பாஜக வலையில் விழுந்த ஷிண்டே ஆட்சியைக் கவிழ்க்கிறார்.
ஒருமுறை அதுகுறித்து பேசும்போது,
சிவாஜி உடனிருந்த பார்ப்பான் அவருக்கு துரோகம் இழைத்ததைப்போல ஷிண்டே தனக்கு துரோகம் இழைத்திருப்பதாக உத்தவ் தாக்கரே கூறினார்
தமிழ்நாட்டில் இருக்கிற பார்ப்பன வெறுப்பு மகாராஷ்டிரத்திலும் நுழைந்துவிட்டதாகவும். தாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் பேசவும் எழுதவும் ஆரம்பித்தார்கள்
மொழி விஷயத்திலும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் மகாராஷ்ட்ரா தமிழ்நாட்டைப் பின்தொடர்கிறது
மும்பையை , மகாராஷ்டிரத்தை அம்பானி அதானி கைகளில் தாரைவார்க்கும் அரசுகளின் சூழ்ச்சியை மாராத்திய மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்
அங்கு வாழும் தமிழ் மக்களும் தங்களை மாராத்திய மாநிலத்தவராகவே கருதவும் ஆர்ம்பித்திருக்கிற அழகான சூழல்
இது சங்கிகளுக்கு எதிரான நிலை
இவர்கள் மொழிசார்ந்து மக்கள் அடித்துக்கொண்டு சாக ஆசைப்படுபவர்கள்
அதனால்தான் ஏறத்தாழ தமிழ்நாட்டு பிரஜைகளாகவே தங்களை பொருத்திப்பார்க்கிற தமிழ்நாட்டுவாழ் பீகார் மக்களுக்கும்
அவர்களை தம் சகோதரர்களாகவே பாவிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பகையை விதைத்ததுபோல
மகாராஷ்ட்ராவிலும் ஒரு கலவரத்தை உண்டுபண்ண முயற்சிக்கிறார்கள்
மும்பை மகாராஷ்டிரா நகரம் அல்ல என்று சொன்ன அண்ணாமலைக்கு
1950களில் நடந்த "samyukta maharashtra movement" பற்றி எல்லாம்
அந்த போராட்டத்தில் உயிரிழந்த 106 தியாகிகள் குறித்தெல்லாம்
இந்த பிரச்சினையில் தனது ஒன்றிய நிதி அமைச்சர் பதவியை தேஷ்முக் ராஜினாமாசெய்ய நேர்ந்தது குறித்தெல்லாம்
எதுவும் தெரியாது.
அவர் வாசித்த இருபதாயிரம் புத்தகங்களில் இவை குறித்து எதுவும் இல்லை
பிரியத்திற்குரிய உத்தவ் அவர்கள் கொதிப்படைந்து வார்த்தைகளை விட வேண்டாம்
பீகாரிகள் பிரச்சினையை தமிழ்நாடு கையாண்ட சாதுர்யம் உங்களுக்கு வெளிச்சம் காட்டும்
13.01.2026
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்