிலும் இது குற்றமே ஆகும். எனில் இப்படி பகிரங்கமாகப் பேசுகிறார்களே அவர்கள் மேல் ஏன் நடவடிக்கையே எடுக்கப் படவில்லை. இப்படி ஒருவர் மற்றவரிடம் உரையாடினாலே வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உரியவராகிறார். மேடை போட்டு கூட்டம் கூட்டி காவல் துறையினர் குவிந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் அவர்கள் சாட்சியாகவே ஒருவர் உரத்தக் குரலெடுத்து பேச முடிகிறது என்றால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வேறு எதற்கு எதிராகப் பயன்படுத்த பத்திரப் படுத்தி வைத்திருக்கிறார்கள் என்ற அய்யம் இயல்பாகவே வருகிறது.
இது இப்படி இருக்க வன்கொடுமை சட்டம் கொடுமையானது. அதில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் பேசுவதில் வியப்பாய் எதுவும் இல்லை. எல்லா நேரங்களிலும் சட்டம் இப்படி மௌனம் காக்காது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருப்பதன் விளைவுதான் இந்தக் கூற்று. ஒருக்கால் சாதீய அடக்கு முறைக்கு எதிரானவர்கள் கையில் அதிகாரம் வந்துவிட்டால் தங்களது அயோக்கியத் தனங்கள் தண்டிக்கப் படும் என்கிற எச்சரிக்கை உணர்வே அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வைத்திருக்கிறது.
இந்தச் சூழல் மட்டுமல்ல சுப.வீ அவர்கள் அப்படிப் பேச. அவர் ஏன் அப்படிப் பேசினார் என்பதை உள்ளபடி உணர வேண்டுமானால் கீழ்வரும் சில சம்பவங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். சம்பவங்கள் என்பது அயோக்கியத்தனம் என்றே படுகிறது. கொடுமைகள் என்பதே சரி.
சேத்தியாத் தோப்பு சென்னிநத்தம் காலனியைச் சேர்ந்த கோபாலக்கிருஷ்ணன் என்ற தலித் இளைஞனும் பரதூரைச் சேர்ந்த சாதி இந்துப் பெண்ணான (அநேகமாக வன்னிய இனத்தைச் சார்ந்த) துர்காவும் ஒரே கல்லூரியில் படிக்கிறர்கள்.இருவருக்குமிடையில் காதல் மலர்கிறது. பெண்ணின் தந்தை ரவியும் அவரது உறவினர்களும் கண்டிக்கிறார்கள். காதலும் எதிர்ப்பும் போட்டிப் போட்டுக்கொண்டு வளர்கின்றன.
திடீரென கோபாலக் கிருஷ்ணனைக் காணவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போடுகிறார்கள்.
ஆட்கொணர்வு மனு போட்ட அடுத்தநாள் வெள்ளியங்குடி குளத்தில் கோபாலகிருஷ்ணனது உடல் மிதக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகளும் கோபாலகிருஷ்ணனின் உறவினர்களும் கோபத்தோடு தெருவிற்கு வந்த பின்னால் துர்காவின் தந்தை ரவி அவரது பாட்டி கனகவள்ளி மற்றுமொருவரை கைது செய்கிறது காவல்துறை.
துர்காவின் தந்தை கொடுத்த வாக்குமூலத்தை நக்கீரன் இணைய தளத்தில் வாசிக்க முடிந்தது.
தான் எவ்வளவோ கண்டித்தும் கனிவாக எடுத்துக் கூறியும் கோபாலகிருஷ்ணன் கேட்கவில்லை என்றும், ஒரு இழவிற்காக தான் வெளியூர் சென்றிருந்த சமயம் கோபாலகிருஷ்ணன் தன் வீட்டிற்கு வந்து துர்காவோடு பேசிக் கொண்டிருந்ததாகவும் சொல்கிறார். அதை பார்த்த அவரது அம்மா கனகவள்ளி இருவரையும் கட்டையால் அடித்து தனித் தனி அறைகளில் போட்டு பூட்டி வைத்ததாகவும் தான் கோபத்தில் கொன்று விட்டதாகவும் சொல்கிறார்.
முதலில் ஒரு கிழவியால் இரு இளைய வயதுப் பிள்ளைகளை அடித்து தனித் தனி அறைகளில் தள்ளிப் பூட்ட முடியுமா? அவ்வளவு பலமற்ற பித்துக் குளியா கோபாலகிருஷ்ணன். இதை நன்கு திட்டமிடப்பட்ட ஒரு கூட்டுச் செயலாகவே கொள்ள முடிகிறது.
அதை எல்லாம் விசாரனை பார்த்துக் கொள்ளட்டும். நாம் கவலை கொள்ள அதைவிடவும் முக்கியமான விசயம் ஒன்று இருக்கிறது.
பொதுவாகவே இப்படி ஒரு கொலை நடந்த பின்னால் அதற்கும் தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றே நிறுவ முயல்வார்கள். ஆனால் இங்கு நான்தான் கொன்றேன் என்று ரவி சொல்வதன் மூலம் ஜாதி எந்த வித சிறு உடையுமின்றி அம்மணமாய் வெட்கமின்றி வெளி வருகிறது. இந்த துணிச்சல்தான் நாம் கவலை கொள்ள வேண்டியதும் எதிகொண்டு வீழ்த்தவேண்டிய விசயமுமாகும்.
இதைவிடக் கொடியது பிரியாவின் கொலை.
சிறுவத்தூர் என்ற ஊரைச் சார்ந்த சரண்யா என்ற வன்னியப் பெண்னும் காந்தளவாடி என்ற கிராமத்தைச் சார்ந்த பறையர் இனத்தைச் சார்ந்த சிவகண்டன் என்ற இளைஞனும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். இதே சமயத்தில் காந்தளவாடி கிராமத்தைச் சார்ந்த பிரியா என்ற தலித் பெண் சிறுவத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
சிறுவத்தூர் வன்னியர்களின் கோவம் பிரியாவின் மேல் திரும்புகிறது. தங்கள் பெண்ணை பிரியாவின் ஊர்க்காரன் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட கோவத்தை பிரியா போகும் போதும் வரும்போதும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரியாவும் ஒரு குளத்தில் மிதக்கிறாள். இதை என்னவென்று சொல்வது? ஜாதி ஆணவமா? மனநோயா? அல்லது வேறு எதுவுவோமா?
தர்மபுரி நத்தம் காலனியில் நடந்த கொடுமையில் அங்கு நடந்த வன்முறையை விடவும் அதற்கான திட்டமிடலே மிகவும் ஆபத்தானதாகப் படுகிறது. யாருக்கும் ஒரு நகக் கீரலும் இல்லாமல் அத்தகையதொரு கோர தாண்டவத்திற்கு எவ்வளவு கவனத்தோடு கூடிய திட்டமிடலும் எவ்வளவு நீண்ட பயிற்சியும் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே ஈரக் குலை நடுங்குகிறது.
தோழர் யாழனோடு பேசிக் கொண்டிருந்தபோது ஒன்றைச் சொன்னார். தாக்குதல் தொடங்குவதற்கு முன்னால் அந்த காலனியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளை அவர்களது பள்ளிகளுக்கே சென்று அவர்களை வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர்களது காடுகளுக்கு செல்லுமாறும் கூறியிருக்கிறார்கள். அவர்கள் குரலில் இருந்த வன்மம் குழந்தைகளை மிரளச் செய்திருக்கிறது. காடுகளுக்குள் ஓடியவர்கள் விடிய விடிய அங்கேயே தங்கியிருக்கிறார்கள்.
உயிர்ச்சேதம் அவர்களது செயல் திட்டத்தில் இல்லை என்றே படுகிறது.
அந்தக் காலனியில் இருப்பவை மற்ற சேரிகளைப் போல குடிசைகள் அல்ல. பெரும்பாலும் அவை மாடிக் கட்டிடங்கள். அவற்றுள் பல இரண்டு மாடிக் கட்டிடங்கள். சொகுசானவை.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் துப்புறவு உள்ளிட்ட பணிகளை செய்து கொண்டு இருந்தவர்கள்.போன தலைமுறையினர் அதிலிருந்து விடுபட்டு கொத்தனார்களாக மாறி புலம் பெயர்ந்து நிறைய சம்பாரித்து இதை சாதித்திருக்கிறார்கள். தெருத் தெருவாக் கூட்டினாயே இனி நீ விளக்குமாறே வீட்டிலும் எடுக்க்ட்க்கூடாது என்று வேக்கம் க்ளீனர் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஏறத்தாழ 300 கான்க்ரீட் வீடுகள். சுத்தமாய் இடித்திருக்கிறார்கள். மிக நிதானமாக, மிக இயல்பாக இதை செய்து முடித்திருக்கிறார்கள். இதுதான் நம்மை கொதிக்க வைப்பதே.
ஒரு குடிசையைக் கொளுத்துகிறார்கள். எரியும் ஒரு குடிசையிலிருந்து குரல் கேட்கிறது. உடனே தீயை அணைக்கிறார்கள் உள்ளே அம்மாசி என்ற கிழவர் இருந்திருக்கிறார். அவரை பத்திரமாக வெளியே கொண்டு வருகிறார்கள். மீண்டும் கொளுத்துகிறார்கள். எத்தகையதொரு மனத் தயாரிப்பு வேண்டும் இதற்கு.
சொத்துகளை நாசம் செய்திருக்கிறார்கள். சான்றிதழ்களை கொளுத்தியிருக்கிறார்கள். அவர்கள் சொல்ல விரும்பிய செய்தி இதுதான்,
“கல்வியோ, செல்வமோ உங்களை எங்கள் அருகே கொண்டு வருமெனில் உங்களிடமிருக்கும் இரண்டையும் நாசப் படுத்துவோம். உங்களை எங்களின் கீழே வைத்திருக்க எதையும் செய்வோம்.”
உடனடியாக அரசு புதிய பாடப் புத்தகங்களை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கிறார்கள். அவர்களை தைரியமாகப் பள்ளிக்குப் போகச் சொன்ன போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை கேட்டாளாம்,
“ அவர்களோடு ஒன்றாய் நாங்கள் எப்படி படிக்க முடியும்?”
“ஏண்டா?”
”என்னோடு படிக்கும் வகுப்புத் தோழன்தானே என் வீட்டை இடித்தது. அவனோடு எந்த தைரியத்தில் ஒன்றாய் படிப்பது?”
எனில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பையனைக் கூட சாதி அயோக்கியத் தனத்திற்கு தயார் செய்திருக்கிறது என்றுதானே பொருள்.
உடனடியாக அரசு புதிய பாடப் புத்தகங்களை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கிறார்கள். அவர்களை தைரியமாகப் பள்ளிக்குப் போகச் சொன்ன போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை கேட்டாளாம்,
“ அவர்களோடு ஒன்றாய் நாங்கள் எப்படி படிக்க முடியும்?”
“ஏண்டா?”
”என்னோடு படிக்கும் வகுப்புத் தோழன்தானே என் வீட்டை இடித்தது. அவனோடு எந்த தைரியத்தில் ஒன்றாய் படிப்பது?”
எனில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பையனைக் கூட சாதி அயோக்கியத் தனத்திற்கு தயார் செய்திருக்கிறது என்றுதானே பொருள்.
அங்கு அமர்ந்திருந்த சுப.வீ அவர்களைப் பார்த்து கை நீட்டி சுப.வீ அவர்கள் சாதியை மறுப்பதற்கு அவர் படித்த பெரியாரியமே காரணம் என்றும் அங்கு பேசி அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ் சாதியை மறுப்பதற்கு அவர் படித்தி மார்க்சியமுமே காரணம் என்றும் கூறினார். ஆனால் எதையுமே படிக்காத பாமரத் தலித்துகள் ஜாதி பார்ப்பதில்லை எனவும், தங்களுக்கு யார் வேண்டுமானாலும் பெண் தரலாமென்றும் தங்களிடமிருந்து யார் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்றும் அவர் கூறியபோது அரங்கம் அதிர்ந்தது.
அதற்குப் பிறகு பேச வந்த மதிவண்ணன் அனைத்தையும் ஆமோத்த அதே வேளையில் தலித்துகளிலும் இந்தப் பாகுபாடு இருப்பதாக வேதனையோடு சொன்னார்.விழுப்புரம் அருகில் உள்ள பல்லி வேலியனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்ற பறையர் இனத்துப் பெண்ணும் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற அருந்ததிய இளைஞனும் காதலித்து 2010 வாக்கில் யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகும் இருவரும் வழக்கம் போல அவரவர் வீட்டில் அவரவர் இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்ததும் கோகிலாவை அவரது வீட்டில் கொலை செய்திருப்பதாக சொல்கிறார்கள். விசாரிக்கச் சென்ற நண்பர்கள் சொல்வதிலிருந்து ஒரு கட்டத்தில் கோகிலா கதறிக் கொண்டு வெளியே வந்ததாகவும் அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றதாகவும், தடுத்த உறவினர்கள் இது தங்கள் வீட்டு விசயம் என்று கூறி தட்டி விட்டதாகவும் தெரிகிறது.
மேற்சொன்ன சமவத்தை சொன்ன மதிவண்ணன் இது குறித்தும் கவலையும் கவனமும் கொள்ளவேண்டும் என்று சொன்னபோது அரங்கம் இறுகியது.
அதே கூட்டத்தில் இறுதியாகப் பேச வந்த தோழர்.திருமாவளவன் மதி வண்ணன் கூறியதை தாம் ஏற்பதாகவும், இதுமாதிரி இடங்களில் விடுதலை சிறுத்தைகள் அருந்ததியரோடு இணைந்துதான் எதிர் கொள்ளும் என்றபோது மீண்டும் அரங்கம் அதிர்ந்தது.
அவர் சொன்னது உண்மை என்பதைபல்லிவேலியனூரில் கார்த்திகேயனது உறவினர்களோடு இணைந்து விடுதலை சிறுத்தைகள் இயங்குவதை அறியும் போது உணர முடிகிறது.
சரி ,இதற்கு என்னதான் தீர்வு?
“எங்கள்
தேசத்தில்
கொசுவையும்
ஜாதியையும்
ஒழிப்பதற்கு ஏதுமில்லை”
என்பதுபோல வைரமுத்து ஒருமுறை எழுதினார். ஒழிக்க முடியாது என்பதாய்க் கொண்டு முயற்சிக்காமல் விட்டு விடலாமா?
அதே கூட்டத்தில் இனி ஒவ்வொரு ஃபிப்ரவரி 14 அன்றும் ஊர் ஊராக காதல் திருமணங்களை நடத்தப் போவதாக அறிவித்தார்.
மிக அருமையான யோசனை. ஆனால் அது போதாது.
முதலில் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும்.
மதத்தைவிடவும் சாதி கொடூரமானது என்பதை உணரவும் உணர்த்தவுமான தேவை இருக்கிறது.
ஒரு கிறிஸ்தவர் இஸ்லாமியராகவோ இந்துவாகவோ சட்டப்படி மாறலாம். ஒரு இந்துவும் அப்படியே இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ மாற் முடியும். ஒரு இஸ்லாமியர் நினைத்தாலும் உடனடியாக இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ மாறிவிட முடியும். ஆனால் என்ன செய்தாலும் ஒரு தலித் அய்யராகவோ செட்டியாராகவோ அல்லது வேறு உயர்ந்த சாதிக்காரராகவோ மாற முடியாது.
ஆகவே மத நல்லிணக்கத்தைக் காட்டிலும் சாதி ஒழிப்பே இன்றையப் பிரதானம் என்பதை உணர்ந்து நல்ல சக்திகள் களமேக வேண்டும்.
பெரியார் திடலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்ததைப் போல் ஊர் ஊராக சமூக அமைப்புகள் கலப்பு மண சுயம்வரங்களை ஏற்பாடு செய்து ஊக்குவிக்க வேண்டும்.
இதில் இரண்டு இடதுசாரி அமைப்புகளும் தங்களுக்கான பொறுப்புணர்வினை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சிற்றிதழ்கள் பேரதிகப் பக்கங்களை இதற்காக ஒதுக்க வேண்டும்.
ஊடகங்கள் இதன் மீது கவனம் குவிக்க வேண்டும்.
படைப்பாளிகள் கலப்பு மணங்களை, சாதி ஒழிப்பை மையப் படுத்தி வாசிக்கிற மாதிரி படைப்புகளைத் தருதல் வேண்டும்.
வீதி நாடகங்கள், கூத்துகள் போன்றவை இவற்றை சுவீகரித்துக் கொள்ள வேண்டும்.
த.மு. எ.க. ச கலை இரவுகளை முழுக்க முழுக்க இதனை மையப் படுத்தி நிகழ்த்த வேண்டும்.
இந்த உயரிய நோக்கோடு பார்க்கிற மாதிரி திரைப் படங்கள் வரவேண்டும்.நாடு முழுக்க கிளைகளைக் கொண்டுள்ள த.மு. எ.க.ச போன்ற அமைப்புகள் நினைத்தால் குறும் படங்களும் திரைப் படங்களும் சாத்தியமே.
இவை எது கடந்தும் வீரியம் மிக்கது மெகா தொடர்கள்.
ஆனால் இவை எல்லாம் கடந்து சாதிவெறியர்களைத் தண்டிக்க வேண்டி அழுத்தமான நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும்.
கவனம் குவிப்போம்.
நன்றி” காக்கைச் சிறகினிலே”
pakirvuku nantri....
ReplyDeleteமிக்க நன்றி சீனி
Deleteஇதையெல்லாம் பார்க்கையில் மனித இனத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகின்றேன். அதேசமயம் எங்கள் குடும்பங்களை நினைத்து பெருமை கொள்கின்றேன். காரணம் எங்கள் குடும்பங்களில் நிறைய சாதியற்ற திருமணங்கள் தான் நடந்திருக்கின்றன.
ReplyDeleteஇதற்கு ஏன் வெட்கப் படவேண்டும். மாறாக கரம் கோர்ப்போம்
Deleteசாதியத்திற்கு எதிரான போர் என்பது அவ்வளவு எளிதானதல்ல. அப்போரை மிக தைரியத்தோடும் மன உறுதியோடும் முன்னின்று நடத்திய பெரியாரின் உத்திகளை பின்பற்றும் ஒரு தலைவன் கூட உருவகாதது நம் துரதிர்ஸ்டம் . நீங்கள் உங்கள் பிளாக்கில் குறிப்பிட்டுள்ள பலர் அதிக சமரசங்களுடன் தான் இயக்கம் நடத்திவருகிறார்கள். கருத்துக்கள் பயனுள்ளவை, நன்றி தோழர்.
ReplyDeleteமிக்க நன்ற் தோழர்
Deleteநன்றி
Deleteநன்றி ......தோழர் எட்வின் நல்ல செய்தியை பகிர்ந்து உள்ளீர்கள் . . ஒன்றை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் ,நீங்கள் சொல்லும் எல்லா நிகர்ழ்வுகளிலும் தலித் ஒரு அணியிலும் தலித் அல்லாதோர் ஒரு அணியிலும் இருந்துதான் இந்த கொடுமைகள் , நிகழ்வுகள் நடந்து இருக்கின்றது என்பதை மறக்க கூடாது . சாதியம் வெட்கமின்றி அம்மணமாக வருகிறது என்ற கோபாவேசம் மட்டுமே ஆறுதலையோ ,தீர்வையோ எட்ட முடியாது .தலித் அல்லாதோர் என்ற பட்டியல்தான் மிக ஆபத்தானது சாதிய மோதல் வரும்போதெல்லாம் தலித் மக்கள் மீது எந்த பகுதியில் எந்த சாதி பலமானதாக உள்ளதோ அந்த சாதிதான் மோதலைஉருவாக்கும் மற்ற சாதியினரை இணைத்துகொள்வார்கள் . 1968-69ல் கீழ் வெண்மணியில் 42 உயிர்களை பலி கொண்ட நிகழ்வில் கூட சாதியைவிடவும் ஆண்டான் -அடிமை என்ற நிலபிரபுவத்துவ கோரமுகம்தான் வெளிப்பட்டது ஆனால் தருமபுரி உணர்த்தும் படிப்பினை வேறுவிதமானது இங்கே ஆண்டான் -அடிமையோ ,பெரும் முதலாளியோ இல்லை ஆனால் நிலபிரத்துவ குணம்... அதை நிலை நிறுத்தியது தலித் மக்களையொத்த உழைப்பாளிகள்தான் என்பது வேதனையிலும் வேதனை ! அவர்களை அரசியல் ஆதாயத்துக்காக சாதிய அரசியல்வாதிகள் திட்டம் போட்டு பயன்படுத்திகொண்டார்கள் அவர்களின் நிகழ்ச்சிநிரலை அனைத்து சாதியினரும் கலந்து கொண்டு அந்த கொடுமையை செய்துள்ளனர் .அப்படியானால் இந்த அனைத்து சாதியினரில் அனைத்து கட்சியினரும் இருந்தார்களா ? இல்லையா ? ......... இருக்கிறர்கள் ! அப்படி அனைத்து சாதியினரும் அங்கே கட்சி பாகுபாடிலாமல் தலித்தை எதிர்ப்பதற்கு..... ஒன்ரிணைவதால்தான் தமிழகம் முழுவதும் உள்ள சாதிய தலைவர்களை அவர்களால் ஒன்றிணைக்க முடிகிறது . இதில் கவனிக்க வேண்டியதும்,காரியமாற்ற வேண்டியதும் இவற்றை கருத்தில் கொண்டுதான் ........ எப்படி தேடியும் பதில் கிடைக்காத இந்த புதிரை உடைக்காமல் பட்டிமன்றமோ , கருத்தரங்கமோ ,கவியரங்கமோ நடத்தி பயனில்லை !இவற்றை அனைத்து கட்சியினரும் உணருவார்களா ? இதை போக்க அவர்கள் உடன்படுவார்களா ? இதுதான் நம்முன் இருக்கும் சவால் ! கருத்தரங்கம் நடத்தும் கட்சியிலிருந்து சாதிவெறியை தூண்டி அனைத்து சாதி தலைவர்களையும் ஒரே மேடையில் அமர்த்தும் கட்சி வரை அந்த தகுதி இல்லை ! கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் இதை கையில் எடுக்க முடியும் இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் , கலப்பு மணம் புரிவோரும் ,சாதி மறுப்பவரும் ..சாதி மறுப்பு திருமணங்கள் நடந்து முடிந்த பிறகு தனக்கு பிறக்கும் குழந்தைக்கு சாதி இல்லைஎன்றோ, சாதி அடையாள மற்றவராகவோ வாழ முடிகிறதா ? என்பதை யோசிக்கவேண்டும் ! அதனால் அகமண முறை சரியென்று அர்த்தமல்ல ....அதை கடை பிடிப்பதற்கும் ,அதை எதிர்த்த போராட்டத்தை நடத்துவதற்கு ஒரு சாத்திய வட்டத்துக்குள் இருக்கும் சாதிய கட்சிகளால் நடத்த முடியாது , அதுவும் கம்யூனிஸ்டுகளால் மட்டுமே சாத்தியம் ! தர்மபுரி ,சேத்தியாதோப்பு சென்னிநத்தம் ,சிறுவத்தூர் இந்த வன்முறைகளுக்கும் கோகிலா --கார்த்திகேயன் வேறானது ! ஒடுக்கப்பட்ட சாதிக்குள்ளும் சாதிய படிமம் ஒருங்கமைக்கபட்டுள்ளது அதில் ஆட்டம் காணும்போது சாதி இந்துக்களிடம் என்ன விளைவுகள் ஏற்படுகிறதோ அதே விளைவுகள் ஒடுக்கப்பட்ட சமூக்கத்துக்குள்ளும் நடக்கிறது அதில் ஒரு எள்ளளவும் வித்தியாசமில்லை என்பதுதான் ,பள்ளிநேலியனூர் நமக்கு உணர்த்தும் பாடமாகும் ! "எதையுமே படிக்காத பாமரத் தலித்துகள் ஜாதி பார்ப்பதில்லை எனவும், தங்களுக்கு யார் வேண்டுமானாலும் பெண் தரலாமென்றும் தங்களிடமிருந்து யார் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்று வீர வசம் பேசுவதை விட்டுவிட்டு கம்பீரன் போன்றோர் தங்கள் தளத்தில் தலீத் மக்கள் களத்தில் இறங்கிமாற்றம் காண போராடவேண்டும் .திராவிட இயக்கங்களோடும் ,இடதுசாரிகளோடும் இணைத்து கை கோர்த்து போராடுவதுதான் இன்றைய அவசிய அவசரம் ! நன்றி ! க. மணிவண்ணன் . புதுச்சேரி
Deleteஆமாம் தோழர்,
Deleteஇடதுசாரிகளோடு கைகோர்க்க வேண்டும் என்பதில் எப்போதுமே உடன்பாடுதான்.
கம்பீரன் களப் போராளியுமே ஆவார்.
போக அவரும் பல ஆண் டு காலம் இடதுசாரி இயக்கங்களில் பொறுப்பேற்று பணியாற்றியவரே.
த.மு.எ.ச வின் திருவாரூர் மாவட்டச் செயலாளராக அவர் இருந்த போது அவர் அழைத்து அங்கு நான் பேசப் போயிருக்கிறேன்.
இடதுசாரி அமைப்புகளும் அவர் போன்ற தோழர்களை இன்னும் கொஞ்சம் அரவணைப்பது நல்லது.
இடது சாரிகளைத் தவித்துவிட்டு சாதியை ஒழிப்பது சாத்தியமல்ல என்பதையும் கண்டிப்பாக கொள்ளவே வேண்டும்
மிக சிறந்த பதிவு .வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி இந்திரன்
Deleteஅருமையான பதிவு ...பதிவு பதிவாக இல்லாமல் செயல்பட்டால் அருமை
ReplyDeleteமிக்க நன்றி சசி
Delete”விடுதலை குயில்கள் “ கருத்தரங்கத்துக்கு நானும் சென்றிருந்தேன். அந்த அரங்க கருத்துக்களையும் கேசரி பத்திரிக்கை ”மூக்நாயக் “ -ன் விளம்பரத்தை திருப்பி அனுப்பியதும் நல்ல தகவல். உங்களின் பதிவுகள் நூலாக வெளிவரவேண்டும் . தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்க்கிறோம்.
ReplyDeleteமிக்க நன்றிங்க அய்யா. இதுவரை 1)அந்தக் கேள்விக்கு வயது 98, 2) பத்து கிலோ ஞானம் 3) இவனுக்கு அப்போது மனு என்று பேர் என்ற எனது மூன்று நூல்கள் வண்டுள்ளன தோழர்
Deleteதிரு இரா எட்வின் அவர்களின் அருமையான பதிவு.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
மிக்க நன்றிங்க அய்யா
Deleteசாதிகள் இல்லையடி பாப்பா!!
ReplyDeleteஇந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி (Caste) என்ற சொல் இடம் பெற்றுள்ளது! இந்த ஜாதி முறையால்தான் பெரும்பாலான மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.
தில்லாலங்கடி தில்லா!
யாரு எதிர்த்து நின்னா?
ஆமாம் தோழர், என்ன சொல்ல வறீங்க?
Delete1924 இல் செங்கல்பட்டில் நீதிக்கட்சி மாநாடு...
ReplyDeleteஅம்மாநாட்டில் சாதிப் பெயர்களை துறக்கும்
தீர்மானத்தை வழிமொழிந்தவர் என் தாத்தா
காருகுடி (மாயூரம்) சின்னய்யா அவர்கள்...
எங்கள் குடும்பம் சோழ நாட்டில் பெருமை பெற்ற
மேல் குடி (சைவப் பிள்ளை) என்பர் ..
இருப்பினும் என் தந்தையிடம்
யாரவது நீங்கள் என்ன சாதி என் வினவினால், உடனடியாக
ஆண்சாதி என்ற பதில் வெளிப்படும்..
ஒட்டுண்ணிகள் போல் சில ஓட்டுப் பொறுக்கிகள்
சாத்தீயை உயர்த்தி கட்சிகள் ஆரம்பித்து, 5 ஆண்டுக்கொரு
முறை கூட்டணி மாற்றி தங்களை வளப்படுத்தி கொண்தவர்களின்
சாதீய வெறிக்கு எதிராக புரட்சித் "தீ" யாக சிந்தனைகள்
வலுப்படவேண்டும் என்ற அவா எனக்கு உண்டு..
அதற்கு தூண்டுகோலாக உங்கள் பதிவு..நன்றி..
தங்கள் முகவரி தொலைத்தவர்கள் இன்று
மீண்டும் சாதீய உணர்வுடன் வலம் வரத் தொடக்கி இருக்கும்
அவள் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திட முனைவோம்.
சாதீயம் மறுப்போம். சமத்துவம் வளர்ப்போம்..
உங்களது வருகையும் கருத்தும் நிச்சயமாக என்னை பெருமை படுத்துவதாகவே கொள்கிறேன். மிக்க நன்றி தோழர்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான பதிவு!!!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteArumaiyaana Pathivu ayya
ReplyDeleteசாதி ஒரு மனிதகுலத்துக்கு வந்த புற்றுநோய், அதனை கலையாமல் எந்த தேசியம் வந்தாலும் நிலைக்காது!
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteஉங்கள் உணர்வுகளை மதிக்கின்றேன். சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு இரண்டிற்கும் வித்தியாசம் வேண்டும். சாதியை இன்னொரு சாதியால் ஒழிக்க முடியுமா? சாதி பாகுபாடின்றி திருமணம் தேவை . சாதி விட்டு சாதி திருமணம் என்பது சாதியை வளர்க்கும் . சாதி மறுப்பு திருமணங்கள் வேண்டும். சாதி என்ற சொல் பயன்பாடு குறைக்கப்படவேண்டும். தமிழகம் இருண்டு கொண்டிருப்பது இச்சண்டைகளால் உண்மையாகிறது.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteசுபவீ அவர்களின் பேச்சு தெளிவானது.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deletearumayaana katturai nanbare..
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமிகவும் தெளிவான பொறுப்பான பதிவு. என்னுடைய முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன்.
Deleteமிகவும் பொறுப்பான தெளிவான பதிவு. என்னுடைய முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteநேரடி வர்ணனை அருமையான பதிவு
ReplyDeleteஅருமையான பதிவு நேரடி வர்ணனை போல் இருக்கிறது
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமிகவும் சரியான, சாரமுள்ள பதிவு.
ReplyDeleteஎனக்கு பிறகு எவன் இவ்வளவு பொறுமையாய் இருப்பான். எனக்கு பின் கத்தியால் தான் ஜாதியை ஒழிக்க முயலுவார்கள். அதனால் தான் நான் இருக்கும் போதே ஜாதியை ஒழிக்க இவ்வளவு பண்ணூறேன் - -- ஒரு கூட்டத்தில் பெரியார்.
ReplyDeleteஇந்த விசயங்கள் குறித்த சில முக்கிய கருத்தாங்கள் கொண்ட கட்டுரைகள் சில :
http://www.koothaadi.in/2012/11/4.html
http://devibharathi.blogspot.in/2012/11/blog-post.html
http://www.koothaadi.in/2012/12/Casteandlove.html
நேரம் கிடைக்கும் போது படியுங்கள். நன்றி :)
மிக்க நன்றி தோழர். அவசியம் வாசிப்பேன்
Deleteமிக அர்த்தமுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டுள்ளபடி தமுஎகச இந்த விஷயத்தில் தீவிரமாக களமாடி வருகிறது.தருமபுரியில் நடத்திய பறை முழக்க கூட்டத்தை தொடர்ந்து, வரும் ஆறாம் தேதி கடலூரில்...சாதியத்தின் களமாக இருக்கிற கடலூரில் சாதி மறுப்பில் காதல் என்ற தலைப்பில் சிறப்பு மாநாட்டையும் நடத்தவுள்ளோம். ஜனவரி மாதம் முழுவதும் தமிழகமெங்குமுள்ள தமுஎகச கிளைகளில் இது தொடர்பான நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த வழிகாட்டியுள்ளோம்.தங்கள் கடமையை தமுஎகச காலமறிந்து நிச்சயமாய் செய்யும்...செய்துவருகிறது.
மிக்க நன்றி தோழர்
Deleteஅருமையான பகிர்வு
ReplyDeleteமிக்க நன்றி பாலன்
Deleteநான் இன்றுதான் புதிதாக வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பிதிருக்கிறென். என்ன எழுத எப்படி எழுத என்று ஒவ்வொருவர் பக்கமாக ப்போய்ப்பார்த்து வருகிறேன். உங்கபக்கமும் வந்தேன்.பதிவு நல்லா இருக்கு.
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteவருக வருக
வாழ்த்துக்கள் தோழர்
நன்றி ......தோழர் எட்வின் நல்ல செய்தியை பகிர்ந்து உள்ளீர்கள் . . ஒன்றை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் ,நீங்கள் சொல்லும் எல்லா நிகர்ழ்வுகளிலும் தலித் ஒரு அணியிலும் தலித் அல்லாதோர் ஒரு அணியிலும் இருந்துதான் இந்த கொடுமைகள் , நிகழ்வுகள் நடந்து இருக்கின்றது என்பதை மறக்க கூடாது . சாதியம் வெட்கமின்றி அம்மணமாக வருகிறது என்ற கோபாவேசம் மட்டுமே ஆறுதலையோ ,தீர்வையோ எட்ட முடியாது .தலித் அல்லாதோர் என்ற பட்டியல்தான் மிக ஆபத்தானது சாதிய மோதல் வரும்போதெல்லாம் தலித் மக்கள் மீது எந்த பகுதியில் எந்த சாதி பலமானதாக உள்ளதோ அந்த சாதிதான் மோதலைஉருவாக்கும் மற்ற சாதியினரை இணைத்துகொள்வார்கள் . 1968-69ல் கீழ் வெண்மணியில் 42 உயிர்களை பலி கொண்ட நிகழ்வில் கூட சாதியைவிடவும் ஆண்டான் -அடிமை என்ற நிலபிரபுவத்துவ கோரமுகம்தான் வெளிப்பட்டது ஆனால் தருமபுரி உணர்த்தும் படிப்பினை வேறுவிதமானது இங்கே ஆண்டான் -அடிமையோ ,பெரும் முதலாளியோ இல்லை ஆனால் நிலபிரத்துவ குணம்... அதை நிலை நிறுத்தியது தலித் மக்களையொத்த உழைப்பாளிகள்தான் என்பது வேதனையிலும் வேதனை ! அவர்களை அரசியல் ஆதாயத்துக்காக சாதிய அரசியல்வாதிகள் திட்டம் போட்டு பயன்படுத்திகொண்டார்கள் அவர்களின் நிகழ்ச்சிநிரலை அனைத்து சாதியினரும் கலந்து கொண்டு அந்த கொடுமையை செய்துள்ளனர் .அப்படியானால் இந்த அனைத்து சாதியினரில் அனைத்து கட்சியினரும் இருந்தார்களா ? இல்லையா ? ......... இருக்கிறர்கள் ! அப்படி அனைத்து சாதியினரும் அங்கே கட்சி பாகுபாடிலாமல் தலித்தை எதிர்ப்பதற்கு..... ஒன்ரிணைவதால்தான் தமிழகம் முழுவதும் உள்ள சாதிய தலைவர்களை அவர்களால் ஒன்றிணைக்க முடிகிறது . இதில் கவனிக்க வேண்டியதும்,காரியமாற்ற வேண்டியதும் இவற்றை கருத்தில் கொண்டுதான் ........ எப்படி தேடியும் பதில் கிடைக்காத இந்த புதிரை உடைக்காமல் பட்டிமன்றமோ , கருத்தரங்கமோ ,கவியரங்கமோ நடத்தி பயனில்லை !இவற்றை அனைத்து கட்சியினரும் உணருவார்களா ? இதை போக்க அவர்கள் உடன்படுவார்களா ? இதுதான் நம்முன் இருக்கும் சவால் ! கருத்தரங்கம் நடத்தும் கட்சியிலிருந்து சாதிவெறியை தூண்டி அனைத்து சாதி தலைவர்களையும் ஒரே மேடையில் அமர்த்தும் கட்சி வரை அந்த தகுதி இல்லை ! கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் இதை கையில் எடுக்க முடியும் இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் , கலப்பு மணம் புரிவோரும் ,சாதி மறுப்பவரும் ..சாதி மறுப்பு திருமணங்கள் நடந்து முடிந்த பிறகு தனக்கு பிறக்கும் குழந்தைக்கு சாதி இல்லைஎன்றோ, சாதி அடையாள மற்றவராகவோ வாழ முடிகிறதா ? என்பதை யோசிக்கவேண்டும் ! அதனால் அகமண முறை சரியென்று அர்த்தமல்ல ....அதை கடை பிடிப்பதற்கும் ,அதை எதிர்த்த போராட்டத்தை நடத்துவதற்கு ஒரு சாத்திய வட்டத்துக்குள் இருக்கும் சாதிய கட்சிகளால் நடத்த முடியாது , அதுவும் கம்யூனிஸ்டுகளால் மட்டுமே சாத்தியம் ! தர்மபுரி ,சேத்தியாதோப்பு சென்னிநத்தம் ,சிறுவத்தூர் இந்த வன்முறைகளுக்கும் கோகிலா --கார்த்திகேயன் வேறானது ! ஒடுக்கப்பட்ட சாதிக்குள்ளும் சாதிய படிமம் ஒருங்கமைக்கபட்டுள்ளது அதில் ஆட்டம் காணும்போது சாதி இந்துக்களிடம் என்ன விளைவுகள் ஏற்படுகிறதோ அதே விளைவுகள் ஒடுக்கப்பட்ட சமூக்கத்துக்குள்ளும் நடக்கிறது அதில் ஒரு எள்ளளவும் வித்தியாசமில்லை என்பதுதான் ,பள்ளிநேலியனூர் நமக்கு உணர்த்தும் பாடமாகும் ! "எதையுமே படிக்காத பாமரத் தலித்துகள் ஜாதி பார்ப்பதில்லை எனவும், தங்களுக்கு யார் வேண்டுமானாலும் பெண் தரலாமென்றும் தங்களிடமிருந்து யார் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்று வீர வசம் பேசுவதை விட்டுவிட்டு கம்பீரன் போன்றோர் தங்கள் தளத்தில் தலீத் மக்கள் களத்தில் இறங்கிமாற்றம் காண போராடவேண்டும் .திராவிட இயக்கங்களோடும் ,இடதுசாரிகளோடும் இணைத்து கை கோர்த்து போராடுவதுதான் இன்றைய அவசிய அவசரம் ! நன்றி ! க. மணிவண்ணன் . புதுச்சேரி
Deleteதோழர் .எட்வின் அவர்களின் "நோக்குமிடமெல்லாம் ..." செய்தி கோவைக்கு விமர்சன கட்டுரை ...............
Deleteநன்றி ......தோழர் எட்வின் நல்ல செய்தியை பகிர்ந்து உள்ளீர்கள் . . ஒன்றை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் ,நீங்கள் சொல்லும் எல்லா நிகர்ழ்வுகளிலும் தலித் ஒரு அணியிலும் தலித் அல்லாதோர் ஒரு அணியிலும் இருந்துதான் இந்த கொடுமைகள் , நிகழ்வுகள் நடந்து இருக்கின்றது என்பதை மறக்க கூடாது . சாதியம் வெட்கமின்றி அம்மணமாக வருகிறது என்ற கோபாவேசம் மட்டுமே ஆறுதலையோ ,தீர்வையோ எட்ட முடியாது .தலித் அல்லாதோர் என்ற பட்டியல்தான் மிக ஆபத்தானது சாதிய மோதல் வரும்போதெல்லாம் தலித் மக்கள் மீது எந்த பகுதியில் எந்த சாதி பலமானதாக உள்ளதோ அந்த சாதிதான் மோதலைஉருவாக்கும் மற்ற சாதியினரை இணைத்துகொள்வார்கள் . 1968-69ல் கீழ் வெண்மணியில் 42 உயிர்களை பலி கொண்ட நிகழ்வில் கூட சாதியைவிடவும் ஆண்டான் -அடிமை என்ற நிலபிரபுவத்துவ கோரமுகம்தான் வெளிப்பட்டது ஆனால் தருமபுரி உணர்த்தும் படிப்பினை வேறுவிதமானது இங்கே ஆண்டான் -அடிமையோ ,பெரும் முதலாளியோ இல்லை ஆனால் நிலபிரத்துவ குணம்... அதை நிலை நிறுத்தியது தலித் மக்களையொத்த உழைப்பாளிகள்தான் என்பது வேதனையிலும் வேதனை ! அவர்களை அரசியல் ஆதாயத்துக்காக சாதிய அரசியல்வாதிகள் திட்டம் போட்டு பயன்படுத்திகொண்டார்கள் அவர்களின் நிகழ்ச்சிநிரலை அனைத்து சாதியினரும் கலந்து கொண்டு அந்த கொடுமையை செய்துள்ளனர் .அப்படியானால் இந்த அனைத்து சாதியினரில் அனைத்து கட்சியினரும் இருந்தார்களா ? இல்லையா ? ......... இருக்கிறர்கள் ! அப்படி அனைத்து சாதியினரும் அங்கே கட்சி பாகுபாடிலாமல் தலித்தை எதிர்ப்பதற்கு..... ஒன்ரிணைவதால்தான் தமிழகம் முழுவதும் உள்ள சாதிய தலைவர்களை அவர்களால் ஒன்றிணைக்க முடிகிறது . இதில் கவனிக்க வேண்டியதும்,காரியமாற்ற வேண்டியதும் இவற்றை கருத்தில் கொண்டுதான் ........ எப்படி தேடியும் பதில் கிடைக்காத இந்த புதிரை உடைக்காமல் பட்டிமன்றமோ , கருத்தரங்கமோ ,கவியரங்கமோ நடத்தி பயனில்லை !இவற்றை அனைத்து கட்சியினரும் உணருவார்களா ? இதை போக்க அவர்கள் உடன்படுவார்களா ? இதுதான் நம்முன் இருக்கும் சவால் ! கருத்தரங்கம் நடத்தும் கட்சியிலிருந்து சாதிவெறியை தூண்டி அனைத்து சாதி தலைவர்களையும் ஒரே மேடையில் அமர்த்தும் கட்சி வரை அந்த தகுதி இல்லை ! கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் இதை கையில் எடுக்க முடியும் இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் , கலப்பு மணம் புரிவோரும் ,சாதி மறுப்பவரும் ..சாதி மறுப்பு திருமணங்கள் நடந்து முடிந்த பிறகு தனக்கு பிறக்கும் குழந்தைக்கு சாதி இல்லைஎன்றோ, சாதி அடையாள மற்றவராகவோ வாழ முடிகிறதா ? என்பதை யோசிக்கவேண்டும் ! அதனால் அகமண முறை சரியென்று அர்த்தமல்ல ....அதை கடை பிடிப்பதற்கும் ,அதை எதிர்த்த போராட்டத்தை நடத்துவதற்கு ஒரு சாத்திய வட்டத்துக்குள் இருக்கும் சாதிய கட்சிகளால் நடத்த முடியாது , அதுவும் கம்யூனிஸ்டுகளால் மட்டுமே சாத்தியம் ! தர்மபுரி ,சேத்தியாதோப்பு சென்னிநத்தம் ,சிறுவத்தூர் இந்த வன்முறைகளுக்கும் கோகிலா --கார்த்திகேயன் வேறானது ! ஒடுக்கப்பட்ட சாதிக்குள்ளும் சாதிய படிமம் ஒருங்கமைக்கபட்டுள்ளது அதில் ஆட்டம் காணும்போது சாதி இந்துக்களிடம் என்ன விளைவுகள் ஏற்படுகிறதோ அதே விளைவுகள் ஒடுக்கப்பட்ட சமூக்கத்துக்குள்ளும் நடக்கிறது அதில் ஒரு எள்ளளவும் வித்தியாசமில்லை என்பதுதான் ,பள்ளிநேலியனூர் நமக்கு உணர்த்தும் பாடமாகும் ! "எதையுமே படிக்காத பாமரத் தலித்துகள் ஜாதி பார்ப்பதில்லை எனவும், தங்களுக்கு யார் வேண்டுமானாலும் பெண் தரலாமென்றும் தங்களிடமிருந்து யார் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்று வீர வசம் பேசுவதை விட்டுவிட்டு கம்பீரன் போன்றோர் தங்கள் தளத்தில் தலீத் மக்கள் களத்தில் இறங்கிமாற்றம் காண போராடவேண்டும் .திராவிட இயக்கங்களோடும் ,இடதுசாரிகளோடும் இணைத்து கை கோர்த்து போராடுவதுதான் இன்றைய அவசிய அவசரம் ! நன்றி ! க. மணிவண்ணன் . புதுச்சேரி
வணக்கம் சார்.
ReplyDeleteமிக நீண்ட பதிவு சார்.
சில சந்தேகங்கள் சார்
1. திலகர் அப்படி செய்தது உண்மையா ? எனக்கு தெரியாதால் தான் இந்த சந்தேகம்.
2.//மருத்துவம் படித்தவரும்//-திரு.ராமதாசு மருத்துவரா ? அவரிடம் மருத்துவ பதிவு எண் இருக்கிறதா ? இருக்காது.
3. //300 கான்க்ரீட் வீடுகள். சுத்தமாய் இடித்திருக்கிறார்கள்// - எப்படி ? உண்மையா ?
அன்புடன் பாலாஜி
மிக்க நன்றி பாலாஜி.
Deleteஉங்களது எல்லா கேள்விகளுக்கும் “ஆமாம் “ என்பதுதான் பதில்
துரதிர்ஷ்ட வசமாக சில "கலப்பு மணங்களில்" மணம் புரிந்த ஆண் மிகுந்த சாதிப் பற்றுள்ளவராக, தன் சுயசாதி பெருமை பேசுவோராக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இப்படி பல திருமணங்களில் பெண் மட்டுமே தன சாதியைத் துறந்திருக்கிறாள். இதில் சாதி மறுப்பு எங்கே வருகிறது? சாதி மறுப்பு திருமணம் பெரும்பாலவரது வரவேற்பைப் பெற வேண்டுமெனில் ஆணும பெண்ணும் இருவருமே தங்களை சாதி அற்றவராக அறிவிக்க வேண்டும். அரசும் இவர்களுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை வழங்கவேண்டும்.அது வரை இது போன்ற திருமணங்கள் "சாதி மாறிய திருமனங்களாக" இருக்குமே ஒழிய சாதி மறுப்பு திருமனங்களாக இருக்க இயலாது...
ReplyDeleteஆமாம் ஜோஷி
Deleteமுயற்சிப்போம்.
மிக்க நன்றி
நமது முதல்வரிடம் சொன்னால் நாளையே உங்களது எண்ணம் சட்டமாக போகிறது
ReplyDeleteஇதற்காக அவர் எந்த முயற்சியையும் எளிதாக செய்வர் என்றே தோன்றுகிறது
முயற்சித்து பார்க்கலாமே
செய்டா அலாய்
Deleteவலிமையான பதிவு தோழா
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete“எங்கள்
ReplyDeleteதேசத்தில்
கொசுவையும்
ஜாதியையும்
ஒழிப்பதற்கு ஏதுமில்லை”...
ஒரு கிறிஸ்தவர் இஸ்லாமியராகவோ இந்துவாகவோ சட்டப்படி மாறலாம். ஒரு இந்துவும் அப்படியே இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ மாற் முடியும். ஒரு இஸ்லாமியர் நினைத்தாலும் உடனடியாக இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ மாறிவிட முடியும். ஆனால் என்ன செய்தாலும் ஒரு தலித் அய்யராகவோ செட்டியாராகவோ அல்லது வேறு உயர்ந்த சாதிக்காரராகவோ மாற முடியாது.
intha muyarchikku ennudaya pangum undu
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஐயா,
ReplyDeleteதங்களின் இந்த பதிவு மிகவும் சிறப்பானது,தற்பொழ்து படமெடுத்து ஆடும் நச்சரவை உடனடியாக அடக்கவேண்டும் அதற்கு
“கலப்பு மண சுயம்வரங்களை ஏற்பாடு செய்து ஊக்குவிக்க வேண்டும்”.
நிச்சயம் இதனால்தான் சாதி ஒழிப்பு கைகூடும். தங்களின் இந்த கருத்திற்கு நானும் உடன்படுகிறேன்.
முதலில் என்னை மன்னிக்கவும் தங்களது புத்தக வெளியிட்டு விழாவிற்கு வராததற்க்கு.ஏனேனில் அன்று நான் இடிந்தகரைக்கு சென்றுவிட்டதால் வரமுடியவில்லை அய்யா.
ReplyDeleteதமிழ்தேசியத்தொடு பலருக்கு முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் அதன் தேவை இன்று வேண்டியிருக்கிறது.அது மட்டுமில்லாமல் தமிழ்தேசியம் பேசும் சிலர் சாதியை தூக்கிபிடிப்பதால் உடனே தமிழ்தேசியம் சாதியை ஆதரிப்பதுமாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்க சிலர் முயலுவது என்பது எப்படி திராவிட மற்றும் மார்க்சிய தலைவர்கள் சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த திராவிடத்தையும்(பெரியார் எதிர்ப்பு) மார்க்சியத்தையும் குற்றம் சொல்கிறார்களோ அது போலவே. தமிழ் தேசியமா?அல்லது சாதி ஒழிப்பா? என்பதே தேவை இல்லாதது தமிழ்தேசியம் என்பதே சாதிகள் அற்ற ஒரு தேசியம் தான்.பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் இந்த விசத்தை (சாதிதான்)என்னமோ தமிழ் தேசியம்தான் கட்டி காப்பது மாதிரியான ஒரு தோற்றத்தை அய்யா சுப.வீ செய்வது வருத்தம் அளிக்கிறது.
மற்றபடி உங்கள் அனைத்து கருத்துக்களிலும் உடன்படுகிறேன்.அருமையான மற்றும் தேவையான கட்டுரை.
சாதியை வெல்ல புறப்படுவோம்
அண்ணலின் வழியே,பெரியாரின் வழியே.
வேரறுப்போம் சாதியை வென்றேடுப்போம் சாதிகள் இல்லாத புது பூமியை !!!
மிக்க நன்றி தோழர்
Deleteநூலை வாசித்து சொல்லுங்கள் தோழர்
Arumaiyaana pathivu nanbare.......
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteசாதி, மதம், அரசியல் எல்லாம் சேர்ந்து
ReplyDeleteகொசு ஒழித்தால் தேவலாம்.
கொசு, சாதி, இலஞ்சம், ஊழல் , மதம் இதெல்லாம் இந்த தேசத்தின் அடையாளங்களாகவும் வறுமையும், வாக்கு வங்கி போன்றவை இதன் அழிபடாத எழுத்துக்களாகவும் ரேகைகளாகவும் இருக்கும் காலத்தில் இதைக் கடக்கும் நபர்களும், கடந்த நபர்களும் இருக்கிறோம்
ஆனால் நாம் நம்மால் முடிந்த அளவு முடிந்த வகையில் எதிர்ப்பை பதிவதே அழகு. மிக்க நன்றி தோழர்
Deleteஇப்பொழுதுதான் இக்கட்டுரையை காக்கையில் வாசித்தேன் தோழர். சாதியொழிப்பாளர்கள் உடனடியாகவும் தொலைநோக்கோடும் செய்யவேன்டியவைகளை சரியாக பதிந்திருக்கிறீர்கள் தோழர். குறிப்பாக தோழர் கம்பீரனின் கூற்றிலிருக்கும் கூர்மையை அப்படியே இக்கட்டுரையில் வார்த்திருக்கிறீர்கள் தோழர்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமிக அர்த்தமுள்ள பதிவு. வாழ்த்துக்கள்
ReplyDelete"எங்கள்
ReplyDeleteதேசத்தில்
கொசுவையும்
ஜாதியையும்
ஒழிப்பதற்கு ஏதுமில்லை"
என்ன தான் பட்டபடிப்பு , பட்டமேற்படிப்பு , பொறியியல், மருத்துவம் இப்படி எதை படிச்சு முடிச்சு வந்தாலும் அந்த சாதியில் தான் பெண்ணோ, பையனையோ தேடுகின்றனர், படிப்பு எல்லாம் பொருளாதாரத்தை பெருக்கி கொள்ளத்தான் பயன் படுத்துகின்றனர்,தவிர பண்பை வளர்த்து கொள்ளவோ அல்லது சமூக ஏற்ற தாழ்வுகளை சீர் தூக்கி பார்க்கவோ நினைப்பதில்லை இவ்வளவு பேர் படித்து என்ன பயன்....?
நல்ல பதிவு......
ReplyDeleteஎன்ன தான் பட்டபடிப்பு ,பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம் இப்படி என்ன தான் படித்து முடித்தாலும் அந்த சாதியிலேயே தான் பெண்ணோ பையனையோ தேடுகின்றனர், கற்ற கல்வி எல்லாம் பொருளாதராத்தை பெருக்கி கொள்ளவே தான் பயன்படுத்துகின்றனர் மாறாக பண்பைவளர்த்து கொள்ளவோ , அல்லது சமூக பொருளாதார ஏற்ற தாழ்வுகளை சமமாக பார்க்க எண்ணுவதில்லை பிறகு கல்வி கற்று என்ன பயன்............?
மிக்க நன்றி தோழர்
Deleteஆனால் இவை எல்லாம் கடந்து சாதிவெறியர்களைத் தண்டிக்க வேண்டி அழுத்தமான நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும்.
ReplyDeleteகவனம் குவிப்போம்...// நிச்சயமாக ..நல்ல பகிர்வு நண்பரே ..
மிக்க நன்றி தோழர்
Deleteஇன்றைய மனிதன் தன்னை வெறும் நுகர்வோனாக மட்டுமே செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறான். அதிகமாக நுகர்வோனாக இருப்பதற்கு தனித்தனியாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறான். கூட்டு வாழ்க்கையே சாத்தியமாவதில்லை. ஆகவே கூடிவாழ்வதென்பது கனவாகிப் போவதாயுள்ளது. இப்படியான தனியர்களின் வாழ்வு மானிடச் சிந்தனைகளை வளர்த்தெடுக்காது. நாம் யார் என்னும் தேடலுக்கு விரிவான விடையைத் தராது. உடனடி விடையாக தனது பிறப்பு உரித்துடையவர்களின் உறவையும் தனது ஊர் சார்ந்ததான உணர்வையும்தான் இவர்களால் கண்டுணர முடியும். மிஞ்சிப் போனால் தாம் படித்த கல்லூரி வரையிலான அடையாளமிடலைத்தான் இவர்களால் இனங்காண முடியும். பரந்த விரிவான தளத்தில் இருக்கும் தமிழர் என்றதொரு உயிர்ப்பான அடையளத்தில் இவர்களால் விரிந்திருக்க முடியாது. அதற்கு பரந்த மனப்பாங்கு வேண்டும். இப்படியாக குறுக்கிய சிறியதான தத்தமது சாதியத் தளச் சிந்தனைகளுக்குள் முழ்கித் திணறும் பிரதிநிதிகளான இவர்கள் தங்களது கொடூரச் செயல்களையும் வக்கிரமான வெளிப்பாடுகளையும் புரிவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் தாம் செய்யும் செயலை தமிழ் மீதும், தமிழர் என்றதொரு பொதுத் தளத்தின் மீதும் கறையைக் கொட்டுவதுதான் சோகத்திலும் சோகமானது. மனிதச் சிந்தனைத் தளத்தில் மேலோங்கும் அறிவியற் கல்வியும், மானுடவியல் உலகப் பொது அறிவியலும் புலம்ப்படுத்தப்படல் வேண்டும். மானிட அறம் மேலோங்க அயராது பாடுபாட வேண்டும்!! இலக்கியங்கள் நிறையவே தொண்டாற்ற வேண்டும். இவை மனிதனின் அகமனத்தில் சிக்குண்டுள்ள கறைகள். சிந்தனைத் தளம் விரிவடையதது மாறுதல் நிகழாது!!
Deleteமிக்க நன்றி தோழர் முகிலன்
Deleteஇதற்க்கு புரட்சி தேவை இல்லை, புரிதலும் குறைந்தபட்ச மனிதமும் மட்டுமே போதும்.
ReplyDeleteநல்ல பகிர்வு திரு. இரா. எட்வின்
மிக்க நன்றி தோழர்,
Deleteஆனாலும் புரிதலும் மனிதமும் கூட புரட்சியில் தான் விளையும்போல தோழர்
மிக விரிவான பதிவு...முதலில் இங்கு தலித் எதிர்ப்பு ஒரு சில ஜாதியினர் மத்தியில் மிக அதிகமாக உள்ளது,,அதற்குக் காரணம் அவர்களிடையே ஊறிப்போன ஆண்டான்-அடிமை மனோபாவம் தான்..அது குழந்தைப் பருவத்திலேயே அவர்களிடம் ஆழமாக விதைக்கபடுகிறது...இதற்கு காரணம் பெண்ணையும் அவர்களின் சொத்தாகக் கருதுவதுதான்..தங்கள் சொத்து வேறு ஜாதியினர் கையில் போகக்கூடாது என்று கருதுகின்றனர்..இதற்க்கு மிகப்பெரிய உதாரணம் கொங்கு மண்டலம்...
ReplyDeleteஆனால் இப்பொழுது அந்த வர்க்க பேதம் நகரங்களில் குறைந்து விட்டாலும் ஜாதிபித்து இன்றும் குறையவில்லை..இன்றும் சென்னையில் பிராமணர்களுக்கு மட்டும் வடகைவிடும் வீடுகள் இருக்கின்றன,,,
தற்போது வெளியான "சுந்தரபாண்டியன்" படத்தில் அப்பட்டமான தேவர் ஜாதி பெருமை காட்டபட்டிருக்கும்...
தமிழ்நாட்டில் கல்வித்தரம் உயர்ந்தாலும் வெறும் தொழில் ரீதியான படிப்பாகவே உள்ளது..எண்பது, எழுபதில் இருந்த புரிதல் இன்று இல்லை..முன்பு கட்சிகள் இருந்த கல்லூரிகளில் இன்று ஜாதிகள் இடம் பிடித்துவிட்டது...கட்சிகளிலாவது குறைந்தபட்சம் சித்தாந்த ரீதியான கொள்கை இருந்தது ஆனால் இப்போது..என்ன செய்வது சார் நான் அறிஞர்களாக அறிந்த பழ. கருப்பையாவும், சுப.வீயுமே இப்படி பேசும்பொழுது யாரை நோவது??
மீண்டும் ஒரு சமூக போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது...ஆனால் மக்கள் மனதும், ஊடகமும், கட்சிகளும் அதற்கு ஆயதமகவேண்டும்...செய்வர்களா அவர்கள்???
மக்கள் பிரிந்திருந்தல்தானே அவர்களுக்கு நல்லது...
-வி.தினேஷ் குமார்
மிக்க நன்றி தினேஷ்
Deleteமிக விரிவான பதிவு...முதலில் இங்கு தலித் எதிர்ப்பு ஒரு சில ஜாதியினர் மத்தியில் மிக அதிகமாக உள்ளது,,அதற்குக் காரணம் அவர்களிடையே ஊறிப்போன ஆண்டான்-அடிமை மனோபாவம் தான்..அது குழந்தைப் பருவத்திலேயே அவர்களிடம் ஆழமாக விதைக்கபடுகிறது...இதற்கு காரணம் பெண்ணையும் அவர்களின் சொத்தாகக் கருதுவதுதான்..தங்கள் சொத்து வேறு ஜாதியினர் கையில் போகக்கூடாது என்று கருதுகின்றனர்..இதற்க்கு மிகப்பெரிய உதாரணம் கொங்கு மண்டலம்...
ReplyDeleteஆனால் இப்பொழுது அந்த வர்க்க பேதம் நகரங்களில் குறைந்து விட்டாலும் ஜாதிபித்து இன்றும் குறையவில்லை..இன்றும் சென்னையில் பிராமணர்களுக்கு மட்டும் வடகைவிடும் வீடுகள் இருக்கின்றன,,,
தற்போது வெளியான "சுந்தரபாண்டியன்" படத்தில் அப்பட்டமான தேவர் ஜாதி பெருமை காட்டபட்டிருக்கும்...
தமிழ்நாட்டில் கல்வித்தரம் உயர்ந்தாலும் வெறும் தொழில் ரீதியான படிப்பாகவே உள்ளது..எண்பது, எழுபதில் இருந்த புரிதல் இன்று இல்லை..முன்பு கட்சிகள் இருந்த கல்லூரிகளில் இன்று ஜாதிகள் இடம் பிடித்துவிட்டது...கட்சிகளிலாவது குறைந்தபட்சம் சித்தாந்த ரீதியான கொள்கை இருந்தது ஆனால் இப்போது..என்ன செய்வது சார் நான் அறிஞர்களாக அறிந்த பழ. கருப்பையாவும், சுப.வீயுமே இப்படி பேசும்பொழுது யாரை நோவது??
மீண்டும் ஒரு சமூக போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது...ஆனால் மக்கள் மனதும், ஊடகமும், கட்சிகளும் அதற்கு ஆயதமகவேண்டும்...செய்வர்களா அவர்கள்???
மக்கள் பிரிந்திருந்தல்தானே அவர்களுக்கு நல்லது...
-வி.தினேஷ் குமார்
Very good article .
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteசாதிவெறியர்கள் பற்றி எரியுமாறு பதியப்பட்ட இப்பதிவு ஒரு காலச்சுவடு அல்ல கல்வெட்டு ..!!!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteசாதிவெறி பற்றி எரிய்ம் இக்கட்டுரை ஒரு காலச்சுவடு அல்ல கல்வெட்டு வாழ்த்துக்கள் ஐயா ..!!!
ReplyDeleteமிக்க நன்றி தோழர். அருள்கூர்ந்து முகம் காட்டுங்கள் தோழர்.
Deleteநான் ஒரு ஈழத்தவன், சாதியால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு முன்பே ஈழப் போராட்டம் வலுத்துவிட்டது. அதனாலோ என்னமோ அக்கறையும் இருந்ததில்லை; இப்பொழுதும் சாதியை அறிவுத்தேடலாகத்தான் பார்க்கிறேன்...
ReplyDeleteதெளிவான அறிவுத்தேடலுக்கு உதவியதில் உங்களுக்கும் நன்றி அண்ணா!
மிக்க நன்றி தோழர்.
Deleteநான் ஒரு இலங்கைத் தமிழன், சாதியால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு முன்பே ஈழப் போராட்டம் வலுத்துவிட்டது. இன்று வரை சாதியை அறிவுத்தேடலாக மட்டுமே பார்க்கிறேன்..!
ReplyDeleteஉங்கள் எழுத்துக்கள் கொஞ்சம் உதவியது; நன்றி அண்ணா!
மிக்க நன்றி தோழர்
DeleteHow do we end perpetuation of these differences , Read the success story of Kuthambakkam Rangasamy Ilango . Hats off for the good post
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteengengu kaaninum saathiyada ...http://alexmenon.blogspot.in/2014/01/blog-post.html#.UzM7zvmSy2U
ReplyDeletedue to time constraint,didnt come to ur page for long time.. this article really each and every word will slap humans with strong force that coming out from its impact will be very difficult.. ya,at public place,speeches insticating casteism are still happening shamelessly without getting stopped.. cannot forget your words.. it will ring in ears for years..
ReplyDelete