Sunday, January 11, 2026

 

எங்கள் ஊருக்கு மேற்கே இருந்த கருணைகிரிப் பெருமாள் கோவிலை

கோவிலுக்கு மேற்கிலும் ஊர் விரிந்தபோது
ஊருக்கு கிழக்கே இருப்பதாய் 
மேட்டு உசிலைத் தெருக்காரன் 
ஒருவன் சொல்ல


பெருமாள் இருக்கும் திசை குறித்து பஞ்சாயத்தானது 

ஒரு நல்ல மனுஷன்
சாமி மேற்கயும் இல்ல கிழக்கயும் இல்லையென்றும்
ஊருக்குள்ளதான் இருப்பதாகவும் சொன்னார்

ஆகா,
ஊருக்கு மேற்கே இருந்த சாமி ஊருக்குள்ள குடியேறியாச்சு

ஊருக்கு 
ஒதுக்குப் புறமா இருக்கும்
நாங்கள் எப்போது
 ஊருக்குள் குடியேறப் போறோம்?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...